Thursday, January 18, 2018

சபரிமலையில் நெய்யபிஷேகம் இன்றுடன் நிறைவு

Added : ஜன 18, 2018 05:17



சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது.

சபரிமலையில் டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று (ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும்.

ஜன.19-ம் தேதிஅதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 10:00மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதும் பக்தர்களுக்கான மகரவிளக்கு கால தரிசனம் நிறைவு பெறும்.

20-ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும். அதன் பின் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...