Wednesday, April 4, 2018

மாட்டு தொழுவமாக மாறிய பெரம்பலூர் தாலுகா ஆபீஸ்

Added : ஏப் 03, 2018 23:18

பெரம்பலுார்: பெரம்பலுார் தாலுகா அலுவலகம், மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பெரம்பலுார் நகரில், பெரம்பலுார் தாலுகாவுக்கான ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்குள், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆதார் கார்டு சேவை மையம் என பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கவும், நிதியுதவி பெறவும் என, தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை மிகவும் பரபரப்பாகவும், ஆட்கள் நடமாட்டத்துடன் இந்த வளாகம் இருப்பது வழக்கம்.சில நாட்களாக, பெரம்பலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, மூன்று மாடுகள் மற்றும் கன்றுகளை, பெரம்பலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் கட்டிப் போட்டு, தாலுகா அலுவலகத்தை மாட்டு தொழுவமாக மாற்றி உள்ளார். மாலை, 5:00 மணிக்கு இங்கு கட்டப்படும் மாடுகள், மறுநாள் மதியம், 12:00 மணி வரை, மேய்ச்சலுக்கு செல்லும் வரை, இங்கேயே உள்ளன.சில நேரங்களில், மாடுகளை கட்டாமலே, விவசாயி விட்டு செல்கிறார். இதனால், இஷ்டத்துக்கு உலா வரும் மாடுகள், அங்கு வரும் பொதுமக்களை முட்டுவது போல பயமுறுத்துகின்றன. இது குறித்து, பெரம்பலுார், தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; தவறான தகவல்,'' என்றார்.

No comments:

Post a Comment

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps  Diabetes management often feels like a battle due to common life...