Monday, April 16, 2018

திருமலை காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு பொங்கலுடன் சட்னி

Added : ஏப் 16, 2018 05:12

திருப்பதி: திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில், பொங்கல் மற்றும் உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகளுடன், சட்னி வழங்கும் நடைமுறையை, தேவஸ்தானம் துவங்கி உள்ளது.திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம், 24 மணிநேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளிலும், அன்னதானம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல், ரவை, சேமியா உப்புமா உள்ளிட்டவை வழங்கும் போது, அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும்' என, மாதந்தோறும், குறைகேட்பு நிகழ்ச்சியில், பக்தர்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையேற்று, தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொங்கல் மற்றும் உப்புமா சிற்றுண்டிகளுடன், வேர்கடலை சட்னி வழங்கும் நடைமுறையை துவங்கி உள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.தற்போது, தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், தமிழ் புத்தாண்டு முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதனால், இதற்கு முன் தர்ம தரிசனத்தில், 3 மணிமுதல், 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வந்த பக்தர்கள், தற்போது, 15 மணிநேரம் காத்திருக்கின்றனர்.எனவே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களின் காத்திருப்பு சிரமத்தை குறைக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கு, விரைவில், நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...