Sunday, April 15, 2018

தி.மலையில் சித்ரா பவுர்ணமியன்று அன்னதானம் வழங்க கட்டுப்பாடு

Added : ஏப் 15, 2018 00:47

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, அன்னதானம் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை யொட்டி, 29 இரவு கிரிவலம் செல்ல, 15 லட்சம் பக்தர்கள் வருவர். சித்ரா பவுர்ணமியன்று அன்னதானம் வழங்குவோர், 16 முதல், 25ம் தேதி வரை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர், கிரிவலப்பாதையில் உணவு சமைக்க அனுமதியில்லை. சுகாதாரமான முறையில், வெளியிலிருந்து சமைத்து, எடுத்து வரப்படும் உணவுகளை மட்டுமே, பக்தர்களுக்கு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

உணவு வழங்குவதற்கு இலைகள், பாக்கு மட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காஸ் சிலிண்டர், விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகளை, கிரிவலப்பாதை யில் பயன்படுத்தக்கூடாது. அன்னதானம் வழங்கி முடித்ததும், அதற்கான அனுமதி பெற்றவர்கள், முறையாக அந்த பகுதியை, துாய்மைப்படுத்த வேண்டும். அனுமதியின்றி, அன்னதானம் வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...