Monday, April 16, 2018


'ஓபி' அடிக்கும் அதிகாரிகள்  தலைமை செயலர் கோபம் 


dinamalar 16.04.2018

'தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் சரியாக பணிக்கு வருவதில்லை; பணி நேரத்தில், அலுவலகத்தில் இருப்பதில்லை' என, பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலைமை செயலகத்திலும், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது, நிர்வாகத்தை பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்து உள்ளது, உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்த, துறை செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.



இதைத் தொடர்ந்து, தலைமை செயலர், துறை செயலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், 'அலுவலகங்களுக்கு, அதிகாரிகளும்,

பணியாளர்களும், உரிய நேரத்துக்குள் வருவதையும், அலுவலக நேரத்தில், அவர்கள் பணியில் இருப்பதையும், உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...