Wednesday, September 26, 2018

ரேஷன் அட்டையில் நாய் பெயர் சேர்ப்பு

Added : செப் 25, 2018 23:55

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ரேஷன் அட்டையில், வளர்ப்பு நாயின் பெயரை சேர்த்து, பொருட்கள் வாங்கியது, 'ஆதார்' கார்டால் அம்பலமானது. ம.பி.,யில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த, நிருசிங் போதர், 70, என்பவரது ரேஷன் அட்டையில், மனைவி மற்றும் வளர்ப்பு மகன் ராஜு என, மூன்று பெயர்கள் இடம் பெற்றிருந்தன. சமீபத்தில், 'ரேஷன் அட்டையுடன், அதில் உள்ள நபர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, நிருசிங்கிடம், ரேஷன் கடை ஊழியர் கூறினார். இதையடுத்து, நிருசிங் மற்றும் அவரது மனைவியின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டன. ஆனால், ராஜுவின் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. 

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர், நிருசிங்கிடம் கேட்டபோது, ராஜு, தன் வளர்ப்பு நாய் என, அவர் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி, அனுராக் வர்மாவுக்கு, தகவல் தெரிவித்தார். ரேஷன் அட்டையில் உள்ள நாயின் பெயரை நீக்க, வர்மா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

SC agrees to hear plea against UGC’s new equity regulations

SC agrees to hear plea against UGC’s new equity regulations  New Delhi : 29.01.2026 Supreme Court on Wednesday agreed to list for hearing a ...