Wednesday, September 26, 2018


ரயில்வே ஊழியர்களுக்கு இலவச விமான பயணம்

Added : செப் 26, 2018 04:27

மொராதாபாத்: ரயில்வே ஊழியர்கள், குடும்பத்துடன் இலவச விமான பயணம் மேற்கொள்ள, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.ரயில்வேயில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு மூன்று முறை, குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வர, இலவச ரயில், 'பாஸ்' வழங்கப்படுகிறது.புதிதாக பணியில் சேர்ந்த நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு, படுக்கை வசதி உண்டு.மற்ற ஊழியர்களுக்கு அவரவர் சம்பள விகிதத்தை பொறுத்து, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' மற்றும் இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில் பயணிக்க, இலவச, 'பாஸ்' வழங்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு, குடும்பத்துடன் ஆறு முறை பயணம் செய்ய, இலவச பாஸ் வழங்கப்படுகிறது.இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், விமானத்தில், குடும்பத்துடன் இலவசமாக சென்று வருவதற்கு, ரயில்வே அமைச்சகம், நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து, ரயில்வே வாரிய உதவி இயக்குனர், முரளிதரன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், குடும்பத்துடன் விமானத்தில், இலவசமாக சென்று வரலாம். அதற்கு, அவர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்படும் மூன்று இலவச ரயில்வே பாசை விட்டுத் தர வேண்டும்.நாட்டின் எந்தப் பகுதிக்கும், விமானத்தில் சென்று வரலாம். விமான பயணம் செல்ல விரும்பும் ஊழியர்கள் அல்லது அதிகாரிகள், விண்ணப்பித்து, இலவச விமான பயணத்துக்கான, 'பாஸ்' பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...