Wednesday, September 26, 2018


காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைவதில்...சிக்கல்!நிலத்தை பயன்படுத்தியவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

Updated : செப் 25, 2018 23:31 | Added : செப் 25, 2018 23:28

காஞ்சிபுரம்;காஞ்சிபுரத்தில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க, அரசு, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இடத்தை தேர்வு செய்துள்ளது. ஆனால், அந்த இடத்தை அனுபவித்து வந்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரை சுற்றிலும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வாகனங்களும் பெருகி விட்டன. தற்போது உள்ள பேருந்து நிலையம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அப்போது உள்ள வாகன போக்குவரத்திற்கு இது, வசதியாக இருந்தது. பின், குடியிருப்புகள் அதிகரித்தன. இதனால், இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் பல மடங்கு அதிகரித்து விட்டன.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் நெரிசல் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அன்றாடம் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, அரசு புதிய பேருந்து நிலையம் கட்ட, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பித்தது.

இதை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் கட்ட, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில், 10.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை, பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தவர்கள், பட்டா வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்தில் பல முறை முறையிட்டனர். பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்,அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, இரு மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் அமைக்க, சர்வேயர் மூலம் அளந்தனர். அப்போது, அந்த நிலத்தை பயன்படுத்தி வந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப் படுகிறது. 

அவர்களில் ஏழு பேர், நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரும், புதிய பேருந்து நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் கூறியதாவது:புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான இடத்தை நாங்கள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். அதற்கான பத்திரம் எங்களிடம் உள்ளது.பட்டா வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டோம்; பலன் கிடைக்க வில்லை. அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, நிலத்தில் கட்டுமான பணி நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளோம்.எங்களுக்கு பட்டா கொடுத்த பின், அந்த இடத்தை பேருந்து நிலையம் கட்ட எடுத்து கொள்ளட்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வர் அறிவித்த புதிய பேருந்து நிலைய பணி துவங்குவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், சிலர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை எதிர் கொண்டு தீர்ப்புக்கு பின், அதற்கான பணியை துவங்குவோம். இதனால் சிறிது காலதாமதமாகிறது.நகராட்சி அதிகாரி ஒருவர், காஞ்சிபுரம்

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...