Monday, June 5, 2017

தங்கும் அறையே முன்கூட்டியே காலி செய்தால் பணம் திரும்ப தரப்படும் : திருப்பதி தேவஸ்தானம்

TNN | Updated: Jun 4, 2017, 04:39PM IST




திருப்பதி : தங்கும் அறையை முன்கூட்டியே காலி செய்தால் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பணம் திரும்பதரப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிகமுக்கியமான கோவில் ஆந்திராவில் அமைத்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு தரிசனம் செய்ய வரும் மக்கள் தங்க திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான விடுதிகளை கட்டியுள்ளது.

இந்த தேவஸ்தான விடுதிகளில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலுக்கு வர இயலாமல் போகும் பக்தர்கள், அல்லது தங்களது வருகையை தள்ளிப்போடும் பக்தர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், தங்கும் அறைகள் எடுத்து தங்குவோர் 12 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 50 சதவீதமும், 6 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 25 சதவீதமும் பணம் திருப்பி தரப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Kerala CM writes to PM Modi; urges to ensure safety of Indians in Qatar

Rajiv G| TNN | Jun 5, 2017, 09.12 PM IST

THIRUVANANTHAPURAM: Chief minister Pinarayi Vijayan has written to Prime Minister Narendra Modi and foreign minister Sushma Swaraj urging to take effective steps to ensure the Indians who are working in Qatar.

He said that there are 6.5 lakh Indians in Qatar and of which three lakhs are Keralites. With the countries in the middle-east cutting off diplomatic ties with Qatar, the chief minister said the Indians working there are more concerned.

It is learnt that the countries have also cancelled all the flights to the country. Hence the Centre should take urgent steps to ensure protection of the Indian there and necessary instructions should be given to the embassy in Doha, said the chief minister.

Meanwhile, the NORAK ROOTS have made it clear that there was no need for panic since no restrictions have been imposed on Qatar so far. ``The only worry will be that the flight services have been cancelled by four countries to Qatar. Otherwise the people especially the Indians working there will have no trouble,'' said B Gopakumaran Nair, general manager, NORKA.

He said that so far Saudi Arabia, UAE, Bahrian and Egypt have asked all the Qatar nationals to move out from their countries. They have also cancelled the flights to and from Qatar. Hence if there are any Indians working under Qatar nationals as their sponsors, they will be having trouble. Otherwise the people in Qatar are safe.

Being the month of Ramzan, the people at Qatar are worried that the new developments will escalate the prices of essential commodities. Qatar is highly depended on Saudi Arabia for essential commodities and hence this would be affecting the supply of it.

The NORKA officials said that the developments in the middle-east countries are being closely watched and if there is any need to interfere then it would seek the support of the Centre. ``At present there is no need for any panic as the situation is safe for the Indians there,'' said the general manager.
Six-month time to probe corruption cases against government employeesPTI | Updated: Jun 5, 2017, 06.57 PM IST

HIGHLIGHTS

Many cases against government staffs are pending for quite a long time
New rule has made it mandatory to finish all such cases within six months
Relaxations will be permitted on valid grounds

NEW DELHI: Changing an over 50-year-old rule, the government has set a deadline of six months to complete probe in corruption cases+ involving its employees.

The decision has been taken to speed up the investigation in such cases, most of them pending for quite a long time.

The department of personnel and training (DoPT) has amended Central Civil Services (Classification, Control and Appeal) Rules, 1965, and decided a timeline for critical stages of investigation and inquiry proceedings.

The Inquiring Authority should conclude the inquiry and submit its report within a period of six months, says the amended rules.

However, an extension for a period not exceeding six months at a time may be allowed for any good and sufficient reason to be recorded in writing by the disciplinary authority, it said.

Earlier, there was no such time frame to complete an enquiry.

The disciplinary authority shall deliver to a government servant, accused of irregularity and corruption, a copy of the articles of charge, the statement of the imputations of misconduct or misbehaviour and a list of documents and witnesses by which each article or charges is proposed to be sustained, the new rules said.

On receipt of such articles of charge, the government servant shall be required to submit his written statement of defence, if he so desires, and also state whether he desires to be heard in person, within a period of 15 days, it said.

The time limit can, however, be extended for a period not exceeding fifteen days. But under no circumstances, the extension of time for filing written statement of defence shall exceed forty-five days from the date of receipt of articles of charge, the rules said.

At present, there is no time limit for submission of the employee's statement of defence.

The new rules are applicable to all category of employees excluding those in all-India services--Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS) and Indian Forest Service (IFoS)-- and a few other categories of officers.

The Central Vigilance Commission (CVC), in a directive, had last year expressed serious concern over delay in finalising corruption cases and asked all departments to complete these inquiries within a maximum period of six months to keep away "nothing will change" notion associated with governance.

The directive comes after the commission noted that administrative authorities are not adhering to the time- schedule prescribed for completion of disciplinary proceedings.
காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

DINAKARAN

2017-06-05@ 19:25:11

சிவகங்கை: காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிற மொழி நீட் வினாத்தாளை தமிழாக்கம் செய்ய உத்தரவு !
June 5, 2017



நீட் தேர்வில் பிறமொழி கேள்விகளை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபா என்பவர் நீட் தேர்வு தொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தர வரிசை சீராக இருக்காது என்பதால் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் குஜராத்தி, இந்தி, மராத்தி வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிங்கப்பூரர்களுக்கு புதிய ஆறு மாத ஆஸ்திரேலிய விசா

Tamil Murasu

ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி செல்லும் சிங்கப்பூரர்களுக்குப் புதிய ஆறு மாத விசா கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியப் பிரதமர் மேல்கம் டர்ன்புல் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தின் முதல் நாளான நேற்றைய தினத்தன்று புதிய விசா குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. புதிய விசாவை எடுக்கும் சிங்கப்பூரர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒவ் வொரு முறையும் அங்கு மூன்று மாதங்கள் வரை இருக்கலாம்.
இந்த விசா சிங்கப்பூரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி செல்லும் சிங்கப்பூரர்கள் ஒரு சில மாதங்கள் கழித்து புதிய விசாவுக்காக மீண்டும் விண் ணப்பம் செய்யவேண்டிய நிலை இருக்காது. அதுமட்டுமல்லாது, 30 வயதுக் கும் குறைவான சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியாவில் ஓராண்டு வரை விடுமுறை மேற்கொண்டு கொண்டே வேலை செய்ய புதிய விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலை, விடுமுறை விசா திட்டம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ் வொரு நாட்டிலிருந்தும் 500 பேருக்கு விசா வழங்கப்படும்.

வீட்டுக்குள் ‘மூர்க்கப் பூனை’; போலிசை அழைத்த ஆடவர்

பொங்கோலில் உள்ள வீடு ஒன்றுக்குள் பின்னிரவு வேளையில் கறுப்புப் பூனை ஒன்று நுழைந்தது. அதை வெளியேற்ற முடியாமல் தவித்த அந்த வீட்டின் உரிமையாளர், போலிசுக்கு உதவி நாடி அழைப்பு விடுத்திருந்தார். பின்னிரவு 1 மணியளவில் திரு ஹர்ரிஸ் அபு பக்கரின் வீட்டுக்குள் புகுந்த பூனையை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெளியேற்ற முயன்றும் அது வெளியேறவில்லை. மாறாக அப்பூனை பயங்கரமாக கத்திக்- கொண்டு மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதுடன் தற்காப்புக்- காக தனது கால்களால் கீறிக் கொண்டே இருந்தது என்று திரு அபு பக்கர் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதி விட்டு இருந்தார்.
அந்தப் பூனையை வெளியேற்ற முதலில் திரு அபு பக்கர் நகர மன்றத்துடன் தொடர்புகொண்டார். நகர மன்றம் அவரை விலங்குவதை தடுப்பு அமைப்பிடம் கைகாட்ட ஆனால் அந்த அமைப்போ அவரைப் போலி சிடம் கை காட்டிவிட்டது. அதனால் அவர் போலிசின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு ஓர் ஆம்பு லன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னிரவு 2.12 மணியளவில் தகவல் கிடைத்து திரு அபு பக்கரின் வீட்டுக்குச் சென்ற போலிசார் அந்தப் பூனையைப் பிடித்து வீட்டுக்கு வெளியே கொண்டு சென்றனர். எனினும் அதன் பிறகு பூனை தப்பித்துச் சென்று விட்டது என்று தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆதார் எண்ணை யாரிடமும் சொல்லாதீர்கள்; ஏன் தெரியுமா?
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (13:55 IST)

ஆதார் எண் விபரம் குறித்து போனில் யார் கேட்டாலும் சொல்ல வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. ஒருவரின் வங்கி தகவல்களை திருடி அதன்மூலம் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம் மூலம் நம் டெபிட் கார்டு தகவல்களை திருடிக் கொண்டு பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

தற்போது அனைத்து வங்கிகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து ஆதார் எண் தகவல்களை கொண்டு பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே சைபர் கிரைம் போலீஸார் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தொலைப்பேசி மூலம் வங்கியில் பேசுவதாக கூறி உங்கள் ஆதார் எண் குறித்து கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை இதுகுறித்து யாரும் ஏமாந்துவிட்டதாக புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இதுபோன்ற சம்பங்கள் நடைப்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பரோல் கோரி சசிகலா மனு: சிறை நிர்வாகம் நிராகரிப்பு

இரா.வினோத்

வி.கே.சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளார் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார். ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்துவிட்டது.
இதை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் ஜெயராம் உறுதிப்படுத்தினார்.

ஏற்கெனவே, சசிகலா தனது அக்கா மகன் மகாதேவன் மறைவை ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்த பரோல் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சிறை சென்ற பின் இதுவரை இரண்டு முறை பரோல் மனு தாக்கல் செய்தார். இரண்டு முறையும் பரோல் நிராகரிப்பட்டிருக்கிறது.
வெற்றுக் கூச்சலை பொருட்படுத்த மாட்டேன்: ஆளுநர் கிரண்பேடி

By -பா. சுஜித்குமார் | Published on : 05th June 2017 08:00 PM |



புதுச்சேரி: வெற்றுக்கூச்சலை நான் பொருட்படுத்த மாட்டேன் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

ஆளுநருக்கும், ஆளும் தரப்புக்கும் இடையே புதுவையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் முதல்வர் நாராயணசாமிக்கு 32 கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதனால் கொதிப்புற்ற முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவைியல் பேசுகையில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படக்கூடாது. இல்லையென்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் வகையில் ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தனது கட்செவி அஞ்சலில் கூறியுளளதாவது: நான் வெற்றுக் கூச்சலை எல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நிறைய கூச்சல் எழுப்பப்படுகிறது. கூச்சலை ஏன் எழுப்புகின்றனர் எனத்தெரியும்.

புதுச்சேரிக்கும், அதன் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனிலும் தான் எனக்கு அக்கறை உள்ளது. புதுச்சேரியின் நலன்களை பேணவும், காக்கவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.
தினகரன் எங்களுக்குத் தேவையில்லை.. பட்டுன்னு கதவை இழுத்துச் சாத்திய ஜெயக்குமார்

Published: Monday, June 5, 2017, 16:56 [IST]

சென்னை: சசிகலா குடும்ப தயவு தேவையில்லை. தினகரன் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என்றும் எடப்பாடி அணியைச் சேர்ந்த நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், சசிகலா அணி என அதிமுக பிரிந்துள்ள நிலையில் தற்போது எடப்பாடி அணி, தினகரன் அணி என சில்லு சில்லாக சிதறியுள்ளது.




திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், கட்சியை விட்டு தன்னை யாரும் நீக்க முடியாது என்றும் தான் கட்சிப்பணியில் நீடிப்பதாகவும் கூறினார். கட்சி ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற நினைப்பதை அறிந்த ஈபிஎஸ் அணியினர் ஒன்றிணைந்து இன்று ஆலோசனை நடத்தினர்.

தினகரன் காலையில் பெங்களூரு கிளம்பி சென்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசித்தனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஏப்ரல் 17ஆம் தேதி நாங்கள் என்ன முடிவு எடுத்தோமோ அதில் உறுதியாக இருக்கிறோம்.

யாருடைய தயவும் இன்றி ஜெயலலிதா ஆசியுடன் அவருடைய வழிகாட்டுதலுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

ஆக கட்சியிலும், ஆட்சியிலும் இடமில்லை என்று டிடிவி தினகரனுக்கு கதவை சாத்திவிட்டனர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர். இதனால் அதிமுக மேலும் பல அணிகளாக சிதறியுள்ளது. தினகரன் பெங்களூருவில் இருந்து வந்த பின்னர் தெரியும் யார் யார் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள் என்று.

சபாஷ்.. இரு கண்களையும் தானம் செய்தார் நடிகர் விஜய்சேதுபதி!!
By: Essaki

Updated: Monday, June 5, 2017, 18:59 [IST]

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் கே.கே.நகரில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் இரண்டாவது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.



இதில் பேசிய கே.வி.ஆனந்த், 'திரைப்படத்துறைக்கு கேமரா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதைப் போன்று நமது உடலின் முக்கியமான உறுப்பு கண். கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது. ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் மிகச் சிறந்த பண்பு' என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், 'நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர். இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

நம் உடலின் முக்கிய அங்கமாக்த் திகழும் கண்ணைக் காக்கவும். இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்' என்றார்.
செல்போனுக்கு சிக்னல் கிடைக்கல... ஏணி போட்டு மரத்தின் மீது ஏறி பேசிய மத்திய அமைச்சர்!

By: Kalai Mathi...oneindia

Updated: Monday, June 5, 2017, 12:59 [IST]

ஜெய்ப்பூர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தனது சொந்த தொகுதியில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ஏணியை போட்டு மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் தான் அமைச்சரின் சொந்த தொகுதி உள்ளதாக கேள்வி எழுந்துள்ளது.

மத்திய இணைய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றார் அமைச்சர்.






அந்த நேரத்தில் அவரது செல்போன் திடீரென சினுங்கவே பேசத் தொடங்கியுள்ளார். ஆனால் முறையாக சிக்னல் கிடைக்காததால் செய்வறியாது திகைத்த அவர் மரத்தின் மீது ஏணிணை போட்டு ஏறி பேசியுள்ளார்.

அமைச்சர் மரத்தின் மீது ஏறி பேசியதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். சொந்த தொகுதியிலேயே சிக்னல் கிடைக்காததால் நொந்து போன அமைச்சர் என்ன இது என சலித்துக்கொண்டாராம்.

ராஜஸ்தான் மாவட்டத்தின் பல கிராமங்கள் செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனுக்கு சிக்னல் கூட கிடைக்காத நிலையில் செல்போனில் எப்படி ட்ரான்செக்ஷன் செய்வது டிஜிட்டல் இந்தியா எப்படி சாத்தியம் என்றம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
Sunday, 4 June 2017

அரசு மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 22-ஆக உயர்வு.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 2,750 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 412 இடங்கள் (15 சதவீதம்) போக, 2,338 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டையில் கட்டி முடிக்கப் பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை வரும் 9-ம் தேதி முதல்வர் திறந்துவைக்கிறார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவி டம் கேட்டபோது, “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்த கல்வி ஆண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன் சில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 22 இடங்கள் (15 சதவீதம்) போக, 128 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்கிறது” என்றார்.

Posted by kalviseithi.net
‘கொஞ்சம் மாற்றிச் சிந்திக்கலாமே’’ - பெண்களின் வெற்றிக்கான வழிகள்!
ஶ்ரீதேவி.கே



‘சிஸ்டம் சரியில்ல...’ தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் இந்த வார்த்தை பாடாய்ப்படுகிறது. பால் பேதமின்றி இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எப்போதும் மனிதர்களாக இருப்பதுதான் அவர்களுக்கான இயல்பும் மகிழ்வும். பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும்.

தன்னை அறிதல்:
நம்மால் வளர முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்ல என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்றவேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள பிளஸ், மைனஸ் விஷயங்களைப் பெண்கள் மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை விட்டு விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்யவும்.

எதார்த்த பார்வை:
பிரச்னைகளை அணுகுவதில் ஆண்களைவிடப் பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்னைக்கான வலியை அதிகரிக்கச் செய்கிறது. பெண் தன் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் அவர்கள் ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரைத் தருவதற்கான கருவறையே பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக்கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. வலிகளே பெண்களுக்கான சிகரங்களை எப்போதும் திறந்திருக்கின்றன. தான் சந்திக்கும் பிரச்னகளைப் பெண்கள் எதார்த்தமாக அணுகலாம்.



திறனை மேம்படுத்து:
ஓர் அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், உடனடியாக மனதில் டென்சன் தொற்றும். கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்று அச்சப்படும். இதை இப்படியும் பார்க்கலாம். கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும் எளிய வழிகளையும் உத்தேசிப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப் பல சந்தர்ப்பங்களை நீங்கள் எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தன் தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

சக மனிதரைப் புரிதல்:
திருமணம் பெண்ணின் வாழ்வில் மிகவும் மதிப்பு மிகுந்த பகுதி. ஒரு வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், தனக்கான குடும்பத்தின் தலைவியாகப் பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போதும் எதிர்ப்படும் எல்லா விஷயங்களுமே பிரச்னைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம்கூடப் பெரிதாக மனதைக் காயப்படுத்தும். புதிய மனிதர்களை முன்கூட்டிய விருப்புவெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் மனிதர்களைப் புரிந்து செயல்படுவதால் வீட்டிலும்..தனது வேலையிடத்திலும் பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும்.

இனிக்கும் இல்லம்:
பல வீடுகளிலும் எதிரெதிர் துருவங்களாக இருப்பது தம்பதிகள்தான். முதலில் அன்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள உருவாக்கிக்கொண்ட உறவுதான். போகப்போக அவர்களுக்கிடையில் பலவீனங்களும் வெறுப்புகளும் மட்டுமே இடிக்க முடியாத சுவராக வளர்ந்து நிற்கும். நெகட்டிவான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்னைதான் இது. இந்தச் சுவரையே ஊதினால் உடைந்துவிடும் கண்ணாடி மொட்டுகளாக மாற்ற முடியும். அப்படியே இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூறுங்கள். பாசிட்டிவ் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். அவரவருக்கான சுதந்திர வெளியை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கத் தொடங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது. எந்த உறவிலும் பாசிட்டிவ் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக பெண்கள் சுமுகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பெண்கள் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்தப் பிரச்னையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அவர்களுக்கான தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது! மு.க.ஸ்டாலின் கிண்டல்
கார்த்திக்.சி
'வைர விழாவை வயதானோர்களுக்கான விழா என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதுதான் ஆகிறதா' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல்செய்துள்ளார்.




காயிதே மில்லத்தின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில், தி.மு.க செயல் தலைவர் மலர் வைத்து மரியாதைசெலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 'தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தீவிரமாகக் குரல்கொடுத்தவர் காயிதே மில்லத். அவருடைய கனவை நனவாக்க வேண்டும். மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்வது போல தமிழை ஆட்சி மொழியாக்க முயலவேண்டும்.

காவிகள் ஆளலாம் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் நாகரிகம் தெரிகிறது. வைர விழாவை வயதானவர்கள் விழா என்று கேலிசெய்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயதா ஆகிறது. அவர் மூத்த குடிமக்களை அவமானப்படுத்தியுள்ளார். மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, மக்களின் கலாசார, பொருளாதாரத்தைச் சீரழிக்கிறது. அதற்கு எதிராகவே, எதிர்க்கட்சிகள் அனைவரும் வைர விழாவின்போது குரல்கொடுத்தோம். அது, அரசியலுக்கான கூட்டணி அல்ல' என்று தெரிவித்தார்.
ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே வலுத்து வரும் மோதல்!
ராகினி ஆத்ம வெண்டி மு.

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண்பேடி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆளுநர் கிரண் பேடியும் சமூக வலைதளங்களில் தொடர் பதில் தாக்குதல்களை பதிவு செய்து வருகிறார்.




புதுச்சேரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான கலந்தாய்வின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவி வகிக்கும் கிரண் பேடி அதிரடியாகச் செயல்பட்டார். அப்போது, மருத்துவக் கலந்தாய்வு நேர்மையாக நடைபெறவில்லை என்றும், புதுச்சேரி முதல்வரின் ஆட்சி குறித்தும் கிரண் பேடி தொடர் புகார்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், ‘கிரண்பேடி அரசு குறித்தத் தவறான தகவலகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்’ என ஆவேசம் காட்டினார். இந்நிலையில் மீண்டும் கிரண் பேடி சமூக வலைதளங்களில் நாராயணசாமியை தாக்க துவங்கியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கிரண்பேடி குறிப்பிடுகையில், ‘நான் நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா, ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா, மக்களின் குறைகளைத் தீர்க்க சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக புதுச்சேரியின் ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்படவேண்டும். நான் செய்வதை தவறு என யார் கூறுகிறார்கள்’ என அடுக்கடுக்கானக் கேள்விகளை பதிந்து வருகிறார். இதனால் புதுச்சேரியில் ஆளுநர்- முதல்வர் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
கிரண்பேடியை கலங்கடிக்கும் நாராயணசாமியின் உத்தரவு..!
அ.குரூஸ் தனம் ஜெ.முருகன்

அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.




புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே மோதல் நீடித்து வருகிறது. கிரண்பேடி புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே மோதல் நீடித்து வருகிறது. தற்போது மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 'நான் நல்ல நிர்வாகியாக செயல்படவேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா? என்று கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாராயணசாமி, சட்டசபையில் பேசியுள்ளார். அவர் 'எம்.எல்.ஏக்களின் அனுமதி இல்லாமல் ஆளுநர் தொகுதிக்குள் நுழைந்தால் அவரை நுழையவிடாதீர்கள். மறியல் போராட்டம் செய்யவேண்டும். ஆளுநர் தனது வரம்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும். கோப்புகளை திரும்ப அனுப்பும் செயலை ஆளுநர் நிறுத்தவேண்டும். பேஸ்புக், ட்விட்டரில் புகார் கூறுவதே ஆளுநரின் வேலை' என்று குற்றம்சாட்டினார். மேலும் 'அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆளுநரை சந்திக்கக் கூடாது' என்று உத்தரவிட்டார். 'ஆளுநரை மாற்றவேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்னன் பேசினார்.
பள்ளிக் கல்வித்துறையில் 82 பேருக்குக் கருணை வேலை!
சகாயராஜ் மு



பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில், 25 சதவிகிதப் பணியிடங்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ், கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டுவருகிறது. அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில், முன்னுரிமை நிர்ணயம்செய்யப்பட்டு உயிரிழந்த ஊழியர், ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுவருகிறது.

2016-17ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்களை நிர்ணயம்செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களைக் கருணை அடிப்படையில் நிரப்பிட அரசாணை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஏழு பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்டி அணிந்துவந்த மாணவர் தேர்வெழுத அனுமதி மறுப்பு! பதறிப்போன மதுரை கலெக்டர்
ஈ.ஜெ.நந்தகுமார் செ.சல்மான்

வேட்டி கட்டி வந்த மாணவரைத் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்விக்கான பருவத்தேர்வு இன்று பல மையங்களில் நடைபெற்றது. மதுரை அரசரடி இறையியில் கல்லூரி தேர்வு மையத்துக்குத் திருமங்கலம் அருகேயுள்ள கல்லனை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணன் தேர்வெழுத காலையில் வந்தார். காலை பத்து மணிக்குத் தேர்வறையில் தயாராக அமர்ந்திருந்த கண்ணனை, அங்கு வந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், வேட்டி கட்டிக்கொண்டு தேர்வு எழுத அனுமதியில்லை என்று கூறி கண்ணணை வெளியேற்றினார்கள்.

'வேட்டி கட்டுவது எப்படி ஒழுங்கீனமாகும், பல்கலைக்கழகத்தில் அப்படி விதி ஏதுமுள்ளதா' என்று கண்காணிப்பாளர்களிடம் வாக்குவாதம் செய்தார் கண்ணன். ஆனாலும் அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. உடனே கண்ணன் நண்பர்கள் மூலம் ஊடகங்களுக்குத் தகவல் சொன்னார். இதனால் ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், "நான், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் இளங்கலை நூலகவியல் படித்து வருகிறேன். இந்த செமஸ்டரில் நான்கு தேர்வுகளை எழுதிவிட்டேன். இன்று நடை பெறும் இறுதித் தேர்வை எழுத வேட்டி கட்டிக்கொண்டு வந்தேன். அது தவறு என்று தேர்வெழுத அனுமதி மறுத்தனர். வேட்டி தமிழர்களின் ஆடை இல்லையா. அது குற்றமா. தமிழ் நாட்டிலேயே வேட்டியை அங்கீகரிக்கவில்லையென்றால் யார் நம்மை மதிப்பார்கள்" என்றார்.

கண்ணனுக்கு ஏற்பட்ட அவமானமும், அவர் செய்தியாளர்களிடம் பேசிய தகவலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் போய் சேர, அவர்கள் பதறிப்போனார்கள். பண்பாட்டு ரீதியான விஷயங்கள் தமிழக மக்களை உசுப்பிவிட்டுவிடும் என்று பயந்த பல்கலைக்கழக அதிகாரிகள், உடனே தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டனர்.

வெளியில் காத்திருந்த கண்ணனைச் சமாதானப்படுத்தித் தேர்வெழுத வைத்தனர். அவருக்குத் தேர்வெழுத ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவரின் வேட்டி விவகாரம் பெரியளவில் செல்லாமல் ஆரம்பத்திலயே தடுக்கப்பட்டாலும், தமிழரின் பண்பாட்டு உடைக்கான இடம் எதுவென்பதைத் தமிழகத்திலுள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்கள், நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஒரு முடிவுக்கு வர வேண்டிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் தொடரில் வெடிக்கவிருக்கும் பிரச்னைகள் இவைதான்!

இரா.தமிழ்க்கனல்



சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த பகுதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், எதிர்ப்பும் எதிர்பார்ப்புகளும் காத்திருக்கின்றன.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த மார்ச்சில் கூடியது. மார்ச் 16 ஆம் தேதியன்று 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்செய்தார். அதைத் தொடர்ந்து மார்ச் 20 முதல் 25ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடந்திருக்கவேண்டிய துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவில்லை. ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலையொட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் மோசடிக் குற்றச்சாட்டுகளால் அந்த இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

இதற்கிடையே அதிமுகவை நிர்வகிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பதில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர் அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு, தேர்தல் ஆணையம்வரை விவகாரம் போனது. இரு தரப்பினரும் தாங்கள்தான் அதிமுகவுக்கு உரிமை படைத்தவர்கள் என நிரூபிக்க தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதுடன் வாதிட்டும் வருகின்றனர்.
அதன்பிறகு பல பிரச்னைகளையொட்டி சட்டப்பேரவையைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட முன்னணி கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், பேரவை கூட்டப்படவில்லை.

தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் தாக்கத்தால், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என திமுக தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதற்குத் தீர்வுகாண மத்திய அரசிடமும் அருகமை மாநில அரசுகளிடமும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு தனிச்சட்டமுன்வரைவு இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நெடுஞ்சாலையோரம் மூடப்பட்ட மதுக்கடைகளை இடம்மாற்றி ஊர்களுக்குள் திறக்கப்படுவதை எதிர்த்து பெண்களின் பங்கேற்பில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் அமையவிருந்த பெரும் தொழிற்சாலை திட்டங்கள், மாநில அரசின் குறைபாடுகளால் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

இவை மட்டுமின்றி வேறு பல விவகாரங்களையும் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கிளப்பவுள்ளன.

மாநில சுயாட்சியைப் பறிப்பதாக அமைந்துள்ள நீட் தேர்வுக்கு மாநிலத்தில் நீடித்துவரும் எதிர்ப்பைக் குறைக்கும்வகையில் அது தொடர்பாக புதிய மசோதா தாக்கல்செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. பத்திரப்பதிவுக் கட்டணம் அதிகரித்துள்ளதாலும் வீட்டுமனைத் தொழிலானது மந்தமடைந்துள்ள நிலையில், நிலத்தின் வழிகாட்டல் மதிப்பைக் குறைப்பதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முதியோர் மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான அரசு நிதியுதவி, ரேசன் பொருட்களுக்கான நிதி போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை மானியக் கோரிக்கையில்தான் ஒதுக்கப்படும்; வழக்கமான காலகட்டத்தில் பேரவையைக் கூட்டாததால் இதன் மூலம் பயனடைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் சிபிஎம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதி.

”குறிப்பாக மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் கடுமையாக நிலவுகிறது. 146 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆளுக்கு 10 லிட்டராவது தேவை என்றபோதும் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக திண்டுக்கல் நகரம் முழுக்க தண்ணீர்ப் பஞ்சம் இருந்தாலும், 9 இடங்களில்தான் ஆழ்துளைக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதற்கும் நிதி இல்லை. வறட்சிக்காகவே தனி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. உரிய நேரத்தில் பேரவைக்கூட்டம் நடத்தப்படாததால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. பேரவை கூடினால்தானே கூடுதல் நிதி வேண்டும் என்றுகூடக் கேட்கமுடியும்.

மேலும், மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டநிலையில், ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு 50% நிதியை மாநில அரசு வழங்கவேண்டும். மானியக் கோரிக்கை விவாதம் நடந்தால்தானே இதற்கான நிதியை ஒதுக்கமுடியும். அதைச் செய்யாததால் ரேசன் கடைகளில், உரிய அளவு அரிசியை வழங்குவதில்லை. அரிசி கோதுமை என சேர்த்துத் தருகிறார்கள் அல்லது குறைவான அரிசியைத் தருகிறார்கள் அல்லது அரிசி வரவில்லை என்கிறார்கள். ரேசன் கடைகளில் அரிசி கிடைக்கிறது என அரசு சொல்கிறது; சில இடங்களில் கிடைக்கிறது; பல இடங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. மாநில அரசாங்கம் இதை ஒரு சமாளிப்பு உத்தியாகவே செய்கிறது” என வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கான எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுகிறார், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி.
விரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்..!
கார்த்திக்.சி

நோக்கியா 3, 5, 6 மாடல் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஜூன் 13-ம் தேதி முதல் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




நோக்கியா நிறுவனம் சமீபத்தில் 3310 என்ற மாடல் போனை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜூன் 13-ம் மூன்று வகையான மாடல் ஸ்மார்ட் போன்களை வெளியிடதிட்டமிட்டுள்ளது. நோக்கியா 3, 5, 6 என்று அந்த போன்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. நோக்கியா 6 மாடல், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி சேமிப்பு வசதி, 5.5 இன்ச் தொடுதிரை வசதிகளுடன் வெளிவரவுள்ளது. இதன் விலை 16,000 ரூபாய் ஆகும்.

இதில் 16 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் வசதி கொண்டது. நோக்கியா 5 மாடல், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி சேமிப்பு வசதி, 5.2 இன்ச் தொடுதிரை வசதியுடன் வெளிவரவுள்ளது. இதன் விலை 13,250 ரூபாய் வரை இருக்கும். நோக்கிய 3 மாடல், 5 இன்ச் தொடுதிரையும் 16 ஜி.பி சேமிப்பு வசதியுடனும் வெளிவர உள்ளது. அதன்விலை 9,750 ரூபாய் ஆகும். பின்லாந்தைச் சேர்ந்த ஜி.எம்.டி குளோபல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
சசிகலாவைச் சந்தித்த பின் அமைச்சர்களின் பேட்டியைக் கலாய்த்த தினகரன்!

அஷ்வினி சிவலிங்கம்


’என்னை ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை’ என்று டி.டி.வி.தினகரன் சசிகலாவைச் சந்தித்தப் பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தன் மனைவியுடன் பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். அவருடன் மூன்று எம்.பி மற்றும் ஆறு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் சென்றனர்.




சசிகலாவைச் சிறையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.டி.வி.தினகரன் ‘சசிகலா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிவருவதால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சசிகலா கருதுகிறார். அணிகள் இணைப்புக்கு இன்னும் 60 நாள்கள் கால அவகாசம் அளிப்போம் என்று சசிகலா என்னிடம் அறிவுறுத்தினார். அதன் பிறகும் கட்சி நிலையான தன்மையை அடையவில்லை என்றால் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்.

கட்சியிலிருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. என்னைக் கட்சியைவிட்டு ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் வேறு யாருக்குமில்லை. பொதுச்செயலாளர் பதவியைத் தானாக கையில் எடுத்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு ஜெயக்குமார். அவருக்கு என்னை ஒதுங்கச் சொல்லும் அதிகாரமில்லை. அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சுயபயத்தினால் என்னை ஒதுங்கச் சொன்னார்கள். அவர்கள் யாருக்குப் பயப்படுகிறார்கள் என்பதற்கு காலம் பதில்சொல்லும். 45 நாள்கள் கட்சியைவிட்டு ஒதுங்கி இருந்தேன். கட்சி பலப்படவில்லை. இவர்களுக்குள் இருக்கும் பிரச்னையால் கட்சிதான் பாதிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் சசிகலா கூறியது போன்று இன்னும் 60 நாள்கள் பொறுத்திருப்போம். அதற்குப் பிறகும் கட்சி பலப்படவில்லை என்றால் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்’ என்று எச்சரித்துள்ளார்.

நடிகர் சாமிக்கண்ணு காலமானார்




தமிழ்த் திரையுலகில் 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சாமிக்கண்ணு (95) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) காலமானார்.
அவருக்கு தயானந்தன் உள்பட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மறைந்த சாமிக்கண்ணுவின் இறுதிச் சடங்குகள், சென்னை பள்ளிக்கரணை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இயக்குநர்கள் மகேந்திரன், இராமநாராயணன், ராஜசேகர், ராஜ்கிரண் உள்பட பல இயக்குநர்களிடம் மறைந்த நடிகர் சாமிக்கண்ணு பணியாற்றியவர். தனது 8 வயதிலிருந்து நாடகக் கம்பெனிகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1954 -ஆம் ஆண்டு புதுயுகம் திரைப்படத்தில் அறிமுகமான சாமிக்கண்ணு, அன்னக்கிளி, வண்டிச்சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகாபிரபு உள்பட 400 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்புக்கு: 98845 99782
Dailyhunt



DINAMANI
தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்க கல்வி துறை அமைச்சர் சிபாரிசு கடிதம்


தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவி ஒருவருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக அரசின் லேட்டர் பேடில் சிபாரிசு கடிதம் கொடுத்துளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



முன்னதாக தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
பி.இ. மாணவர் சேர்க்கை: ஜூன் 22-இல் தரவரிசைப் பட்டியல்

நிகழ் கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை, வரும் 22 -ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

பி.இ. படிப்புகளில் சேர இந்த முறை 1 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர். தபால் மூலம் வரும் விண்ணப்பங்களைச் சேர்க்கும்போது, இந்த எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூட வாய்ப்புள்ளது. இருப்பினும், இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.
கடந்த 2016 -17 கல்வியாண்டில், 2 லட்சம் பேர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் 89,769 பேர் பி.இ. படிப்புகளில் சேர்க்கை பெற்றனர். ஆனால், இம்முறை இந்த எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள். 

கலந்தாய்வு: இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஜூன் 22-இல்...: முன்னதாக, பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 20 -இல் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 22 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூன் 27 இல் தொடங்கி, ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்கப்படும்.
Dailyhunt
'கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டியதில்லை': தம்பிதுரை அந்தர் பல்டி
இரா. குருபிரசா

ஜெயலலிதா மறைவும் அதன் பின் அ.தி.மு.க-வில் நடந்து வரும் அரசியல்கள் குறித்தும் அனைவரும் அறிந்த ஒன்றே. சசிகலா ஆதிக்கத்தால் ஓ.பி.எஸ் போர்கொடி எழுப்பினார். பின், சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஓ.பி.எஸ் பக்கம் தாவினர். ஆனாலும், மீதி உள்ள எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்து எடப்பாடி ஆட்சியைப் பிடித்தார். இதையடுத்து, தினகரன் ஆதிக்கம் ஆரம்பிக்கவே அவரும் கைது செய்யப்பட்டார்.




கைது செய்வதற்கு முன் கட்சியை விட்டு விலகுவேன் என்று கூறியவர், தற்போது மீண்டும் கட்சிப் பணியை தொடர்வேன் என்று கூறியுள்ளார். இது அ.தி.மு.க தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறியவர்கள் முக்கியமானவர் தம்பிதுரை. குறிப்பாக, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தனது லெட்டர் பேடிலேயே, "கட்சி மற்றும் ஆட்சிப் பணி ஒருவரிடம்தான் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது தினகரனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, "கட்சியும், ஆட்சியும் ஒரு சேர இருக்க வேண்டும் என்ற சொன்ன காலகட்டம் வேறு. தற்போதைய சூழல் வேறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலக்கட்டத்தில் கட்சி, ஆட்சி ஒருவரிடம்தான் இருந்தது. இதனால், சசிகலாவையும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், தற்போதைய நிலை வேறு. எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முழுமையாக இந்த ஆட்சி நடக்கும். எங்களுக்குள் பிளவு ஏதும் இல்லை. எனவே கட்சியும், ஆட்சியும் ஒருவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.
10 பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ஹீரோ!

ராகுல் சிவகுரு




இந்தியாவில் அதிக டூ-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஹீரோ, 10 பைக்குகளின் (கரிஷ்மா R, ஹங்க், கிளாமர் Fi, இக்னீட்டர், பேஷன் X ப்ரோ, பேஷன் ப்ரோ TR, எக்ஸ்ட்ரீம், HF டான், ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட், ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக்)தயாரிப்பை நிறுத்திவிட்டது. BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப தனது டாப் செல்லிங் மாடல்களை மேம்படுத்திவிட்ட ஹீரோ, மேலே குறிப்பிட்டவற்றை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டது. இவற்றின் குறைவான விற்பனை எண்ணிக்கையே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே இதற்கு எல்லாம் மாற்றாக, 6 முற்றிலும் புதிய மாடல்களை விரைவில் களமிறக்க உள்ளது ஹீரோ.



ஜெய்ப்பூரில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் Centre for Innovation and Technology (CIT)-யில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய மாடல்களின் வடிவமைப்பு நடைபெற உள்ளன. தற்போதைக்கு எக்ஸ்ட்ரீம் மற்றும் ஹங்க் ஆகியவற்றுக்கு மாற்றாக, அச்சீவர் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் இருக்கின்றன. ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட் 100-க்குப் பதிலாக, முற்றிலும் புதிய 110சிசி ஐ ஸ்மார்ட் இருக்கிறது. கரிஷ்மாவுக்கு மாற்றாக, HX250R அல்லது எக்ஸ்ட்ரீம் 200S பைக் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய கிளாமருக்குப் பதிலாக, முற்றிலும் புதிய கிளாமர் SV அறிமுகமாகிவிட்டது.





இக்னீட்டருக்கு மாற்றாக சூப்பர் ஸ்ப்ளேண்டர் இருக்கிறது. HF டானுக்குப் பதிலாக, HF டீலக்ஸ் அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. பேஷன் ப்ரோ பைக்குகளுக்குப் பதிலாக, பேஷன் ப்ரோ i3s மாடல் பொசிஷன் செய்யப்படுகிறது. ஆக, தயாரிப்பிலிருந்து நிறுத்தப்பட்ட பைக்குகளால், ஹீரோவின் கம்யூட்டர் பைக்குகளின் விற்பனையில் எவ்வித பாதிப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால், பெர்ஃபாமென்ஸ் செக்மென்ட்டில் வீக்காக இருக்கும் ஹீரோ, இப்போது இன்னும் பலவீனமாகி இருக்கிறது. ஸ்கூட்டர் மாடல்களில் இதுபோன்ற எந்த குழப்பமும் இல்லாதது ஆறுதல்.

Chennai-Madurai Duronto Express still running with 25-year-old coaches


By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 05th June 2017 05:29 AM  |  

CHENNAI: The train’s third AC berth costs roughly the same as that of a flight ticket booked in advance. Considering the high fare, one would expect the Chennai - Madurai Duronto Express to provide a comfortable journey to passengers, but it is apparently not so.
The train is being run with old coaches and some of them have been in operation for about 25 years, the maximum operating period. This has been revealed by Southern Railway in an RTI reply.
Bothered by the poor condition of the train’s rake, R Manivannan, a resident of Kolathur, filed a Right to Information (RTI) aplication seeking details about the train. Although initially denied, Manivannan obtained the details after lodging the first appeal.
In the reply, it was stated that the train had all its coaches manufactured between 1992 and 1999. This is a serious issue, considering the maximum lifespan of coaches is only 25 years, beyond which they are pulled out of service and sent to scrap.
Significantly, all of them are conventional type coaches manufactured by Integral Coach Factory (ICF).
These coaches, involved in several train accidents over the years, have been deemed unsafe and production is to be stopped this year.  Railways has initiated a process to completely switch over to modern Linke Hofmann Busch  (LHB) coaches. Besides enhanced interiors, LHB coaches have advanced safety specifications, including the anti-climbing feature which cuts down high casualties during derailments.
The RTI reply was given in February this year. However, when contacted by Express, a senior railway official confirmed that the train still continued to ply with old coaches.
“The Madurai Duronto has just a single rake, consisting  of 1 first tier AC, 3 Second tier AC and 8 Three tier AC compartments. The train is maintained by Chennai division,” he said.
Along with Rajdhani and Shatabdi, Duronto Express is considered a premium train. Most premium trains, including other Durontos, have been allotted LHB coaches. However, Chennai- Madurai Duronto, which is operated twice a week, is an exception.
When asked about the old age of the coaches, the official said, “The life of an ICF coach is 25 years and only after that, it is replaced.However, they are regularly maintained to make sure they are in good condition.”
Asked about the non-provision of LHB coaches, the official said, “Based on factors such as patronage, it is the Railway Board which decides to allocate LHB coaches to specific trains. As of now, there are no plans to introduce LHB in Madurai Duronto.”
For their part, passengers demand that the railway board allot more LHB coaches for Southern Railway. J Soosai Raj, general secretary, Tamil Nadu Southern Districts Train Passengers Association (TNSDTPA) said, “It is disappointing that Madurai Duronto has old coaches. Railways should look at the issue from a service point of view and provide LHB coaches at the earliest.”

V-C search: ‘Ordinance silent on transparency’

A section of academics feels the amendment makes no mention of following UGC norms in the selection procedure

A cross section of academics is of the view that the recent Ordinance amending the Tamil Nadu Universities Laws is silent on the aspect of transparency in appointing Vice-Chancellors to various universities. The ordinance, promulgated recently, had provided for significant changes in the composition of the three-member Vice-Chancellor search committees, prescribing qualifications for members of these committees.
The ordinance stipulated that the Governor-Chancellor shall nominate a retired judge of the Supreme Court or any High Court to the panel, while a bureaucrat in the rank of principal secretary or an eminent academician shall be nominated by the State and the university senate would nominate another member.
However, academics and office-bearers of teachers’ associations argue that the Ordinance cannot be a panacea for curing the ills afflicting the university system. The Ordinance makes no mention about following the UGC Regulations, which prescribes minimum qualifications for appointing Vice-Chancellors or about their selection procedure.
“It is now imperative that the State either adopt the University Grants Commission norms for V-C appointment, or at least come up with stringent regulations to ensure quality V-Cs are appointed,” says a former professor who has been on V-C search committees.
“As public-funded institutions the details of selection process should be in the public domain,” says a retired professor who has been on V-C search committees, adding, “Information such as the applicants that the search committee had considered; applications received; and the basis for selection are shrouded in secrecy.”
Transparency could eliminate corruption as has been the case with the Teachers Recruitment Board, which has reduced irregularities in appointment of teachers.
‘Why bureaucrats?’
Questioning the need for nominating civil servants to the V-C search committee, a professor contends, “Bureaucrats have little role in the university system but wield greater power than teachers from the college system. Also it is the quality of the retired judge or the bureaucrat in the committee that would ultimately decide the choice of candidates.”
S. Subburaju, convenor Joint Action Council of College Teachers Association says, “Typically, University syndicates comprising 18-20 members, including four directors and three secretaries represent the government. The V-C, registrar and the controller of examination are usually the government’s choice too. Only a few are elected members.” He feels if eminent academics are given the job of shortlisting Vice-Chancellor probables, then they would help weed out incompetent candidates. Teachers nominated to the search committees would serve as watchdogs, he claims.
The Teachers’ Association of Bharathidasan University, in a letter to the Chancellor on May 30, suggested that the V-C aspirant’s academic credentials in research and teaching and extension activities should be taken into account. It also wanted, on the committee, an eminent academician with better credentials than the applicants.
Meanwhile it is not clear if the Ordinance would nullify the search committees that were constituted much earlier for shortlisting Vice-Chancellor aspirants for the Periyar University in Salem and Bharathidasan University in Tiruchi.
Jun 05 2017 : The Times of India (Chennai)
Dial 1100, get bribe money back: AP govt
PTI


If you had paid a bribe for availing any government service in Andhra Pradesh in the recent days, just dial 1100 and report the matter.Chance is that the corrupt government servant, who fleeced you, may possibly come knocking on your door to return the amount.
That seems to be the new trend in the state, if claims of the Chandrababu Naidu government are to be believed.
With a recent nation-wide survey report placing AP at the second place after Karnataka as the most corrupt state in the country , the Chandrababu regime has launched this exercise to showcase its fight against corruption.
“So far 12 people had returned the bribe amounts to the citizens in the past few days. In one instance in Kurnool district, a panchayat sec retary had returned (bribe) money to 10 citizens (in separate cases),“ chief minister Chandrababu Nai du said the other day .
The `People First' grievance redressal channel launched by the government on May 25 seems to be “working wonders“ and “sending chill down the spines of (corrupt) public servants“, some government functionaries have claimed.
“The 1100 call centre has been receiving tremendous response. It's a good effort to cleanse the society. Scared government officials are returning the bribe amounts to citizens,“ advisor (communications) to the government P Prabhakar said recently. The `People First' is part of the government's real-time governance initiative to build a “happy , healthy and sustainable society“. However, a senior bureaucrat said the initiative is just a message to people that even if they have paid any bribe, they can expect it to be returned as the government is taking the calls to 1100 seriously.
“Procedural inquiries are essential for any punitive action against public servants,“ the bureaucrat said.
Interestingly , the bribe amounts being returned are just about `500 to `1,000 in individual cases and also there is no action taken as such on the identified corrupt. Amaravati:
Jun 05 2017 : The Times of India (Chennai)
`K'taka govt withheld 4 mths' salary of murdered IAS 
officer'
Lucknow:


Pay Credited After Demise; He Had Told Friends About Death Threats: Cops
A police team, probing the mysterious death of a 2007 batch IAS officer in Lucknow on May 17, has found that his salary was withheld by the Karnataka government for four months.The salary was credited into Anurag Te wari's SBI ac count a week after he had died, the team which had gone to Bengaluru last week, said on Sunday .Anurag, 36, from Bahraich district of Uttar Pradesh, was found dead outside a state guest house in Hazratganj area of Lucknow on May 17. He celebrated his birthday with some batch mates in UP the previous night.
Anurag was commissioner food and civil supplies department when his salary was stopped. Deputy SP Avanish Mishra, who is heading the Lucknow police team, told TOI, “We examined the bank account statement and realized he was not paid salary for the last four months be fore he died. Salary was given to him on May 24.“
The team could gather that Anurag was among a group of 22 officers whose salaries were stopped due to indiscipline. “But I cannot say at this stage whether any other IAS or IPS officer, apart from Anurag, was part of the group,“ said Mishra.
The team is also probing what prompted Anurag to install CCTV cameras at his residence in Dollars Colony in Bengaluru in February .Six cameras were set up at his bungalow in March with the government's sanction.
“Around the same time, Anurag had told me and his close friends that there were threats to his life,“ his elder brother Mayank told TOI on phone from Bengaluru on Sunday .
The footage, however, did not help the Lucknow police as only three days' events were stored in the disk. The team came to know that some people from Anurag's department had visited his residence after his death. “We don't know how many people visited his residence as the previous recording is not stored,“ said Mishra.
“The Lucknow police team is following just one line of investigation -to prove Anurag died of some medical complications. But so far, the police have no evidence of respiratory disorder leading to death and the time is running out. They need to look in other directions, too,“ Mayank said. A woman PCS officer from Karnataka, posted as panchayat development officer in Bidar district, Mangala Kamble, told TOI, “As collector of Bidar district, Anurag acted strongly against corrupt government officials.They had patronage of politicians who ensured Anurag's transfer. He brought around many positive changes in Bidar, water conservation being the foremost.Eight government engineers were booked and sent to jail.“
She wanted to share the details with the Lucknow police team but the meeting could not be scheduled.

Jun 05 2017 : The Times of India (Chennai)
S Railway quietly introduces premium tatkal in 100 
trains
Chennai:


Tickets Cost Up To 3 Times Regular Fare
Southern Railway has quietly introduced Premium Tatkal (PT) quota -wherein ticket prices increase dynamically as availability decreases -on as many as 100 trains since April 29, but without any public notification or press release. PT quota is now implemented in almost every popular daily train, information sourced through an RTI application filed by TOI shows.PT has been opposed by passenger associations as tickets under the quota are priced at up to three times the regular fare. Up to 30% of tickets in every train are under the Tatkal quota, of which 50% are slotted under PT quota. This means that in 125 trains, up to 15% of all tickets can be priced anywhere from 1.5 to 3 times the regular fare. For instance, the fare for a sleeper class ticket on Chennai-Madurai Pandian Express, which is `315, can go up to `900 under the PT quota.
The introduction of PT on such a huge number of trains was discreetly done, with several officers in the commercial department not being aware of it, enquiries by TOI reveal. “ Announcing it to the public will lead to protests. This is why it has been surreptitiously done during the summer rush season,“ a top official involved in ticketing said, requesting anonymity .
The change in policy has come only in late April, the RTI reply shows. Data shows that PT quota was introduced in eight trains in 2014, four trains in 2015, 11trains in 2016 and two in 2017 till March 31.
A member of the Zonal Railway Users Consultative Committee (ZRUCC) said that a section of commercial managers had resisted introducing PT quota in many trains due to its unpopularity .
As a public body affecting lakhs of citizens, Southern Railway should maintain transparency in such issues, said T Sadagopan, a consumer activist from Pattabhiram. Southern Railway's official spokesperson PA Dhananjeyan was unavailable for comment.
சங்கமேஸ்வரர் கோவிலில் 75 திருமணங்கள்

பதிவு செய்த நாள்05ஜூன்2017 00:03

பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று ஒரே நாளில், 75 திருமணங்கள் நடந்தன. 

ஈரோடு மாவட்டத்தில், பவானி சங்க மேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஒவ்வொரு முகூர்த்தத்தின் போதும், பல திருமணங்கள் நடக்கும்.

நேற்று வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம், விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் வந்ததால், கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.கோவில் நிர்வாகத்தில் பதிவு பெற்ற, 35 திருமணங்கள், வேதநாயகி சன்னிதி, சங்கமேஸ்வரர் சன்னிதி, முருகன் சன்னிதி மற்றும் ஆதிகேசவபெருமாள் கோவில் மண்டபம் என, பல இடங்களில் நடந்தது. அதேபோல், சங்க மேஸ்வரர் கோவில் வெளிப் பகுதியான கூடுதுறையில், 40 திருமணங்கள் நடந்தன. ஒரே நாளில், மொத்தம், 75 திருமணங்கள் நடந்தன. திருமண வீட்டார்களின் கூட்டத்தால், கோவிலில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது.
வாஸ்து ஆமை சிலைகள் விற்பனை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்04ஜூன்2017 23:44

திண்டுக்கல்: 'வாஸ்து' நிவர்த்திக்காக பொதுமக்கள் ஆமை சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுவதால், திண்டுக்கல்லில் அதன் விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணியர் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் ஆமை சிலைகளை வாங்கிச் செல்லத் தவறுவதில்லை. 'ஆமை புகுந்த வீடு ஆகாது' எனக் கூறுவதை பின்னுக்குத் தள்ளி, தற்போது ஆமை வடிவ சிலைகளுக்கு ஏகப்பட்ட மவுசு உருவாகியுள்ளது. திண்டுக்கல்லில், வசிக்கும் சிலர் பச்சை ஆமைகளை வீட்டுத் தொட்டியில் செல்லப் பிராணியாகவே பாவித்து வளர்க்கின்றனர். வெண்கலம், பீங்கான், மரப்பொருள்களால் செய்யப்பட்ட ஆமை சிலைகளை பலர் வாங்கிச் செல்கின்றனர்.
கணவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு: அறிவுரை கூறி மனைவிக்கு ஜாமின்

பதிவு செய்த நாள்05ஜூன்  2017   06:04


பெங்களூரு: கணவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில், மனைவிக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் சாய்ராம், 52; தனியார் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி அம்சவேணி, 48. மது குடிக்கும் பழக்கம் உள்ள இருவரும், மே 5ம் தேதி மாலை, ஒசூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டது. காரில் இருந்து தப்பிய கணவரை விரட்டி சென்று அம்சவேணி, துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த சாய்ராம், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சூர்யநகர் போலீசார், அம்சவேணியை கைது செய்து விசாரித்த போது, மகளின் திருமண விஷயத்தில், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டையாக மாறி, கணவரை மனைவி, துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. 

அம்சவேணியிடம் விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம், தேவனஹள்ளி செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறியதாவது:
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதே, இவர்களின் சண்டைக்கு முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது. பனசங்கரியில் வசிக்கும் நண்பர் சேகர் குப்தாவிடம், எட்டு லட்சமும், விஜயா வங்கியிலும் சாய்ராம், கடன் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைக்க முடியவில்லை. வங்கி அதிகாரிகள், கடனை அடைக்கும்படி நெருக்கடி கொடுத்தனர்.
தமிழகத்தின் தேன்கனிகோட்டையில், அம்சவேணி பெயரில் துவங்கப்பட்ட செங்கல் தொழிற்சாலையும் நஷ்டத்தில் மூழ்கியது. இதனால் தம்பதியரிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. 

இதுதவிர, சாய்ராம் ஒருமுறை, உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன் விலை மதிப்புள்ள கைக்கடிகாரம், மோதிரத்தை மனைவியிடம் கொடுத்திருந்தார். மருத்துவமனையிலிருந்து திரும்பியதும், அதை திருப்பி கேட்ட போது, காணாமல் போய்விட்டதாக கூறினார். இதனால் மனைவி மீது சாய்ராம் கோபமடைந்தார்.
இந்த நிலையில், வங்கியிலிருந்து, கடனை அடைக்கும்படி நெருக்கடி வந்ததால், சம்பவம் நடந்த அன்று தம்பதியர், வங்கி சென்று, கால அவகாசம் கேட்டு, வீடு திரும்பினர். அப்போது, தம்பதியரிடையே வழக்கம் போல் சண்டை நடந்து, அம்சவேணி துப்பாக்கியால் சாய்ராமை சுட்டார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

அம்சவேணி ஜாமின் கோரி, தாக்கல் செய்திருந்த மனு குறித்தும், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. 

அப்போது அம்சவேணி, 'என் பாதுகாப்புக்காக, துப்பாக்கி வைத்திருந்தேன். சம்பவ நாளன்று, எங்களிடையே ஏற்பட்ட சண்டையில் சாய்ராம், துப்பாக்கியால், என்னை நோக்கி சுட்டதில், கார் கண்ணாடி நொறுங்கியது. அதன்பின், துப்பாக்கியின் பின் பகுதியால், என் முகத்தில் அடித்தார். என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, அவரது கையிலிருந்த துப்பாக்கியை பறித்து சுட்டேன்' என தெரிவித்தார். 

விசாரணையின் போது, நீதிமன்றத்தில் இருந்த சாய்ராமிடம் நீதிபதி, துப்பாக்கி குண்டு பாய்ந்த இடத்தை காண்பிக்கும்படி கூறினார். தன் தொடையில் குண்டு பாய்ந்த இடத்தை சாய்ராம் காண்பித்தார். 

தம்பதியிடம் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, 'நீங்கள் இருவருமே படித்தவர்கள். நீங்களே இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்' என அறிவுரை கூறி, அம்சவேணிக்கு ஜாமின் வழங்கினார்.
கால்நடை பல்கலை துணைவேந்தர் மீது புகார் : விசாரணைக்கு 7 பேர் கமிட்டி அமைப்பு

பதிவு செய்த நாள்04ஜூன்
2017
23:46

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை துணைவேந்தர் மீதான, முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க, ஏழு பேர் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, வேப்பேரியில் செயல்படும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை துணைவேந்தர் திலகர் மீது, பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. முதல்வரின் தனிப்பிரிவு, கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர், செயலர் போன்றோருக்கும், சிலர் புகார்கள் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் அன்பழகன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், துறை ரீதியாக விசாரணை நடத்த, பல்கலையின் மேலாண் கமிட்டி முடிவெடுத்துள்ளது. இதற்காக, நாமக்கல் கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் குணசீலன் தலைமையில், ஏழு பேர் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியினர், துணைவேந்தர் முதல் ஊழியர்கள் வரை, அனைவரையும் தனித்தனியே விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, பதிவாளர் மதியழகன் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் என்ன?

l சென்னை கால்நடை அறிவியல் கல்லுாரி மற்றும் விடுதி வளாகத்தில், சாலைகள் அமைப்பதற்கான பணிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டியதால், டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

l பல்கலை மேலாண்மை குழு
கூட்டத்தை, விதிகளின்படி உரியகாலத்தில் கூட்டவில்லை. 

ராசிரியர்களுக்கான, சி.ஏ.எஸ்., பதவி உயர்வில், விதிகள் மீறப்பட்டுள்ளன
l எஸ்டேட் அதிகாரி பணியில், செயற்பொறியாளர் ஒருவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, முறைகேடாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது
l ஓசூர் கோழியின உற்பத்தி கல்லுாரியில், புதிய கட்டடங்கள் கட்டிய நிறுவனத்திற்கு, கூடுதலாக பல லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தணிக்கையிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு பல குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -
லஞ்சத்தை திரும்ப பெற 1100க்கு போன் செய்யுங்க!

பதிவு செய்த நாள்05ஜூன்2017 00:13

அமராவதி: அரசு சேவைகள் பெறுவதற்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். 1100 என்ற எண்ணுக்கு போன் செய்தால், கொடுத்த லஞ்சப் பணத்தை, அதிகாரிகள் திரும்ப கொண்டு வந்து தந்து விடுவர். இந்த புதிய சேவை ஆந்திராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு அமைந்துள்ளது. நாட்டில் அதிக அளவில் லஞ்சம் புழங்கும் மாநிலங்களில், கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது. இந்த களங்கத்தை துடைப்பதற்காக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
'பீப்பிள் பர்ஸ்ட்' என்ற பெயரில், மக்கள் குறை தீர்க்கும் புதிய அமைப்பை மாநில அரசு உருவாக்கியுள்ளது. இது குறித்து, அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:இந்த புதிய அமைப்பின் கீழ், 1100 என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம். அரசு சேவைக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க நேர்ந்திருந்தால், இந்த எண்ணில் புகார் கொடுக்கலாம். உடனடியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அதிகாரிகள் விசாரிப்பர். லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டு, அதை உடனடியாக, அந்த அதிகாரி திருப்பி கொடுத்தால், நடவடிக்கையில் இருந்து தப்பிப்பார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், இதுவரை, 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள், தாங்கள் வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அதிகாரி, தான் லஞ்சம் வாங்கிய, 10 பேருக்கு பணத்தை கொடுத்துள்ளார். இதுவரை, திருப்பி தரப்பட்ட தொகையின் அளவு, 500 அல்லது 1,000 ரூபாயாக இருந்தாலும், அதிகாரிகள் இடையே ஒரு பயத்தை இந்த திட்டம் உருவாக்கியுள்ளது. புரோக்கர்களும் இதில் அடங்குவர். லஞ்சம் வாங்கியதை அதிகாரி மறுத்தால், அது தொடர்பாக, தனியாக விசாரணை நடத்தப்படும்.அதே நேரத்தில் ஒருவர் தவறாக புகார் கொடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...