Monday, June 5, 2017

வெற்றுக் கூச்சலை பொருட்படுத்த மாட்டேன்: ஆளுநர் கிரண்பேடி

By -பா. சுஜித்குமார் | Published on : 05th June 2017 08:00 PM |



புதுச்சேரி: வெற்றுக்கூச்சலை நான் பொருட்படுத்த மாட்டேன் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

ஆளுநருக்கும், ஆளும் தரப்புக்கும் இடையே புதுவையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் முதல்வர் நாராயணசாமிக்கு 32 கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதனால் கொதிப்புற்ற முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவைியல் பேசுகையில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படக்கூடாது. இல்லையென்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.

இதற்கு பதில் தரும் வகையில் ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தனது கட்செவி அஞ்சலில் கூறியுளளதாவது: நான் வெற்றுக் கூச்சலை எல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நிறைய கூச்சல் எழுப்பப்படுகிறது. கூச்சலை ஏன் எழுப்புகின்றனர் எனத்தெரியும்.

புதுச்சேரிக்கும், அதன் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனிலும் தான் எனக்கு அக்கறை உள்ளது. புதுச்சேரியின் நலன்களை பேணவும், காக்கவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...