Monday, June 5, 2017

சபாஷ்.. இரு கண்களையும் தானம் செய்தார் நடிகர் விஜய்சேதுபதி!!
By: Essaki

Updated: Monday, June 5, 2017, 18:59 [IST]

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் கே.கே.நகரில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் இரண்டாவது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.



இதில் பேசிய கே.வி.ஆனந்த், 'திரைப்படத்துறைக்கு கேமரா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதைப் போன்று நமது உடலின் முக்கியமான உறுப்பு கண். கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது. ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் மிகச் சிறந்த பண்பு' என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், 'நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர். இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

நம் உடலின் முக்கிய அங்கமாக்த் திகழும் கண்ணைக் காக்கவும். இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...