Monday, June 5, 2017

தங்கும் அறையே முன்கூட்டியே காலி செய்தால் பணம் திரும்ப தரப்படும் : திருப்பதி தேவஸ்தானம்

TNN | Updated: Jun 4, 2017, 04:39PM IST




திருப்பதி : தங்கும் அறையை முன்கூட்டியே காலி செய்தால் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பணம் திரும்பதரப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிகமுக்கியமான கோவில் ஆந்திராவில் அமைத்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு தரிசனம் செய்ய வரும் மக்கள் தங்க திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான விடுதிகளை கட்டியுள்ளது.

இந்த தேவஸ்தான விடுதிகளில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலுக்கு வர இயலாமல் போகும் பக்தர்கள், அல்லது தங்களது வருகையை தள்ளிப்போடும் பக்தர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், தங்கும் அறைகள் எடுத்து தங்குவோர் 12 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 50 சதவீதமும், 6 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 25 சதவீதமும் பணம் திருப்பி தரப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...