Tuesday, September 12, 2017

Teachers, government employees keep off work in Salem, Erode

Teachers and government employees staging demonstration in front of the Salem Collectorate on Monday.  

To intensify agitation from today; functioning of schools affected in Erode

School teachers and government employees, including women, under the banner Joint Action Committee of Tamil Nadu Teachers’ Organisations and Government Employees Organisations (JACTTO-GEO), staged demonstration in front of the Collectorate here on Monday raising slogans highlighting charter of demands.
They demanded that the old pension scheme be reintroduced in place of the contributory pension scheme, removal of anomalies in the pay structure in the Seventh Pay Commission and implementation of the recommendation of the Eighty Pay Commission. Addressing the striking teachers and government employees, T. Govindan, member of the high level committee of JACTTO-GEO, said that the government had ignored their just demands and urged it to resolve the issues raised by them.
Mr. Govindan said that the JACCTO-GEO, which restricted Monday’s agitation with just a demonstration, will intensify the same on Tuesday, when the member will resort to picketing in different centres.
He said that the striking employees will give proper explanations to the notice issued on them by the government. The teachers and government employees will continue their strike till all their demands were met, he said.
The members of JACTTO-GEO also staged demonstration in front of the taluk office in Mettur town. The employees of the judiciary in the district, all members of the Tamil Nadu Judiciary Employees Association, staged a demonstration in front of the district court on Monday, in support of the strike of the JACTTO-GEO.
CITU extends support
Members of the CITU staged a demonstration in front of the Collectorate here on Monday to protest against NEET examinations.
They also demanded the government to hold negotiations with the striking school teachers and government employees under the banner JACTTO-GEO and solve the issue amicably.
C. Mayilvelan, district vice president of the CITU, led the demonstration. T. Udayakumar, district secretary of the CITU, R.Vairamani, state committee member, who spoke on the occasion said that the NEET examinations wend against the social justice system. They favour shifting of the education portfolio from the concurrent list to state list.
The speakers extended support to the JACTTO-GEO strike.
In Namakkal, the striking teachers and government employees, including women, staged demonstration on Park Road in the town on Monday.
Selvakumar, convener of the JACTTO-GEO, led the agitation.
Staff Reporter from Erode adds:
In Erode, the functioning of government offices and schools in the district remain affected as various department employees and teachers of government schools abstained from work and staged demonstration at Sampath Nagar.
The members of the organisations said that the during the election campaign, the party had promised to fulfil their demands and after coming to power, they had cheated them.
They said that their strike would be intensified if their demands were not met. Traffic was disrupted for over two hours due to their protest. In the absence of teachers, functioning of many schools was affected as students faced hardship due to the examinations that began on Monday.
They said that they would stage road blockade at district headquarters on Tuesday while they would stage protest from Wednesday.

Power shutdown today

There will be a power shutdown in the following areas between 9 a.m. and 5 p.m. on Tuesday as the TANGEDCO plans to undertake maintenance work at its Anaiyur substation:
Dinamani Nagar, Karisalkulam, Old and New Vilangudi, Meenakshi Nagar, Pandian Nagar, IOC Nagar, VMW Colony, Sangeeth Nagar, Chokkalinga Nagar, Koodal Nagar, Chelliah Nagar, Anaiyur, Sanjeevi Nagar, Pasingapuram, Vagaikulam, Koil Pappakudi Pirivu and Sikkandar Chavadi.

TN TOLL GATES

NAVODAYA SCHOOLS

Why anti-NEET protests are happening in Tamil Nadu despite SC ban

B Sivakumar| TNN | Sep 11, 2017, 14:36 IST




CHENNAI: Tamil Nadu is witnessing protests and rallies against the National Eligibility cum Entrance Test despite the Supreme Court ban on them. The protests were sparked by the death of S Anitha, an aspiring medical student in Ariyalur district, on September 1.

Anitha, a dalit girl who had scored 1176 out of 1200 marks in her Class XII state board examinations, committed suicide as she could not clear the NEET and study in a medical college in the state.

Tamil Nadu was exempted from the NEET last year, and it was widely anticipated that this year also it would be exempted. However, the NEET exemption didn't happen this year.

The Tamil Nadu government had reserved 85% of the seats to state board students in medical admissions. The Madras high court dismissed a government order for
reservation for state board students. Following this, the state government tried to promulgate an ordinance seeking an exemption from the NEET for a year.

However, it didn't get the support of the Centre. After a case was filed by Central Board of Secondary Education students in the Supreme Court, Anitha had impleaded herself in the case claiming that the NEET was against the interests of rural students. However, the Supreme Court stated that admissions should be made only based on the NEET.

School and college students, activists, NGOs and cadres of various political parties intensified their anti-NEET protests after Anitha's death. Roads were blocked, schools and colleges were closed.

Anti-NEET activists with or without political affiliations were showing their opposition by holding protests and raising slogans.

On Saturday, a day after the Supreme Court ordered a ban anti-NEET protests, students from classes VIII to XII at a Chennai Corporation school, blocked an
arterial road. They continued their protest despite threats from school principal that they would not be allowed to write their first-term exams.

The Supreme Court's order banning protests has had minimum impact in the state. All parties took umbrage at the last para of the Supreme Court order which allowed protests provided they did not affect daily life of people.




On Friday, a few hours after the Supreme Court banned the protests, the DMK-led opposition parties went ahead with a planned public meeting in Trichy against NEET.

The opposition parties led by the DMK have planned a statewide protest on September 13.

The AIADMK faction led by 'sacked' party deputy general secretary TTV Dhinakaran has called for a rally against the NEET in Trichy on September 16. Dhinakaran has appealed to party cadre and students to assemble on the Uzhavar Santhai ground in Trichy for a rally seeking permanent exemption for Tamil Nadu from the NEET.

TOP COMMENTReason not explained well in this article which is nothing but MONEY.. Earlier every college in TN used to loot money around 50L to 1 cr per seat by brokers and medical colleges depends on demand. N... Read MoreMahesh Neelakantan

Meanwhile, the BJP, which is trying to get a hold in the state, is planning to organise pro-NEET protests. The party wants to explain to the people the advantages of the NEET.
Govt staff, teachers protest delay in salary revision, launch indefinite strike

TNN | Updated: Sep 12, 2017, 00:01 IST

Chennai: A section of government employees and teachers in schools, colleges and universities started an indefinite strike on Monday protesting against the delay in implementing salary revision as per the seventh pay commission recommendations. In many districts, teachers boycotted classes and raised slogans against the government.

Political parties have criticized the government for trying to gag the teachers by threatening to invoke Essential Services Maintenance Act (ESMA) against them. But the protesters have decided to go ahead with their strike. They have threatened to intensify the agitation by staging demonstrations in front of district collectorates on Tuesday.

So far, more than 70 employee associations have had talks with the government committee on pay commission. But now, the government has appointed another former IAS official to hold talks with the associations. "This shows that the government is not interested in implementing the pay commission recommendations," said Tamil Nadu Government Employees' Association general secretary M Anbarasu.

"We have three main demands. Reversion to the old pension system, granting minimum pension to more than 3.5 lakh workers employed in various welfare programmes like noon-meal and anganwadi and filling up of 2 lakh vacancies in various departments," said commercial tax officer and a member of Tamil Nadu Government Employees' Association, R Tamil Selvi.

The demands of the employees are as old as 2003. "It is not to pressurise the government. We have been fighting since 2003 and then AIADMK government did not yield to our demands. The DMK government relented and implemented some of our demands but the main ones mentioned above have been on paper as both the parties did not implement it," said Tamil Selvi.

While many government offices in Chennai as well as districts functioned with less number of employees, functioning of schools and colleges were affected in some areas as both teachers and students were on strike.

Students boycotted classes protesting against NEET.
MBBS students attempt protest at Annamalai univ

TNN | Sep 12, 2017, 00:11 IST

Cuddalore: Tension prevailed at Annamalai University, Chidambaram, on Monday morning, after a section of MBBS students from Rajah Muthiah Medical College and Hospital attempted to stage a protest within the campus demanding that the state take over the medical college-cum-hospital.

The students dispersed after a police team, which reached the university, informed them that the Supreme Court had issued them a warning not to hold protests within the campus.

The Tamil Nadu government in 2013 took over administrative control of the Annamalai University following widespread financial and administrative irregularities and appointed an IAS officer as the administrator of the university. However, Rajah Muthiah Medical College and Hospital affiliated to Annamalai University continued to function under self-financing mode.

Students of the college launched an indefinite strike on September 1 demanding that the government take over the college. They argued that the college, affiliated to a state university, charged exorbitant fees (Rs 4.5 lakh per annum for MBBS course), while other state-run colleges charged only a few thousand rupees per annum for the course.

The college administration said the government took control of the university and not the college, which continued to function under self-financing mode. The administration also said the Madras high court passed an order in favour of the college administration regarding the fee structure after a section of students approached the court.

The students have filed an appeal before the Supreme Court. " We can't take any action as the matter is pending before the Supreme Court. We expect a verdict soon," said a spokesperson of the college administration.
Girl plays Candy Crush on cellphone as Chennai doctors remove her brain tumour

Pushpa Narayan| TNN | Updated: Sep 11, 2017, 23:36 IST

HIGHLIGHTS

The awake surgery is done in nearly 2% of brain tumour patients who are adults, but is rare in children

The surgery was performed in SIMS Hospital in Chennai

The girl was discharged from hospital two days after the surgery

(Representative image)

CHENNAI: When surgeons were removing a tumour from the most sensitive part of a 10-year-old girl's brain in a Chennai hospital last Wednesday, she was playing her favourite game on her uncle's cellphone. By staying awake, talking and moving her limbs, the girl gave her doctors the confidence that they were on the right track.

Nandini, a Class V student and a Bharatanatyam dancer, was brought to SIMS Hospital with complaints of sudden onset of fits. Brain scan revealed that she had a tumour in an important area of brain which controls the movement of the left half of the body, including face, hand and leg.

SIMS Hospital neurosurgeon Dr Roopesh Kumar told her parents that if the tumour grew further, it could cause paralysis or could be fatal.

In a conventional procedure, called craniotomy, a disc of bone is removed from the skull using special tools to give surgeons access to the brain when the patient is unconscious.

"I did not want to go in for the conventional method of removing the tumour. It was in the sensitive part of the brain and if we accidentally touched a wrong nerve, it could cause complete paralysis of left half of her body," he said.

The doctors decided to do the same procedure by keeping the patient awake and alert. "That way, I will know exactly which areas of your brain control those functions and avoid them," Dr Kumar said.

The awake surgery is done in nearly 2% of brain tumour patients who are adults, but is rare in children, said SIMS Institute of Neurosciences director Dr Suresh Bapu. The patients feel no pain during the surgery since the neurons in the brain don't have pain receptors.

While her parents were initially hesitant, the surgeons took the help of the patient's uncle in Puducherry, who is a doctor, to convince them.

"I was in the theatre when the removed the tumour. Nandini was playing Candy Crush on my cellphone. She moved her hands and legs when we asked her to do so. The surgeon had to make sure that the point he is operating on does not affect her mobility. She was brave," said her uncle.

The family told doctors that they were worried about the post-surgical stress but doctors said studies from medical literature showed that such surgeries were safe in children.

"It's rare in children, but we did have enough evidence," he said.

In June 2017, World Neurosurgery, a medical journal, published the psychiatric and psychological impact of the awake brain tumour surgeries in children after following up on case sheets of seven children -- aged between 8 and 16 -- post surgery.

The results showed that none of the children had initial psychiatric problems. While parents experienced anxiety, no child showed signs of post-traumatic stress disorder.

Such studies gave confidence to the entire team, said neuro anesthetist Dr Sudhakar Subramaniam, who stood by the patient side during the three and a half hour surgery.

At the end of the procedure, she was moving her hands and legs. She was discharged from hospital on Friday, two days after the surgery.

Nandini told the doctors that she would resume Bharatanatyam practice in a few days.

அச்சம் தவிர்!

By மாலன்  |   Published on : 12th September 2017 03:32 AM  |   
கலை உலக நட்சத்திரங்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை இன்று கவலைப்படுகிற ஒரு விஷயம் நீட். ஆனால் அவர்கள் கவலைக்குக் காரணங்கள் உண்டா? பொதுவாக காபிக் கடை கலந்துரையாடல்களிலும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடக விவாதங்களிலும் வைக்கப்படும் கேள்விகளை ஆராய்ந்த போது எனக்குக் கிட்டிய பதில்கள் இவை.
நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களே?
சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆண்டில் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்ற ஆண்டைவிட அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரிலிருந்து சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றவர்கள் 4 பேர். ஆம் வெறும் நான்கே பேர். இந்த ஆண்டு 21 பேர்.
மாவட்ட வாரியாகத் தகவல் இதோ. அடைப்புக் குறிக்குள் இருப்பவை சென்ற ஆண்டு பெற்ற இடங்கள் சென்னை 471 (113), வேலூர் 153 (54), கோவை 182 (102), நெல்லை162 (83), கடலூர் 114 (40), மதுரை 179 (110), காஞ்சிபுரம் 140 (72), கன்னியாகுமரி 135 (69), தூத்துக்குடி 79 (25), திண்டுக்கல் 75 (27), திருவண்ணாமலை 67 (27), திருவாரூர் 28 (2), சிவகங்கை 39 (14), நீலகிரி 24 (2), திருப்பூர் 105 (83), தேனி 46 (25), விருதுநகர் 66,(47), நாகப்பட்டினம் 28,(10), அரியலூர் 21 (4), சேலம் 192 (180), புதுக்கோட்டை41 (32), ராமநாதபுரம் 39 (31), தஞ்சாவூர் 97 (89), விழுப்புரம் 93 (88), கரூர் 35 (32).
சில மாவட்டங்கள் பின் தங்கிவிட்டன. திருவள்ளூர் 158 (185), திருச்சி 130 (184), பெரம்பலூர் 23 (81), ஈரோடு 100 (230), தர்மபுரி 82 (225), கிருஷ்ணகிரி 82 (338), நாமக்கல் 109 ( 957). தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்ற ஆண்டு மொத்தமுள்ள 3,377 இடங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு இடங்களை நாமக்கல் மாவட்டம் பெற்றது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து மாத்திரம் 957 பேர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்கள். திருவாரூர், அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே இடம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு பரவலாக எல்லா மாவட்டங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. அதாவது வாய்ப்பு பரவலாகி உள்ளது. நாமக்கல் முட்டை "நீட்'டிடம் வேகவில்லை!
நீட் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்குத்தான் சாதகமானது என்கிறார்களே?
சென்ற ஆண்டு திருவாரூர் பெற்ற இடங்கள் 2 இந்த ஆண்டு 28. அதாவது 14 மடங்கு அதிகம். நீலகிரி சென்ற ஆண்டு 2 இந்த ஆண்டு 24. அதாவது 12 மடங்கு அதிகம். சிவகங்கை, கடலூர் ஆகியவை ஏறத்தாழ மூன்று மடங்கு. காஞ்சிபுரம், தேனி இவை ஏறத்தாழ இரண்டு மடங்கு. இவை நகரங்கள் நிறைந்த மாவட்டங்களா?
பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் சொல்கிறார்களே?
ஏற்கனவே இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதாவது மொத்த இடங்களில் 69% இடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் சேர முடியும். ஆனால் அவர்கள் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தப் பிரிவு மாணவர்களுக்கு அது கடினமானதல்ல என்பதை நீட் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதலிடம் பெறுபவர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இரண்டாம் இடம் பெற்றவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மூன்றாம் இடம் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவருக்கு. முதல் பத்து இடங்களில் ஆறு இடங்களைப் பிடித்தவர்கள் பிற்பட்ட வகுப்பினர். இரண்டு இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. இரண்டு இடம் மற்ற பிரிவினருக்கு.
இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் முன்பு இருந்ததைவிடப் பலன் பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாதபோது அவர்கள் பெற்ற இடங்கள் 149. இந்த ஆண்டு 164. அதேபோல பட்டியல் இனத்தவர், அதற்குள் உள் ஒதுக்கீடு பெற்ற அருந்ததியர், பழங்குடியினர் இவ்ர்களுக்கும் பெரிய இழப்பு இல்லை.
இந்தாண்டு தேர்வு பெற்றவர்களில் பெரும்பான்மையோர் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள் எனச் சொல்லப்படுகிறதே?
அப்படிச் சொல்கிறவர்கள் ஆதாரம் எதையும் கொடுப்பதில்லை. மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்களோடு, கல்விச் சான்றிதழ், நீட் மதிப்பெண்கள், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். ஆனால் பயிற்சி பெற்றீர்களா என்ற கேள்வி விண்ணப்பபடிவத்தில் கிடையாது. அப்படி இருக்கும் போது எத்தனை பேர் பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவலைத் துல்லியமாகப் பெற இயலாது. அப்படிப் பெற வேண்டுமானால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள ஒவ்வொரு மாணவரையும் பேட்டி கண்டு தகவல் திரட்ட வேண்டும். அப்படி ஒரு நேர்காணலோ, சர்வேயோ நடந்ததாகத் தெரியவில்லை.
+2 மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடத்தப்பட்ட போது +2 மாணவர்களில் சிலர் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து டியூஷன் படித்தார்களே? அப்போது மட்டும் அதில் சமநிலை இருந்ததா?
நீட் தேர்வு பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறதா?
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 15% இடங்களை நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்ளலாம். நிர்வாகத்தினர் இந்த இடங்களை வசதியுள்ள மாணவர்களுக்கு விலைக்கு விற்று வந்தனர். கடந்த ஆண்டு இடம் ஒன்றுக்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை என விலை வைத்து விற்கப்பட்டது. இந்தப் பணம் பெரும்பாலும் ரசீதுகள் ஏதும் கொடுக்கப்படாமல் ரொக்கமாகவே பெறப்பட்டு வந்தது. அதனால் அவை கருப்புப் பணமாகவும் குவிந்து கொண்டிருந்தன.
ஆனால் உச்சநீதிமன்றம் நிர்வாக இடங்களில் சேர்வதானாலும் நீட் தேர்வு எழுதி அதில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டும் என்று சொல்லிவிட்டது. அதன் விளைவுகளில் ஒன்று இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 974 இடங்கள் காலியாக உள்ளன. இது அவர்களிடம் உள்ள இடங்களில் 90 சதவீதம்
மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களை சி.பி.எஸ்.இ. திட்டத்தின் கீழ் தேர்வு எழுதச் சொன்னது சரியா?
நீட் கேள்வித்தாள்கள் ஒரு பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுவதில்லை. பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் மத்திய கல்வி கவுன்சில் (ouncil Board of School Education - COBSE), தயாரித்துள்ள பாடத்திட்டத்தையும், மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education - CBSE) கல்வி, ஆய்வு, பயிற்சி ஆகியவற்றிற்கான தேசிய கவுன்சில் (National Council of Education Research and Training - NCERT) ஆகியவை தயாரித்துள்ள பாடத்திட்டம் ஆகியவற்றையும் ஆராய்ந்து தனது கேள்வித்தாளைத் தயாரிக்கிறது. அதில் 11-ஆம் வகுப்புப் பாடங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவை முன் கூட்டியே இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டில் நடக்க உள்ள தேர்வுக்கான பாடத்திட்டம் இப்போதே இணைய தளத்தில் உள்ளது. (https://www.sarvgyan.com/articles/neet}syllabus)
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய பின்னும் இன்னுமொரு தேர்வு எழுத வேண்டும் என்பது நியாயமா?அப்படியானால் +2வில் எடுத்த மதிப்பெண்களுக்கு அர்த்தமில்லாமல் போகிறதே?
குறைவான இடங்கள் அதிகமான விண்ணப்பதாரர்கள் என்று வரும் போது ஏதோ ஒரு வகையான வடிகட்டல் தேவைப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும். காலியாக இருக்கும் 10 இடங்களுக்கு 500 பேர் விண்ணப்பித்தால் என்ன செய்வார்கள்? ஒரு தகுதிகாண் தேர்வு வைப்பார்கள். அது கல்லூரி பிளேஸ்மெண்ட் ஆனாலும் சரி அரசுப் பணியானாலும் சரி, அதுதானே வழக்கம்..
நீட் என்பது ஒரு தகுதி காண் தேர்வு. இதே போன்று தகுதி காண் தேர்வு பல கல்விகளுக்கும் நடத்தப்படுகிறது. ஆனால் நீட் தேர்வில் சில சீர்திருத்தங்கள் தேவை. அதாவது மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக தர வரிசைப் பட்டியலை நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மாத்திரம் கொண்டு தீர்மானிக்காமல், +2வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் (weightage) கொடுத்து தயாரிக்கலாம்.
நாம் வாழும் சூழல் போட்டி நிறைந்தது. பக்கத்து பெஞ்சுக்காரனோடு போட்டி போடுகிற காலங்கள் முடிந்து விட்டன. உலகமயமான ஒரு காலகட்டத்தில் பக்கத்து மாநிலத்துக்காரர்களோடு அல்ல, பக்கத்து நாட்டினரோடு மட்டுமல்ல, அமெரிக்கர்களோடு, ஜப்பானியர்களோடு, ஜெர்மானியரோடு போட்டியிடும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரலாம். கல்வியில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கூட.
போட்டிகளை எதிர் கொள்ளும் திறனையும் கல்வியையும் நம் குழந்தைகளுக்கு ஊட்டியாக வேண்டும். அதைவிட முக்கியமாக தோல்விகளை எதிர் கொள்ளும் மனத் திடத்தை வளர்த்தாக வேண்டும். வாழ்வில் தோல்விகளை எதிர் கொள்ளாத மனிதர்களே கிடையாது. ஆனால் நாம் நம் குழந்தைகளை சின்ன ஏமாற்றத்தைக் கூட எதிர்கொள்ள முடியாதவர்களாக வளர்க்கிறோம்.
நினைவில் கொள்க: தீதும் நன்றும் பிறர் தர வாரா.

மனிதநேயம் தேவை


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 12th September 2017 03:33 AM  
மனிதாபிமானம் என்ற வார்த்தை மனிதர்களிடம் காட்ட வேண்டிய நேசத்தைக் குறிக்கிறது.
எந்த ஒரு மனிதனின் இதயத்தில் இயற்கையிலேயே ஈவு, இரக்கம், அன்பு ஆகியவை ஊற்றெடுக்குமோ அவரிடத்தில் மனிதநேயம் இருக்கும். அப்படிப்பட்டவரின் நேசம் மற்ற மனிதர்களிடத்து ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு பார்த்து வெளிப்படாது.
அப்படிப் பாகுபாடு பார்த்து அன்பு காட்டுபவர்கள் மனிதர்களும் அல்லர். அவர்களின் மனதில் தம் சமூகம் சாராத மக்களின் மீது துவேஷமும், வன்மமுமே நிறைந்திருக்கும்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் வள்ளலார். ஓரறிவு உயிர்களிடம் இத்துணை அன்பு காட்டவேண்டுமென்றால், ஆறறிவு படைத்த மனிதர்களிடம் எத்துணை நேசம் காட்ட வேண்டும் என்பது நம் அறிவுக்கு எட்ட வேண்டும்.
மனிதநேயதிற்கென எல்லைகள் கிடையாது. பசித்தோருக்கு உணவளித்தல், ஆடை இல்லாதோருக்கு ஆடை அளித்தல் போன்ற செயல்கள் மனிதநேயத்தின் வெளிப்பாடு. சக மனிதரைப் பார்த்து நேசத்துடன் புன்னகைப்பது குறைந்தபட்ச மனிதநேயம்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உவகை கொண்ட கணியன் பூங்குன்றனாரின் மனிதநேயம் எல்லைகள் தாண்டியது. எந்நாட்டினர் என்றாலும் என் இனம் என்பது, சுருங்கி என் நாடு, என் மக்கள், என் மதம், என் மொழி, என் ஊர் என்று இன்னும் சுருங்கி நான், எனது குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள் ஒடுங்கி விட்ட மனிதநேயம், இன்னும் சில காலங்களுக்குள் நான், எனது தேவை, என் நலம் என்று ஒரேயொரு ஒரு புள்ளியில் நின்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உள்நாட்டுப் போர்களினால் இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மனிதநேயம் சிதைந்து போனதென்றால், வளர்ந்த நாடுகளின் பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு, போன்றவற்றால் பாலஸ்தீனம் உள்ளிட்ட நலிந்த நாடுகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள். பிரிட்டனில் இருந்து செயல்படும் மனிதஉரிமை அமைப்பு, உள்நாட்டுப் போரினால் சிரியாவில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்
துள்ளது.
இம்மக்கள் அந்நிய நாட்டு மண்ணில் அகதிகள் முகாமில் தங்கும் அவல நிலையையும், கடல் மார்க்கமாக அண்டை நாடுகளுக்குச் செல்லும் பொழுது நீரில் மூழ்கி இறந்து போனதையும் செய்தித்தாள்களில் படித்தோம்.
அலைகளின் தாக்குதல்களில் சிக்கிய மீன் குஞ்சுபோல, கரையில் சடலமாக ஒதுங்கிக் கிடந்தவர்களின் புகைப்படம் நம் மனதை பதைபதைக்க வைத்தது. இப்பொழுது மியன்மரில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறையும் மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவால்தான்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்பாக முகமூடியிடப்பட்ட, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் இருப்பது போன்ற ஒளிப்பதிவுகளில் மண்டியிட்டது கைதிகள் மட்டுமா? மனிதநேயமும்தான்.
அடிமைகளிடமும், கைதிகளிடமும் பரிவும், பாசமும் காட்ட வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் சொல்லும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்படும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்.
தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுக்கமாக மேம்படும்.
மனிதநேயம் என்னும் விதை முதலில் வீட்டில் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட்டு தொடங்க வேண்டும். தான் காயப்படும்பொழுது தனக்கு வலிப்பது போல, மற்றவர்களைக் காயப்படுத்தும் பொழுது அவர்களுக்கும் வலிக்கும் என்பதை இளம் பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கும் பொழுது மனிதநேயம் அவர்களின் நெஞ்சங்களில் மலர ஆரம்பிக்கும்.
தான் விரும்பிய பொருள் அல்லது அன்பு கிடைக்கவில்லை என்றால் அந்தப் பொருளையோ, அன்பை மறுத்த மனிதரையோ வெறுக்கவோ, வெறி கொண்டு கொலை செய்யவோ மனம் துணியாது. சில பெற்றோர்களின் மனதில் மனிதநேயம் மரித்துப் போவதால் தாங்கள் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளை கருணைக் கொலை செய்வதற்கு நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.
வீடுகள் மட்டுமின்றி, கல்விக் கூடங்களும் மாணவர்களுக்கு மனிதநேயத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறுவதால் இன்று பள்ளிகளிலேயே மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேறுகின்றன.
மனிதநேயமற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கலவரப் பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஊடகங்கள் திரும்பத், திரும்பக் காட்டுவதால் அதனைப் பார்க்கும் மக்களின் உணர்சிகள் தூண்டப்படும்.
குற்றம் செய்பவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் மதம்,சமூகம் ஆகியவற்றை குறிப்பிடுவது நிலைமையை இன்னும் மோசமாகவே ஆக்கும். துவேஷத்தைப் பரப்பும் வகையில் அரசியல்வாதிகளோ, சமூக விரோதிகளோ பேசும் பேச்சுகளால் வன்முறை பெரிதாகி, மதக் கலவரமாக வெடிக்கும்.
ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டால் அசம்பாவிதங்களை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஒவ்வொருவரும் மனிதநேயம் தழைப்பதற்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி: மருத்துவ விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு


By DIN  |   Published on : 12th September 2017 02:59 AM  |   
ஜாக்டோ -ஜியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்புகளை எடுப்பதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒருபிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்குச் செல்லாமல் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் கட்டுப்பாடுகள்: ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடங்கிய நாளில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாதாரண விடுப்புகளை எடுக்கக்கூடாது என்று முதலில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒருபகுதியினர் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
போராட்டக் காலம் முடிவடையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகள் எதுவும் கோரக் கூடாது. மேலும், மருத்துவ விடுப்புகளுக்கு உடனடியாக அனுமதி தரப்படமாட்டாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ விடுப்பு தொடர்பான விண்ணப்பங்கள் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்படும். குழு பரிசீலித்து விடுப்பு அளிக்கலாம் என ஒப்புதல் கொடுத்த பிறகே மருத்துவ விடுப்புக்கு அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1.25 லட்சம் பேர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக அரசால் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை பணி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.25 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


By DIN  |   Published on : 12th September 2017 02:58 AM  | 
maduraicourt
Ads by Kiosked
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தடையில்லாச் சான்று வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே தமிழகத்தில் ஜவாஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 ஆம் வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைப் பதிவு செய்த நீதிமன்றம், இந்த வாதத்தை நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதே போல, நவோதயா பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் தெரிவிக்கையில், ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தாற்காலிக கட்டடத்தில் பள்ளி இயங்கலாம் என விதி உள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு, பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.20 கோடிவழங்கும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் உறுதி அளித்துள்ளார். இது தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை மீறும் வகையில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதற்கான அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளியே தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமையாததற்கு காரணம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் கல்வி உதவித் தொகைக்கான நிதி ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை


By DIN  |   Published on : 12th September 2017 05:03 AM  |   
AadharCard
Ads by Kiosked
ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தென் மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறை அதிகாரிகளும், செயலர்களும் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் பங்கேற்றார்.
இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதா கிருஷ்ண ராவ், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.

கோரக்பூர் குழந்தைகள் மரணம்: மயக்க மருந்தியல் மருத்துவர் நீதிமன்றத்தில் சரண்


By DIN  |   Published on : 12th September 2017 02:28 AM 
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ், நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர் சிறையிலடைக்கப்பட்டார். இதனிடையே, மருத்துவர் சதீஷை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப் போவதாக உத்தரப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோரக்பூரில் செயல்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலை இச்சம்பவம் உருவாக்கியது. மருத்துவமனையில் பிராண வாயு உருளைகள் போதிய அளவில் இருப்பு இல்லாததே குழந்தைகள் இறப்புக்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க மாநில தலைமைச் செயலர் ராஜீவ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சம்பவத்தை விசாரித்த அக்குழு, பாபா ராகவ் மருத்துவமனை முன்னாள் தலைவர் மருத்துவர் ராஜீவ் மிஸ்ரா, மயக்க மருந்தியல் துறை முன்னாள் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கோரக்பூரில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை நேரில் சரணடைந்தார்.
இதையடுத்து, மருத்துவர் சதீஷை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதேவேளையில் இரு நாள்கள் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பருக்குள் கணினி மயமாக்கப்படும்: சு.ஜவஹர்


By DIN  |   Published on : 12th September 2017 02:44 AM  |   
meeting
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவஹர். (கீழ் வரிசையில்) கூட்டத்தில் கலந்துகொண்ட அரசுத் துறை
Ads by Kiosked
மாநிலம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலாளரும், ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினி மயமாக்குதல் திட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து சு.ஜவஹர் பேசியதாவது:
மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இதில், தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக் கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.288.91 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 23, 648க்கு மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நடப்பு வரவினை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிட்டல், விரல் ரேகைப் பதிவுமுறைப்படி தகவல்கள் உறுதிப்படுத்து வதன் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் அரசுக்கு விரைந்து கிடைக்கும்.
இதனால், தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுவ தோடு, சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் ஆகியவை அவ்வப்போது விரைந்து பதியப்படும்.
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வரையில், அவர்களது விவரங்கள் பதியப்படுவதால், பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப் பதிவேடுகள் மாற்றப்படுவது தவிர்க்கப்படும். மேலும், பணிப்பதிவேடு காணாமல் போகாது, பணி மாறுதலை விரைந்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும்.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை, ஈரோடு, திருவண்ணா மலை மாவட்டங்களில் பணிப் பதிவேடு கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 31,219 அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு களும் விரைவில் கணினிமயமாக்கப்படும். எனவே, இதர மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கருவூலம், கணக்குத்துறை இணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:12

    வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. 

    இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.

    கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
    கூறினர்.
    கோவை சிறையில் தொடரும் உயிரிழப்பு! : 13 நாளில் 4 பேர் பலி; உணவில் ஊழல் என குற்றச்சாட்டு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    21:55

    கோவை: கோவை மத்திய சிறையில், 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர்; சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவில் ஊழல் நடப்பதால், ஊட்டச்சத்து குறைந்து, உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 1,800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், உடல்நலக் குறைவால் கைதிகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, கோவை மத்திய சிறையில் நடக்கும் உணவு ஊழல் தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

    சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிந்தாமணி மூலம், உணவு பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுகின்றன. எப்.சி.ஐ., குடோனில் இருந்து அரிசி பெறப்படுகிறது. 1,800 கைதிகளுக்கு நாள்தோறும், 200 கிலோ பருப்பு வழங்க வேண்டும். ஆனால், 20 - 25 கிலோ தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று, வேர்கடலை வெறும், 20 சதவீதம் தான் வழங்குகின்றனர். எண்ணெய், காய்கறி, கோழிக்கறி என, அனைத்திலும் மிகவும் குறைந்த அளவு தான் வழங்குகின்றனர்.கைதிகளை பரிசோதிக்கும் சிறை மருத்துவமனை டாக்டர்கள், சத்து குறைபாடு உள்ளதாக கூறுகின்றனர். 

    உணவில் போதுமான சத்துகள் இல்லாததால், கைதிகளுக்கு வயிற்றுவலி, வாந்தி, பேதி, நெஞ்சு வலி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற வியாதிகள்
    ஏற்படுகின்றன.சிறையின் உள்ளே, உணவு பொருட்களை சப்ளை செய்ய வருவோர், 'பில்' கொண்டு வருவதில்லை. இதனால், எத்தனை கிலோ பொருட்கள் உள்ளே செல்கின்றன என்பதும் தெரியாது. இந்த உணவு ஊழல் குறித்து, சிறைத் துறை உயரதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    'புகாரில் உண்மை இல்லை'

    கோவை சிறை, எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''சிகிச்சையில் இருந்த கைதிகள் தான், உயிரிழந்துள்ளனர். சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இல்லை. கைதிகளின் உடல்நிலை குறித்து, முகாம் நடத்தி, சோதனை செய்யப்படுகிறது. உணவில் ஊழல் என்பதில் உண்மையில்லை. கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
    தரமில்லா பாதுஷா விற்பனை : ரூ.50 ஆயிரம் இழப்பீடு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    19:50

    சென்னை: தரம் குறைந்த பாதுஷா விற்ற கடைக்காரர், பாதிக்கப்பட்டவருக்கு, வழக்கு செலவு தொகையுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சூளையைச் சேர்ந்த, வேணுகோபால் தாக்கல் செய்த மனு: சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள, இனிப்பு மிட்டாய் கடையில், 250 கிராம் பாதுஷா வாங்கினேன். வீட்டிற்கு சென்று, அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், வாந்தி, மயக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து, நேரில் புகார் கூறியும், என் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், இனிப்பு கடைக்காரர் கண்டு கொள்ளாததால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, இனிப்பு மிட்டாய் கடைக்காரர் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து, நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில், 'பாதுஷா தரமற்றது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரரின் சேவையில் குறைபாடு உள்ளது. அதனால், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும், அவர் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அரசு டாக்டர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    23:41

    மதுரை: அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் மாநில தலைவராக மதுரை டாக்டர் கே.செந்தில் தேர்வு செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் அரசு டாக்டர்கள் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், மாநில தலைவராக மதுரை டாக்டர் கே.செந்தில், செயலாளர் கோவை ரவிசங்கர், பொருளாளர் சிவகங்கை கே.ராமு, துணைத் தலைவர்களாக சீனிவாசன், அன்பழகன், இணை செயலாளர்களாக புலிகேசி, சுந்தர்ராஜன் ஆகியோர் தேர்வு
    செய்யப்பட்டனர்.
    வேலைநிறுத்தம் ஏன்? பஸ் ஊழியர்கள் விளக்கம்
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:41

    சென்னை: அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான், 24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: பஸ் ஊழியருக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியரிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, 2,200 கோடி ரூபாய்; பங்களிப்பு ஓய்வூதியம், 1,700 கோடி ரூபாய்; பணிக்கொடை நிதி, 750 கோடி ரூபாய்; கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்தம் செய்த, 300 கோடி ரூபாய்; விடுப்பு சம்பளம், 300 கோடி ரூபாய், என, 5,250 கோடி ரூபாய் வழங்க, அரசு முன்வரவில்லை. ஓய்வு பெற்றோருக்கான, 800 கோடி ரூபாய்; பேச்சுக்கு பின், நிர்வாகம் செலவழித்த தொகை, 600 கோடி ரூபாயை வழங்க, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Google launches Credit Card with Axis Bank —

    Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...