Tuesday, September 12, 2017

வேலைநிறுத்தம் ஏன்? பஸ் ஊழியர்கள் விளக்கம்
பதிவு செய்த நாள்11செப்
2017
22:41

சென்னை: அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான், 24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: பஸ் ஊழியருக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியரிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, 2,200 கோடி ரூபாய்; பங்களிப்பு ஓய்வூதியம், 1,700 கோடி ரூபாய்; பணிக்கொடை நிதி, 750 கோடி ரூபாய்; கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்தம் செய்த, 300 கோடி ரூபாய்; விடுப்பு சம்பளம், 300 கோடி ரூபாய், என, 5,250 கோடி ரூபாய் வழங்க, அரசு முன்வரவில்லை. ஓய்வு பெற்றோருக்கான, 800 கோடி ரூபாய்; பேச்சுக்கு பின், நிர்வாகம் செலவழித்த தொகை, 600 கோடி ரூபாயை வழங்க, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NMC adds 950 MBBS seats to state roster Clears Decks For 9,911 More Seats In India

NMC adds 950 MBBS seats to state roster Clears Decks For 9,911 More Seats In India  TIMES NEWS NETWORK 16.07.2026 Chennai : Medical colleges...