Tuesday, September 12, 2017


9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பருக்குள் கணினி மயமாக்கப்படும்: சு.ஜவஹர்


By DIN  |   Published on : 12th September 2017 02:44 AM  |   
meeting
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவஹர். (கீழ் வரிசையில்) கூட்டத்தில் கலந்துகொண்ட அரசுத் துறை
Ads by Kiosked
மாநிலம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலாளரும், ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினி மயமாக்குதல் திட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து சு.ஜவஹர் பேசியதாவது:
மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இதில், தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக் கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.288.91 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 23, 648க்கு மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நடப்பு வரவினை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிட்டல், விரல் ரேகைப் பதிவுமுறைப்படி தகவல்கள் உறுதிப்படுத்து வதன் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் அரசுக்கு விரைந்து கிடைக்கும்.
இதனால், தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுவ தோடு, சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் ஆகியவை அவ்வப்போது விரைந்து பதியப்படும்.
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வரையில், அவர்களது விவரங்கள் பதியப்படுவதால், பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப் பதிவேடுகள் மாற்றப்படுவது தவிர்க்கப்படும். மேலும், பணிப்பதிவேடு காணாமல் போகாது, பணி மாறுதலை விரைந்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும்.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை, ஈரோடு, திருவண்ணா மலை மாவட்டங்களில் பணிப் பதிவேடு கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 31,219 அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு களும் விரைவில் கணினிமயமாக்கப்படும். எனவே, இதர மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கருவூலம், கணக்குத்துறை இணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    No comments:

    Post a Comment

    NMC adds 950 MBBS seats to state roster Clears Decks For 9,911 More Seats In India

    NMC adds 950 MBBS seats to state roster Clears Decks For 9,911 More Seats In India  TIMES NEWS NETWORK 16.07.2026 Chennai : Medical colleges...