Sunday, February 8, 2015

கஞ்சா போதையில் 'மட்டை'யானவருக்கு கொள்ளி: நெருப்பு சுட்டதும் எழுந்து ஓட்டம் பிடித்தார்



வேலூர்: கஞ்சா போதையில், 'மட்டையானவர்' இறந்ததாக நினைத்து, அவரது உடலை, தகன மேடையில் வைத்து, மகன் கொள்ளி வைத்தார்; நெருப்பு சுட்டதும், போதை ஆசாமி, எழுந்து ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சுவாரஸ்ய தகவல்:
வயிற்றுவலி:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறையைச் சேர்ந்தவர் விவசாயி செண்பகராயன், 50. இவர், வயிற்றுவலிக்காக, அதே பகுதியை சேர்ந்த நாட்டு வைத்தியர் மனோகரன், 55, என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, செண்பகராயனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக, மனோகரனிடம் லேகியம் வாங்கி சாப்பிட்ட பின், வீடு சென்று தூங்கினார். நேற்று காலை 7:00 மணிக்கு, செண்பகராயனை, மனைவி அஞ்சையம்மாள் எழுப்பினார். அவர் எழுந்திருக்காததால், அதிர்ச்சியடைந்த அஞ்சையம்மாள், நாட்டு வைத்தியர் மனோகரனை அழைத்து வந்தார். மனோகரன், செண்பகராயனை சோதித்துப் பார்த்து, இறந்து விட்டதாக கூறினார். பின், பகல் 12:00 மணிக்கு, செண்பகராயனை தகனம் செய்ய, அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். இறுதிச் சடங்கு முடிந்த பின், செண்பகராயன் உடலுக்கு, மகன் சீத்தாராயன் கொள்ளி வைத்தார்.
பயந்த உறவினர்கள்:

அப்போது, திடீரென அலறியபடி, விறகு கட்டைகளை தள்ளிவிட்டு, செண்பகராயன் வெளியே ஓடினார்; பயந்த உறவினர்கள், நான்கு பக்கமும் சிதறி ஓடினர். அவர்களை கூப்பிட்ட செண்பகராயன், தான் உயிருடன் இருப்பதாக கூறினார். நிம்மதியடைந்த உறவினர்கள், நாட்டு வைத்தியர் மனோகரனை பிடித்து விசாரித்தனர். இதில், மனோகரன், லேகியத்தில் கஞ்சா பவுடர் கலந்து விற்பனை செய்வது தெரியவந்தது. செண்பகராயனுக்கு கஞ்சா கலந்த லேகியத்தை கொடுத்ததால், போதையில் மயங்கிக் கிடந்த அவர், இறந்து விட்டதாக கருதி உள்ளனர். பின், மனோகரனை மரத்தில் கட்டி வைத்து, மக்கள், 'பின்னி' எடுத்தனர். எல்லாம் முடிந்தபின் வந்த திருப்பத்தூர் போலீசார், வைத்தியரை கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...