Friday, February 20, 2015

ரயில் இருக்கு.. ஆனா பெட்டியக் காணோமே.. பயணிகளின் தவிப்பு



சென்னை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரான ஏற்காடு சூப்பர் பாஸ்ட் ரயிலில் ஊழியர்களின் அஜாக்ரதை காரணமாக ஒரு பெட்டியே இணைக்கப்படாமல், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

அடிக்கடி ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்கனவே இந்த அனுபவம் நேர்ந்திருக்கலாம். என்றாலும் இதனை சொல்லித்தானே ஆக வேண்டும்.

விஷயம் என்னவென்றால், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 3 பெட்டி இணைக்கப்படவில்லை. அந்த பெட்டியில் பயணிக்க முன் பதிவு செய்த பயணிகள் ரயில் முழுவதையும் பல முறை சுற்று வந்தும் எஸ் 3 பெட்டியை காணாமல் தவித்துப் போயினர்.

பிறகு இது குறித்து டிக்கெட் பரிசோதகருக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக ஊழியர்கள் எஸ் 3 பெட்டியை மாட்டியுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே வண்டி புறப்பட்டுள்ளது.

எஸ் 3 பெட்டியில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தான் திண்டாட்டமாகப் போய்விட்டது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...