Sunday, December 25, 2016

உயர் படிப்புக்காகச் சென்று வேலை கிடைத்த நிலையில் கும்பகோணம் இளைஞர் பிரான்ஸில் கொலை: உடலை இந்தியா கொண்டுவர பெற்றோர் கோரிக்கை

வி.சுந்தர்ராஜ்
மணிமாறன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரைச் சேர்ந்த இளைஞர், பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தங்கள் மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அவரது பெற்றோர் பிரான்ஸ் நாட்டின் தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநறையூர் சிவன் கோயில் சன்னதி தெருவைத் சேர்ந்தவர் தங்கவேல், விவசாயி. இவரது மனைவி மணிமேகலை, மகன் மணிமாறன்(27), மகள் பொன் மணி(25). மகள் பொறியியல் பட்ட தாரி, அவரது திருமணத்துக்காக வரன் பார்த்துக் கொண்டிருக் கின்றனர். தங்கவேல் 15 ஆண்டு களுக்கு முன் வேலைக்காக அரபு நாட்டுக்குச் சென்று திரும்பியவர். தற்போது, ஏனாநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

இவரது மகன் மணிமாறன் தஞ்சாவூர் வல்லம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டுக்கு எம்.எஸ். (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்கச் சென்றார். படிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் அந்நாட்டிலேயே வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அண்மையில், பிரான்ஸில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மணி மாறனுக்கு வேலை கிடைத்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட் டில் மர்ம நபர்களால் மணிமாறன் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டதாக நேற்று முன்தினம், அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையறிந்து அவர்கள் கதறித் துடித்தனர்.

இதுகுறித்து மணிமாறனின் தந்தை தங்கவேல் கூறியது: என் மகன் பிரான்ஸ் நாட்டில் 4 ஆண்டு களாக உயர் படிப்பு படித்து வந்தார். அந்நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், வரும் ஜனவரி 2-ம் தேதி பணியில் சேர உள்ளதாகவும் கடந்த 22-ம் தேதி எங்களிடம் தெரிவித்தார். என் மனைவி, மகளிடமும் மகிழ்ச்சி யுடன் பேசினார்.

இந்த நிலையில், கடைவீதியில் சென்றுகொண்டிருந்த மணிமாறனி டமிருந்த செல்போனை ஒருவர் பறித் ததாகவும், அதைத் தடுத்தபோது கத்தியால் குத்தியதில் அவர் இறந்துவிட்டதாகவும் மணிமாற னின் நண்பர்கள் நேற்று முன்தினம் (டிச.23) என்னிடம் போனில் தெரி வித்தனர்.

என் மகன் தங்கியிருந்த அறையில், நாச்சியார்கோவிலைச் சேர்ந்த குமரேசன், நவீன் மற்றும் இருவர் என தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கியிருந்துள்ளனர். நேற்று கத்திக்குத்து காயங்களுடன் என் மகன், அறைக்கு வந்ததாகவும், லேப்டாப், செல்போன், பணம் ஆகியவற்றைச் சிலர் பறித்துக் கொண்டு கத்தியால் குத்திவிட்ட தாகவும் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக என்னிடம் கூறினர்.

பல இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்து, 4 ஆண்டுகள் படித்து முடித்து வேலை கிடைத்துள்ள நிலையில், அவர் கொல்லப்பட்டது எங்கள் குடும்பத்தை நிலைகுலை யச் செய்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள பிரான்ல் நாட்டின் தூதரகத் தில் புகார் மனு அளித்துள்ளேன். மேலும், மயிலாடுதுறை எம்பி பாரதிமோகனிடம் கடிதம் பெற்று, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளேன்.

மணிமாறனின் உடலை விரைந்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...