Thursday, March 30, 2017

 'ஆன்லைன்' ஆர்.டி.ஐ., தபால் துறைக்கு விருது

ஆன்லைன்' மூலம், ஆர்.டி.ஐ., மனுக்களை பெற்று, பதிலளிக்கும் அரசு துறைகளில், 2015 - 16ம் ஆண்டின் சிறந்த பங்களிப்புக்கான விருது, தபால் துறைக்கு கிடைத்துள்ளது.

 தகவல் உரிமை சட்ட அடிப்படையில், தகவல் கோரும் மனுக்களை, 'ஆன்லைன்' முறையில் பெற்று, 'ஆன்லைன்' முறையில் பதில் அளிக்கும் பணியை, மத்திய அரசின் பல்வேறு துறைகள் செய்து வருகின்றன.இதில், 2015 - 16ம் ஆண்டில், 'ஆன்லைன்' முறையை விரிவுபடுத்தியதுடன், சிறப்பாக பங்காற்றிய தற்கான விருது, தபால் துறைக்கு கிடைத்துஉள்ளது. மத்திய வெளியுறவு துறை, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி துறைக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மனுக்களுக்கு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவை அடிப்படையாக வைத்தும், சிறப்பாகச் செயல்பட்ட துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

 மத்திய அமைச்சரவை செயலகம், சராசரியாக, 10 நாட்களிலும்; பணியாளர் தேர்வாணையம், சராசரியாக, 11.5 நாட்களிலும்; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, சராசரியாக, 11 நாட்களிலும், தகவல் கோரும் மனுக்களுக்கு பதிலளிப்பதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Operational issues delay two Air India flights for five hours in Tamil Nadu

Operational issues delay two Air India flights for five hours in Tamil Nadu Several passengers claimed they were asked to disembark from the...