Thursday, March 30, 2017

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை உயரும் அபாயம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. 
 
சென்னை: டீசல் மீதான வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை கண்டித்து இன்று முதல் 5 மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

 இதனால் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் மீதான வாட் வரி, 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்கள் பயன்படுத்த மத்திய அரசின் தடை உத்தரவு ஆகிய விவகாரங்களை கண்டித்து மார்ச் 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது. lorry owners today go on strike VIDEO : Lorry அதன்படி லாரி ஸ்டிரைக் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் நேற்று, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார். மாநிலத்தில் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசு நேற்று இரவு வரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் திட்டமிட்டபடி இன்று ஸ்டிரைக் நடக்கிறது. தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவதற்காக செய்யப்படும் புக்கிங் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் ரூ.5000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் அபாய நிலை உள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/lorry-owners-today-go-on-strike-278298.html

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...