Friday, September 8, 2017

தள்ளுவண்டி கடைகளை அகற்ற இட்லியில் பினாயில் தெளிப்பு

பதிவு செய்த நாள்08செப்
2017
00:44




மேட்டூர்: திறந்த வெளியில் தள்ளு வண்டியில் வைத்து விற்பனை செய்த இட்லி, பணியாரம் மீது, நகராட்சி கமிஷனர் பினாயில் தெளித்து விட்டதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சாலையை, விரிவாக்கம் செய்வதற்காக, அப்பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகளை, கடந்த வாரம் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். கடையை காலி செய்த வியாபாரிகள் சிலர், இரண்டு நாட்களாக மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் இட்லி, பணியாரம் விற்பனை செய்தனர்.
நேற்று காலை ஊழியர்களுடன் அப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற, மேட்டூர் நகராட்சி கமிஷனர் நாராயணன், தள்ளுவண்டி கடைகளை அங்கிருந்து எடுத்து செல்லும்படி எச்சரித்துள்ளார்; வியாபாரிகள் வண்டியை அகற்றவில்லை. இதையடுத்து, கமிஷனர், பாட்டிலில் எடுத்து வந்திருந்த பினாயிலை, தள்ளுவண்டிகளில் விற்பனைக்காக இருந்த இட்லி, பணியாரம் மீது, தெளித்துள்ளார். இட்லி, பணியாரத்தை, வியாபாரிகள், குப்பையில் கொட்டினர்.

'வண்டிகளை அப்புறப்படுத்துமாறு கடுமையாக கூறியிருந்தால், நாங்கள் சென்றிருப்போம். அதற்காக, உணவு பொருட்கள் மீது, பினாயில் தெளித்தது வேதனையளிக்கிறது' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி ஆணையாளர் கூறியதாவது: அரசு மருத்துவமனை அருகே, தள்ளுவண்டிகளில் திறந்தவெளியில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது; வரும் நாட்களில் இதுபோன்று செயல்பட்டால், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...