Friday, September 8, 2017

அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 30 சதவீதம் பேர் பங்கேற்பு
பதிவு செய்த நாள்08செப்
2017
00:15




ஜாக்டோ - ஜியோ அமைப்பு நடத்திய, அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டத்தில், 30 சதவீதம் பேர் பங்கேற்றனர். முதல்வர் பழனிசாமி நடத்திய பேச்சுக்கு பின், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. ஒரு தரப்பினர் மட்டும், போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, ஆசிரியர் முன்னேற்ற சங்கம், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடக்க பள்ளிகளில், 17 சதவீதமும், பள்ளிக் கல்வித்துறையில், 15 சதவீதம் பேரும், நேற்று பணிக்கு வரவில்லை. அதனால், 30சதவீத பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை. ஆசிரியர்கள் இன்றி, சில வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களில், 30 சதவீதத்திற்கு மேல் பங்கேற்கவில்லை. வருவாய்த் துறையை பொறுத்தவரை, பெரும்பாலானோர் பணிக்கு வராததால், தாலுகா அலுவலகங்களில் பணிகள் முடங்கின. தாலுகா அலுவலகங்கள் முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, இரண்டு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதால், போராட்டம் முடிவுக்கு வரும் என, தெரிகிறது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர், கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவை படித்த பின்பே, போராட்டத்தை கைவிடுவது குறித்து, முடிவு செய்யப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...