Friday, September 8, 2017

காலியான 494 பி.டி.எஸ்., இடங்கள் : சுயநிதி கல்லூரிகள் நிரப்ப அனுமதி
பதிவு செய்த நாள்08செப்
2017
02:05

நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள, 494 பி.டி.எஸ்., இடங்களை, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளே நிரப்பி கொள்ள, மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை, ஆக., 24ல் துவங்கியது. 

இரண்டு கட்டங்களாக நடந்த கவுன்சிலிங்கில், அரசு ஒதுக்கீட்டுக்கான, 3,534 எம்.பி.பி.எஸ்., - 1,247 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில், 381 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. இதில், 715 பி.டி.எஸ்., இடங்களில், 221 இடங்கள் மட்டும் நிரம்பின; 494 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இதை, மருத்துவ கல்லுாரிகளே நிரப்பிக் கொள்ள, மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு, அந்தந்த கல்லுாரிகளே மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள, 'நீட்'தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது. 

''அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை கல்லுாரிகள் நடத்தும்,'' என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 10க்குள், தமிழகத்தில், பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும்.
மூன்று நாட்களில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிப்பதில், சிக்கல் உள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தை நாட, சுயநிதி கல்லுாரிகள் திட்டமிட்டு உள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...