Sunday, September 10, 2017

கட்டண சலுகையால் மெட்ரோ பயணம் அதிகரிப்பு
பதிவு செய்த நாள்10செப்
2017
00:39




சென்னை: மெட்ரோ ரயிலில், கட்டண சலுகை வழங்கப்படுவதால், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, அவ்வப்போது, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பண்டிகை காலத்தையொட்டி, ஆக., 25ல் இருந்து, அக்., 31 வரை, 20 சதவீதம், கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது.

மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:மெட்ரோ ரயிலில், தினமும், 22 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்தனர். பண்டிகை காலத்தையொட்டி, பயணியருக்கு, அக்., 31 வரை, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயிலில், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த கட்டண சலுகையை, 2018 ஜன., வரை நீட்டிப்பது குறித்து, உயரதிகாரிகள் தரப்பில், ஆலோசிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...