சிறுமி பலாத்காரம்: அரசு டாக்டர் கைது சீரழித்த உறவு பெண்ணுக்கு போலீஸ் வலை
பதிவு செய்த நாள்10செப்
2017
01:54
திருவண்ணாமலை,
மயக்க ஊசி போட்டு, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை டாக்டரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.
பழக்கம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணி, 40. கணவர் இறந்ததால், இரு மகள்களுடன் சென்னையில் தங்கி, தனியார் வங்கியில் துப்புரவுஊழியராக வேலை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு, மகள்களுடன், ராணி சென்றிருந்தார்.அங்கு, ஆரணியைச் சேர்ந்த உறவுக்கார பெண் சித்ரா, 36, என்பவருடன், ராணியின், 15 வயது மூத்த மகளுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின், சிறுமி சென்னைக்கு சென்றதும், அடிக்கடி மொபைல் போனில் பேசிய சித்ரா, ஆரணியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்கு, சிறுமி மறுத்துள்ளார். பின், சுரேஷ், 31, என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உதவியுடன், சிறுமியை சித்ரா கடத்தினார். ஆரணியிலுள்ள தன் வீட்டில் வைத்து, சுரேசுடன் உல்லாசமாக இருக்க வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமி தன் தாய் ராணிக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். சுரேசும், சித்ராவும், சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று, பலருக்கு இரையாக்கி உள்ளனர்.
மயக்க ஊசி போட்டு, ஆரணியில் உள்ள அரசு மருத்துவனை டாக்டர் ஜெயப்பிரகாஷ், 56, என்பவருக்கு இரையாக்கினர். டாக்டருக்கு உடந்தையாக அவரது உதவியாளர் பாண்டியராஜ், 34, இருந்துள்ளார்.
இதற்கிடையில், ராணியின் உறவினர் குமார், 38, சிறுமியை மீட்டு, ராணியிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து, சிறுமியின் தாய் ராணி, இரண்டு நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வன்கொடுமை சட்டம்
சென்னை, திருமங்கலம் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நேற்று ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியராஜை கைது செய்தனர்.
சிறுமியை சீரழித்த, சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
பதிவு செய்த நாள்10செப்
2017
01:54
திருவண்ணாமலை,
மயக்க ஊசி போட்டு, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை டாக்டரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.
பழக்கம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணி, 40. கணவர் இறந்ததால், இரு மகள்களுடன் சென்னையில் தங்கி, தனியார் வங்கியில் துப்புரவுஊழியராக வேலை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு, மகள்களுடன், ராணி சென்றிருந்தார்.அங்கு, ஆரணியைச் சேர்ந்த உறவுக்கார பெண் சித்ரா, 36, என்பவருடன், ராணியின், 15 வயது மூத்த மகளுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின், சிறுமி சென்னைக்கு சென்றதும், அடிக்கடி மொபைல் போனில் பேசிய சித்ரா, ஆரணியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்கு, சிறுமி மறுத்துள்ளார். பின், சுரேஷ், 31, என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உதவியுடன், சிறுமியை சித்ரா கடத்தினார். ஆரணியிலுள்ள தன் வீட்டில் வைத்து, சுரேசுடன் உல்லாசமாக இருக்க வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமி தன் தாய் ராணிக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். சுரேசும், சித்ராவும், சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று, பலருக்கு இரையாக்கி உள்ளனர்.
மயக்க ஊசி போட்டு, ஆரணியில் உள்ள அரசு மருத்துவனை டாக்டர் ஜெயப்பிரகாஷ், 56, என்பவருக்கு இரையாக்கினர். டாக்டருக்கு உடந்தையாக அவரது உதவியாளர் பாண்டியராஜ், 34, இருந்துள்ளார்.
இதற்கிடையில், ராணியின் உறவினர் குமார், 38, சிறுமியை மீட்டு, ராணியிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து, சிறுமியின் தாய் ராணி, இரண்டு நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வன்கொடுமை சட்டம்
சென்னை, திருமங்கலம் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நேற்று ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியராஜை கைது செய்தனர்.
சிறுமியை சீரழித்த, சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment