Saturday, September 23, 2017

பேரறிவாளனை சிறையில் அடைக்க நடவடிக்கை
பதிவு செய்த நாள்23செப்
2017
00:50

ஜோலார்பேட்டை: நாளை, பேரறிவாளனை சிறையில் அடைக்க, சிறை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், ஆக., 24ல், 30 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். பேரறிவாளன் பரோல், நாளை முடிகிறது. இந்நிலையில், மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என, அவரது தாய் அற்புதம்மாள், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அதற்கு, இன்னும் பதில் வரவில்லை. இதனால், பேரறிவாளனை, நாளை மாலை, 5:00 மணியில் இருந்து இரவு, 8:00 மணிக்குள், வேலுார் சிறைக்கு கொண்டு வர, சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர். இது குறித்த தகவலை, பேரறிவாளனுக்கு, நேற்று சிறை துறை அதிகாரிகள், நேரில் வந்து தெரிவித்தனர்.கடந்த, 27 நாட்களில், பேரறிவாளனை, 1,657 பேர் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில், பேரறிவாளன் வீட்டு முன், 40 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த, பேரறிவாளன் இல்லம் என்ற பெயர் பலகை, நேற்று அகற்றப்பட்டு, செங்கொடி இல்லம் என, பெயர் மாற்றப்பட்டு, புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025