Sunday, September 24, 2017

34 பைசாவுக்கு 'செக்' ரூ.40 செலவில் தபால்

பதிவு செய்த நாள்23செப்
2017
22:58

-கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கோழி இறைச்சிக்கடை நடத்துகிறார். தனியார் தொலைத் தொடர்பு நிறுவன 'போஸ்ட் பெய்ட்' இணைப்பு வாடிக்கையாளர். கடந்த மாதம் இவர் 'பிரீ பெய்ட்' இணைப்புக்கு மாறினார்.

இந்நிலையில் செப்.5ம் தேதி அவருக்கு, அந்த நிறுவனத்தில் இருந்து கூரியர் தபாலில் 'செக்' வந்தது. அதில், '34 பைசா' என எழுதப்பட்டிருந்தது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: போஸ்ட் பெய்ட் கட்டணம் செலுத்தியதில், மீதமிருந்த 34 பைசா எனக்குத் தருவதற்காக ரூ.40 செலவு செய்து கூரியரில் 'செக்' அனுப்பி உள்ளனர். கணக்கு வழக்கில் தாங்கள் சரியாக இருப்பதாகக் காட்ட அந்நிறுவனம் இப்படி 'செக்' அனுப்பியிருக்கும், என்றார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025