தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: மருத்துவருக்கு நூதன நிபந்தனையுடன் முன் ஜாமீன்
Published : 12 Sep 2017 17:16 IST
சென்னை

தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்பூர் மருத்துவர் கென்னடிக்கு ஒருவாரம் தினமும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கென்னடி சுதந்திர தினத்தன்று தொலைபேசியில் பேசியப்படி தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அவர் அவமதிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிதிபதி பி.என் பிராகாஷ் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர் கென்னடி ஒரு வாரத்துக்கு தினமும் காலை பணிக்கு வரும்போது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Published : 12 Sep 2017 17:16 IST
சென்னை
தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்பூர் மருத்துவர் கென்னடிக்கு ஒருவாரம் தினமும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கென்னடி சுதந்திர தினத்தன்று தொலைபேசியில் பேசியப்படி தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அவர் அவமதிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிதிபதி பி.என் பிராகாஷ் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர் கென்னடி ஒரு வாரத்துக்கு தினமும் காலை பணிக்கு வரும்போது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment