Wednesday, September 13, 2017

போலிநகை அடமானம் : ரூ.20 கோடி மோசடி

பதிவு செய்த நாள்12செப்
2017
23:49

சென்னை: சென்னை அண்ணாநகரில் வங்கி ஒன்றில் போலி நகைகளை அடமானம் வைத்து, ரூ.20 கோடி கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது. இதில் வங்கியின் முன்னாள் மேலாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளதும் அவருடன் நகைக்கடை அதிபர்
ஒருவரும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எத்தனை நாட்களில் இந்த மோசடி நடந்தது என்றும் ஆய்வு நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TO DAY 16.07.2026