Friday, September 21, 2018

14 நாட்கள், 'கரன்ட் கட்' நெல்லை மக்கள், 'ஷாக்'

Added : செப் 21, 2018 01:39


-திருநெல்வேலி, கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், துாத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. 'இதனால் திருநெல்வேலியில், 14 நாட்களுக்கு, பகலில் மின்சாரம் இருக்காது' என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் உள்ளன. முதலாவது உலையில், நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. இரண்டாவது உலையில், செப்., 13ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை, மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.துாத்துக்குடியில் தலா, 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகள் உள்ளன. இதில், இரண்டாவது, அணு உலை சில தினங்களாக மூடப்பட்டு உள்ளன.'நிலக்கரி தட்டுப்பாட்டால் உற்பத்தி நடக்கவில்லை' என, புகார் எழுந்தது. தற்போது, காற்று குறைந்து வருவதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காற்றாலைகளில் கிடைத்த மின்சாரம் குறைந்து விட்டது.இதனால், தென்மாவட்டங்கள் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன. திருநெல்வேலி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், கிருஷ்ணராஜ் அறிவிப்பில், 'செப்., 24 முதல், அக்., 7 வரை காலை, 8:00 முதல் மாலை, 5:00 வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், நகர் பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...