Tuesday, September 11, 2018

மானாமதுரை மண்பாண்டம் சிங்கப்பூர் இயக்குனர் பெருமிதம்

Added : செப் 11, 2018 05:39

மானாமதுரை: ''சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்கள் தமிழர்களின் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது,'' என ஆவணப்பட இயக்குனர் லட்சுமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.மானாமதுரையில் ஆண்டு்தோறும் சீசனிற்கு தகுந்தாற்போல் 200க்கும் தொழிலாளர்கள்மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர். இவற்றில் பொங்கல் பானைகள்,மண்கூஜாக்கள்,கடம்,உள்ளிட்ட பொருட்கள் சிங்கப்பூர்,மலேசியா,ஆஸ்திரேலியா,கனடா,ஜப்பான்,அமெரிக்காவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சிங்கப்பூர்தமிழரும்,ஆவணப்பட இயக்குனருமான லட்சுமி55, மானாமதுரைக்கு வந்து பொங்கல் பானைகளை தொழிலாளர்கள் எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று ஆவணப்படம் எடுத்தார். இதனை சிங்கப்பூரில் உள்ள தொலைக்காட்சியில் பொங்கலன்று ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ''பனையை தயாரிப்பது மட்டுமல்லாமல், மதுரை மல்லிகை பூ,தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை போன்றவற்றை பற்றியும் படம் எடுக்க உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...