Friday, June 9, 2017

தொப்புன்னு விழுந்திடிச்சா தொப்பை? பயந்துடாதீங்க, குறைச்சுக்கலாம்!

2017-06-05@ 11:02:01





இந்திய ஆண்களின் தேசிய பிரச்னையே இதுதான். சில பெண்களுக்கும். தொப்பை இல்லாத நடுத்தர வயதினரை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. நவீனவாழ்க்கைமுறையின் லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் பலவற்றுக்கும் தொப்பைதான் தோற்றுவாய் என்கிறார்கள் மருத்துவர்கள்.பழைய சோறும், பச்சைமிளகாயும், கம்பங் கூழும், கருவாட்டுக் குழம்புமாக நம் முன்னோர் உண்டுவிட்டு காட்டிலும் மேட்டிலும் உழைத்துக் கொண்டிருந்த காலத்தில் சிக்ஸ்பேக் கட்டழகு இல்லையென்றாலும், காண்பவரை கவரும் நாட்டுக் கட்டைகளாகதான் தோற்றம் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொப்பையும் இல்லை. தொல்லையும் இல்லை.

மூன்று வேளை அரிசி உணவு. இடையிடையே நொறுக்குத்தீனி. சாயங்காலத்தில் லைட்டாக பசிக்கிறது என்று ஜங்க் ஃபுட். வீட்டை விட்டே வெளியே இறங்கினாலே டூவீலர், கார். அலுவலக ஏசியில் அமர்ந்தபடியே வேலை. விடிய விடிய டிவி. இன்டர்நெட், மொபைல் என்று மாறிவிட்டது நம்லைஃப் ஸ்டைல்.முன்பெல்லாம் நாற்பது பிளஸ் அங்கிள்களுக்குதான் தொப்பை இருக்கும். இப்போது இருபது களில் இருக்கும் இளைஞர்களே தொப்பையும், தொந்தியுமாக குட்டி யானை மாதிரி திரிகிறார்கள். தொப்பையைக் குறைக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏதேதோ டயட் முறைகள், உடற் பயிற்சிகள் என்றெல்லாம் எடுக்கிறார்கள். பெருசாக பலனில்லை என்றுதான் தோன்றுகிறது.நம் தாத்தாவுக்கு இல்லாத தொப்பை நமக்கு மட்டும் எப்படி வந்து தொலைத்தது? இதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, இந்தகொடுமைக்கு என்னதான் தீர்வு?

ஏன் தொப்பை?

ஒருவருக்குத் தொப்பை ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. பொதுவாக, உடலின் தேவைக்கு ஏற்ற உணவு இன்மை, உடல் உழைப்பு இன்மை போன்ற லைஃப் ஸ்டைல் காரணங்களாலும், ஹார்மோன் கோளாறுகள், மரபுரீதியான பாதிப்பு போன்றவற்றாலும் தொப்பை ஏற்படுகிறது.

என்ன தொல்லை?

தொப்பையும் உடல்பருமனும்தான் பல நோய்களுக்கு தலைவாசல் என்பார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் உட்பட பல பிரச்னைகள் தொப்பையால்தான் ஏற்படுகிறது. எனவே, தொப்பையை எளிதாக எண்ணிவிடாதீர்கள்.

உணவு என்ன செய்கிறது?

மனிதன் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்து, நீர்ச் சத்து ஆகியவை உள்ளன. நம் உடல் இவற்றை குளூக்கோஸாக மாற்றி தனக்கான ஆற்றலைப் பெருக்கிக்கொள்கிறது. இப்படி உணவின் மூலம் உடலில் சேகரம் ஆகும் ஆற்றல் நம் உடலின் செயல்பாடுகள் மூலம் எரிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதனுக்கு தினசரி 2,500 கலோரி ஆற்றல் தேவை. நம் உடலின் தேவைக்கு ஏற்ப கலோரியை உடலில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது. கலோரி அளவு குறைந்தால் சோர்வு ஏற்படுகிறது. கலோரி அளவு அதிகமாக இருக்கும்போது நம் உடல் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று கொழுப்பாக அதை மாற்றிவைத்துக்கொள்கிறது. இப்படி வயிற்றுப்பகுதியில் ஏற்படும் கொழுப்பின் தேக்கத்தைத்தான் நாம் தொப்பை என்கிறோம்.

ஹார்மோன் ஏடாகூடம்

சிலருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். தைராய்டு உடலின் தேவைக்குக் குறைவாகச் சுரந்தால் ஹைப்போதைராய்டு பிரச்னை என்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு தொப்பை உருவாகக்கூடும். பொதுவாக, தைராய்டு சுரப்புக்குத் தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமே உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்ற வாழ்க்கைமுறையும் அவசியம்.

மரபான சொத்து

பொதுவாக, மரபியல்ரீதியாக உடல் பருமன் தொப்பை இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றத்தால் தொப்பை, உடல்பருமனை
ஓரளவு கட்டுப்படுத்த முடியும். சிலருக்கு மரபியல்ரீதியாக ஹார்மோன் கோளாறும் இருக்கும். இவர்கள் அதிக உடல்பருமனாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றம் மட்டுமே போதாது. சதைக்குறைப்பு அறுவைசிகிச்சை, கொழுப்பு நீக்க சிகிச்சை போன்றவை தீர்வாக அமையலாம். ஆனால், தொடர்ந்து உடல் எடை அதிகமாகாமல் இருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியம்.

உணவில் இருக்கு தீர்வு

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்தான் முதல் சாய்ஸ். கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற அனைத்தும் நிறைந்த சமச்சீர் உணவுகள்தான் உடலுக்கு அவசியம். எனவே, மூன்று வேளை உணவில் இவை அனைத்தும் சமச்சீராக இருக்கிறதாஎன்பதை உறுதி செய்யுங்கள்.

இன்று பெரும்பாலான வீடுகளில் தினசரி மூன்று வேளையும் அரிசி உணவுகளையே உண்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாமல் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளையே உண்ணும்போது உடலில் தேவையற்ற கொழுப்பு உருவாகி, தொப்பை ஏற்படுகிறது. எனவே தினமும் மூன்றும் வேளையும் அரிசி என்பதை சிறிது மாற்றலாம். வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கம்பு, தினை, கேழ்வரகு, குதிரைவாலி, பனிவரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது நல்லது. சிறுதானியங்களில் புரதங்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால் சமச்சீரான மெனுவை உருவாக்கசிறுதானியங்கள் உதவும்.

50 வயதைக் கடந்தவர்கள் உணவை ஐந்து வேளையாகப் பிரித்து உண்பது செரிமானத்துக்கு எளிது. இதனால் உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகிறது. அடிக்கடி உண்பதால் பசியும் பெரிதாக இருக்காது. இதனால் உணவின் அளவு குறையும். தேவையற்ற கலோரி சேர்வது தடுக்கப்படும்.காய்கறிகள், பழங்களில் வானவில் கூட்டணியை உருவாக்குங்கள். அதாவது, தினசரி ஏதேனும் ஒரு வண்ணத்தில் ஒரு காய், பழம் என மெனுவில் சேர்த்திடுங்கள். காய்கறிகளில் வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழு நாட்களுக்கு ஏழு வண்ணங்கள் என உடலில் சேரும்போது அனைத்துவிதமான சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கின்றன.

ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத் தீனிகள், சாட் ஐட்டங்கள், ஐஸ்கிரீம்கள், சாக்லெட், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் அறவே தவிர்த்திடுங்கள். இவைகளில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் நிறைவுற்ற கொழுப்பும் நிறைந்துள்ளன. இவை வயிற்றில் தங்கி தொப்பை, உடல்பருமன் ஏற்படுகிறது. மேலும், இதய ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு அடைப்பதால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட இதய நோய்களுக்கு வாய்ப்பாகிறது.

உணவு இடைவேளையின்போது பஜ்ஜி, போண்டா, பர்கர், பீட்சா போன்ற எண்ணெய் பலகாரங்கள், ஜங்க்ஃபுட்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக ஏதேனும் பழத்தையோ, பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ்களையோ, முளைகட்டிய பயிறு, சுண்டல் போன்றவற்றையோ சாப்பிடலாம். இதனால், நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை காலி செய்து உடலுக்கு வலுவைத் தருகிறது. இதனால், இதய நோய்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.

செரிமானம்தான் உடல் ஆரோக்கியத்தின் முதல்படி. எனவே உங்கள் உணவில் செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகள் இருக்கட்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் உடலில் உள்ள தேவையற்ற கழிவை வெளியே கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், நார்ச்சத்து கலோரியே இல்லாதது. சாப்பிட்டால் பசியுணர்வும் நீங்கும். எனவே, இயன்றவரை நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உடலில் சேருங்கள்.தயிர் செரிமானத்தின் நண்பன். தயிரில் புரோபயாட்டிக் எனப்படும் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா நிறைந்துள்ளன. இதனால், செரிமான மண்டலம் மேம்படும். இந்தியா போன்ற மிதவெப்ப மண்டலத்துக்கு தயிர் ஒரு முக்கியமானஉணவுப் பொருள். எனவே, தயிர் தினசரிஉணவில் இருக்கட்டும்.நம் உடல் நீராலானது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது தேவையற்ற கசடுகள் அதிகரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

பயிற்சியில் கரைக்கலாம்

உடற்பயிற்சி என்பது தொப்பை குறைப்பில் தவிர்க்க இயலாத அம்சம். தினசரி நம் உடலில் சேரும் தேவை இல்லாத கொழுப்பை கரைத்தால்தான் தொப்பையைத் தவிர்க்க முடியும். இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்.வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் சிறந்த பலன் அளிப்பவை. தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது முந்தைய தினத்தின் கொழுப்பை எரிக்க உதவும்.

ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில், வெயிட் லிஃப்ட் செய்தால்தான் உடற்பயிற்சி என்றில்லை. தினசரி காலை எழுந்ததும் கை, கால்களை, நீட்டுவது, முறுக்குவது என ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்துவிட்டு ஒரு வாக் போகலாம். தினசரி 10,000 ஸ்டெப்புகள் நடக்க வேண்டியது அவசியம்.உங்கள் நடைப்பயிற்சியை நீங்கள் பணி நிமித்தம் மேற்கொள்ளும் நடையுடன் கணக்கிட்டு நடக்கலாம். தற்போது நிறைய பீடோமீட்டர் ஆப்ஸ்கள் வந்துள்ளன. இவற்றைத் தரவிறக்கி வைத்துக்கொண்டு உங்கள் நடையைக் கண்காணிக்கலாம். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதால் காற்றில் உள்ள ஓசோனால் மூளை செல்கள் புத்துணர்வடைகின்றன. மேலும், சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி தோகுக்குக் கிடைக்கிறது. எனவே, நடப்பதற்கான நேரமாக காலை இருப்பது நல்லது.

அதிக எடை உள்ளவர்கள் ஜிம்முக்குச் சென்று கோச்சின் உதவியுடன் எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கலாம். ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், மாதம் இரண்டு கிலோ எனத் திட்டமிட்டு படிப்படியாக குறைப்பதுதான் சிறந்த வழி.

நடனமும் நீச்சலும் உடல் எடையைக் குறைக்க மிகச்சிறந்த வழிகள். தற்போது ஏரோபிக்ஸ் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் வந்துள்ளன. இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது உடல், மனம் இரண்டையுமே ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. உடலுக்கும் மனதுக்குமான ஒத்திசைவு அதிகரிக்கும்போது இயல்பாக தொப்பை குறைந்து ஃபிட்டாகலாம்.

சிகிச்சைகள் உண்டா?

பொதுவாக, அதிக உடல் பருமன் உள்ளவர் களுக்கு இரைப்பை குறைப்பு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இரைப்பை மற்றும் சிறுகுடல் பகுதிகளில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் அளவு 37.5க்கு மேல் இருந்தால் அது அதிக உடல் பருமனைக் குறைக்கும். இவர்கள் அவசியப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். அதே போல லைப்போசக்ஷன் எனப்படும் குடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றும் சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது. மேலும், வளர்சிதைமாற்றங்களைத் தூண்டும் மாத்திரைகளும், பசியைகட்டுப்படுத்தும் மாத்திரைகளும் உள்ளன. ஆனால், இந்த சிகிச்சைகள் அனைவருக்கும் ஏற்றவை அல்ல. உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றங்களால் உடல் எடைக்குறைப்பு செய்ய முடியாதவர்கள் மட்டுமே மருத்துவர் ஆலோசனைப்படி இந்த சிகிச்சைகளை
மேற்கொள்ள வேண்டும்.

ரெஸ்டு எடுங்க பாஸ்

உடல் பருமனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடலின் வளர்சிதை மாற்றங்கள் எனப்படும் மெட்டபாலிசம் இயல்பாக நடைபெற வேண்டியது அவசியம். தினசரி ஆரோக்கியமான உணவுகள், நல்ல ஆரோக்கியமான மனநிலை, உடல்நிலை, போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு போன்றவை வளர்சிதை மாற்றம் இயல்பாகநடைபெற உதவும். தினசரி எட்டு மணி நேர உறக்கம் அவசியம். ஏனெனில், உறக்கத்தில்தான் நம் உடலின் வளர்சிதை மாற்றப்பணிகள் துரிதமாக நடக்கின்றன. அதாவது, நம் மூளை மற்ற வெளி உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு உள் உறுப்புகளைசுத்திகரிக்க செயல்படும் நேரம் இரவுதான். உறக்கம் பாதிக்கப்படும்போது வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு தொப்பை, உடல் பருமன்ஏற்படுகிறது.மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தேவையற்ற டென்ஷன், பதற்றம் போன்றவை ஏற்படும்போது அதனால் நம் உடல் ஆரோக்கியமும் கெடுகிறது. எனவே, நம்மை மேம்படுத்தும், ரிலாக்ஸாக வைத்திருக்கும் சிறப்பான பொழுதுபோக்குகளைப் பழக்கப் படுத்திக்கொள்வது மிகவும் நல்லது.
ஆஸ்துமா வருது...அலர்ட் ப்ளீஸ்!

2017-06-08@ 14:48:47




நன்றி குங்குமம் டாக்டர்

சுகப்பிரசவம் இனி ஈஸி

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது ஆஸ்துமா. இந்தத் தொல்லை கர்ப்பிணிக்கு எந்நேரம் வரும், எப்போது விலகும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. பெண்ணுக்குப் பெண் இது வேறுபடும்.ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்வதைவிட ‘நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். மூச்சுக்குழல் சுருங்கி, சளி அடைத்து, இளைப்பு வருவது மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின்(Bronchial asthma) அடிப்படை செயல்பாடு. ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். குறிப்பாக உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

அப்பா, அம்மா இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு ஆஸ்துமா வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும்.அடிக்கடி சளிபிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.இவை தவிர, மனம் சார்ந்த பிரச்னைகளால்கூட ஆஸ்துமா வரலாம். கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனகுழப்பம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வருவதுண்டு.

ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது?
இதுவரை சொன்ன காரணங்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல்(Bronchus) தசைகளைத் தாக்கும்போது அவை சுருங்கிவிடுகின்றன. அப்போது மூச்சு சிறுகுழல்கள்(Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்குகின்றன. அதேவேளையில் மூச்சுக் குழலில் உள்சவ்வு வீங்கிவிடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.இந்த நேரத்தில் மூச்சுக் குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப் பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக்குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது விசில் போன்ற சத்தமும் கேட்கிறது. இதையே வீசிங் என்கிறோம்.

அறிகுறிகள்

மாசுபட்ட இடத்துக்குச் செல்கிறீர்கள். சற்று நேரத்தில் உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து இளைப்பு ஏற்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலில் இருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்த மாதிரி உணர்கிறீர்கள்,,, இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம்.

பரிசோதனைகள்

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’(Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்
குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது நடைமுறை. கர்ப்பிணிகள் எக்காரணத்தைக் கொண்டும் மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை முதல் டிரைமெஸ்டரில் செய்துகொள்ளக் கூடாது.

கர்ப்ப காலத்தில் என்ன செய்யும்?
பெண்கள் தங்களுக்கு ஆஸ்துமா இருப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படுவார்கள். மருத்துவரிடமும் இதை மறைத்து விடுவார்கள். பலரும் செய்கிற தவறு இது. ஏற்கனவே ஆஸ்துமா உள்ள பெண்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே மகப்பேறு மருத்துவரிடம் தாங்கள் எடுத்துவரும் சிகிச்சை குறித்து சொல்லிவிட வேண்டும்.அப்போதுதான் அந்த மாத்திரைகள் கர்ப்பத்தைப் பாதிக்காதவாறு மருத்துவர் கவனித்துக் கொள்ள முடியும். அல்லது பாதுகாப்பான மாத்திரைகளைத் தரமுடியும். மாத்திரைகளை நிறுத்துவதாக இருந்தால், மருத்துவரிடம் யோசனை கேட்டுக்கொள்ள வேண்டும்; கர்ப்பிணிகள் சுயமாக நிறுத்திவிடக் கூடாது.

பொதுவாக, ஆஸ்துமா உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு கர்ப்ப காலத்தில் ஆஸ்துமா தீவிரமடைகிறது. அதிலும் குறிப்பாக, கடைசி டிரைமெஸ்டரில் ஆஸ்துமாவின் பாதிப்பு அதிகரிப்பது வழக்கம். இதற்குக் காரணம், அதிகமாக விரிவடையும் கர்ப்பப்பை நுரையீரலை அழுத்துவதால் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.கர்ப்பத்தைப் பாதிக்குமா?
குறைந்த அளவில் ஆஸ்துமா பாதிப்புள்ள கர்ப்பிணிகளுக்குக் கர்ப்பத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி தீவிரமாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் ரத்த அழுத்தம் அதிகரித்து, ‘பிரசவ முன்வலிப்பு’ (Pre-eclampsia) வரலாம். சிலருக்கு குறித்த பிரசவ நாளுக்கு முன்பே குழந்தை பிறப்பதற்கும், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எந்நேரமும் ஆஸ்துமா(Status asthmaticus) இருந்தால் மட்டுமே பிரசவத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம்.

என்ன செய்ய வே2ண்டும்?

ஏற்கனவே சொன்ன ஆஸ்துமாவைத் தூண்டுகிற காரணிகளை ஒதுக்க வேண்டும். கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே குழந்தையின் வளர்ச்சியை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆஸ்துமாவுக்குக் கொடுக்கப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகளால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆகவே, ரத்தச் சர்க்கரை
அளவையும் அடிக்கடி கவனிக்க வேண்டும்.

சிகிச்சை என்ன?

*குறைவான பாதிப்பு அவ்வப்போது உள்ளவர்கள் மூச்சுக்குழாயை உடனடியாக விரிக்க உதவுகிற பிராங்கோடைலேட்டார்(Bronchodilators) மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, அல்பூட்டிரால்(Albuterol) மருந்து கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. இதை மாத்திரையாக எடுத்துக் கொள்வதைவிட இன்ஹேலரில் எடுத்துக்கொள்வது நல்லது.

*குறைவான பாதிப்பு அடிக்கடி உள்ளவர்கள் அல்பூட்டிரால் இன்ஹேலருடன், குறைந்த அளவில் புடிசோனைடு(Budesonide) ஸ்டீராய்டு இன்ஹேலரை பயன்படுத்தலாம்.

*மிதமான பாதிப்பு நிரந்தரமாக உள்ளவர்கள் மிதமான அளவில் புடிசோனைடு மற்றும் சால்மீட்ரால் கலந்த இன்ஹேலரைப் பயன்படுத்தவேண்டும்.

*தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மேற்சொன்ன மருந்துகளை சற்று அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டீராய்டு மாத்திரைகளும் ஊசிகளும் தேவைப்படும். சிலருக்கு இந்த மருந்துகளை நெபுலைசர் மூலம் செலுத்த வேண்டியதும் வரலாம். இவர்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்பதை ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டியதும் வரலாம். இச்சிகிச்சையை மருத்துவர் சொல்லும் காலம் வரை தொடர்ந்து எடுக்க வேண்டியதும் முக்கியம்.
ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தலாமா?

பெரும்பாலும் ஸ்டீராய்டு மாத்திரைகளால்தான் பக்கவிளைவு ஏற்படும். இந்த மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி குறைக்க வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று ஒருவரைமுறை இருக்கிறது. டாக்டர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் இது.

தற்போது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான ஸ்டீராய்டு மருந்துகள் கிடைக்கின்றன. எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால், எந்த பக்கவிளைவும் ஏற்படாது. கர்ப்பிணிகள் பயப்படத் தேவையில்லை.
இன்ஹேலரே சிறந்தது!

கர்ப்பிணிகளுக்கு ‘இன்ஹேலர்’ ஒரு வரப்பிரசாதம். ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைந்த பின்புதான் பலன் தரும். அதற்குச் சிறிதுநேரம் ஆகலாம். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். கைநடுக்கம் போன்ற சில பக்கவிளைவுகளும் இவற்றுக்கு உண்டு. ஆனால், இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று அங்குள்ள மூச்சுக்குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்திவிடும். இதன் பலனால் மூச்சுத்திணறல் உடனே கட்டுப்படும்.

இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப்படுகிறது. உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அவ்வளவாக பக்கவிளைவுகள் இல்லை. பெக்ளோமித்தசோன்(Beclomethasone), டிரையாம்சினோலோன்(Triamcinolone), புடிசோனைடு ஆகியவை பாதுகாப்பான ஸ்டீராய்டு மருந்துகள்.

ஒவ்வாமை மருந்துகள்

ஆஸ்துமா வருவதற்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணமாகக் கருதப்படுவதால், அதைத் தடுக்கும் மாண்டிலூக்காஸ்ட்(Montelukast) மாத்திரையை மருத்துவர் யோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். மூக்கு ஒழுகலைக் கட்டுப்படுத்துகிற ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளை அவ்வப்போது குறைந்த அளவில் சாப்பிட்டால் போதும். இந்த வழிகளால் கர்ப்ப காலத்தில் ஆஸ்துமாவின் பாதிப்பைக் குறைக்கவும் முடியும்; தடுக்கவும் முடியும்.

தவிர்க்க வேண்டிய மருந்துஇரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் பிரசவத்தின்போதும் மிசபுரஸ்டால்(Misoprostol) எனும் மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். ஆஸ்துமா உள்ள பெண்களுக்கு இந்த மருந்தைத் தரக்கூடாது.
வேலைக்காக அழைத்து சென்று சித்ரவதை குமரி இன்ஜினியர்கள் 30 பேர் மலேசியாவில் தவிப்பு: மீட்டுவர பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை

2017-06-09@ 00:29:01




நாகர்கோவில்: மலேசியாவில் தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 30 இன்ஜினியர்களை மீட்க அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திகுறிப்பு: குமரி மாவட்டம் நெய்யூரை அடுத்த நெல்லறைகோணம் பிஜோ, ஜாஸ்பர்புஷ், கல்குறிச்சி வாழவிளை தருண்ஜோஸ் உட்பட 30 பேர் இரணியலை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்சி மூலமாக கடந்த ஜனவரி 30ம் தேதி மலேசியா சென்றுள்ளனர். இந்த 30 பேரும் பொறியியல் படிப்பு முடித்த, இவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல், மலேசியாவில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க உறவினர்கள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தையும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு உடனடியாக 30 பேரையும் இந்தியா கொண்டுவர கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து கடந்த 7ம் தேதி பாதிக்கப்பட்ட நபர்களை கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்து அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்தனர். விரைவில் 30 பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழுக்கை தலை ஆண்களே பத்திரம்: தலையில் தங்கம் என்ற வதந்தியால் கொலை
dinakaran
2017-06-08@ 17:38:22



மிலாங்கே: ஆப்பிரிக்காவில் வழுக்கை தலை ஆண்களின் மண்டையில் தங்கம் இருக்கிறது என்று பரவி வரும் புரளியால் அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கொலை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டில் தான் இந்த வதந்தி பரவி வருகிறது. மொசாம்பிக் நாட்டில் மக்கள் போதிய கல்வி அறிவு இல்லாமல் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மேலும் இங்குள்ள மக்களிடம் மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் மிலாங்கே மாவட்டத்தில் சமீப காலமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது வழுக்கை தலை ஆண்கள் மண்டையின் உள்பகுதியில் தங்கம் இருக்கும் என்று யாரோ வதந்தி பரப்பி உள்ளனர். இந்த வதந்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனால் மண்டையில் உள்ள தங்கத்தை எடுப்பதாக வழுக்கை தலை ஆண்களை குறிவைத்து ஒரு கும்பல் கொலை செய்து வருகிறது. மேலும் இதுவரை 3 பேர் இதற்காக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழுக்கை தலை ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாட்டு போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.
குற்றாலத்தில் சீசன் டல்:பயணிகள் கூட்டமும் குறைவு

பதிவு செய்த நாள்08ஜூன்2017 21:32

திருநெல்வேலி:குற்றாலத்தில் மழையின்மையால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.குற்றாலத்தில் இந்த ஆண்டு மே மாதத்தின் இறுதியிலேயே சீசன் துவங்கியது.தென்மேற்குபருவ மழையும் பெய்யத்துவங்கிவிட்டதால் குற்றாலத்தில் மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.கடந்த மூன்று நாட்களாக மழையில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. மெயின்அருவியில் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்தது.ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டுமே போதுமான அளவு தண்ணீர் கொட்டியது. பெண்கள் பகுதியில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது.

பிளாஸ்டிக்' அரிசி வர விடமாட்டோம்! : அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்

பதிவு செய்த நாள்09ஜூன்2017 00:06




சென்னை: ''தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,'' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில், அரிசி பஞ்சம் இல்லை. மத்திய அரசிடமிருந்து, மாதத்திற்கு, 2.96 லட்சம் டன் அரிசியை, விலை கொடுத்து வாங்கி, இலவசமாக வழங்குகிறோம். கூடுதல் தேவை என்றால், தேவைக்கேற்ப, 26 ஆயிரம் டன் அரிசி வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், 3.14 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு வழங்கும் திட்டமும் தொடர்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அரிசி பற்றாக்குறைக்கு இடமில்லை. 'ஒரிஜனலில்' பிரச்னை இருந்தால் தான், 'டூப்ளிகேட்' வரும். அரிசி தட்டுப்பாடு இல்லாததால், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.

பிளாஸ்டிக் அரிசி குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாங்கப்படுகிறது.தனியார் யாரும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு, தமிழகத்தில் இடமில்லை. எனினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இது, மிகப்பெரிய திட்டம். நிதி பற்றாக்குறையிலும், 330 கோடி ரூபாய் ஒதுக்கி, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. அதில், தவறு உள்ளதாக புகார் உள்ளது.

'ஆதார்' கார்டில் விபரம், ஆங்கிலத்தில் உள்ளது. அதை, தமிழில் மொழி பெயர்க்கும் போது, சில தவறுகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, தாலுகா அளவில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னரே, கம்ப்யூட்டரில் விபரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஒரு மாதத்திற்குள், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறைவடையும். மொத்தம், 1.91 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதுவரை, ஒரு கோடி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டில் தவறு இருந்தால், 'ஆன்லைனில்' சரி செய்யலாம். அரசு இ - சேவை மையங்களுக்கு சென்றும், தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம்!

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றியமைக்கும் முறை, நாடு முழுவதும், வரும், 16ம் தேதி அமலாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, 15 நாட்களுக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை, பல நாடுகளில், தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், இந்தியாவிலும், சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்க, எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்துவந்தன. சோதனை அடிப் படையில், புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய ஐந்து நகரங்களில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி யமைக்கும் முறை, கடந்த மாதம் அமல்படுத்தப் பட்டது.

இந்நிலையில், வரும், 16ம் தேதி முதல், நாடு முழுவதும்,இந்த திட்டத்தைஅமல்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எண்ணெய் நிறுவன அதிகாரிகளை, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை, தினமும்




மாற்றியமைக்கும் திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த, ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, '16ம் தேதி முதல், இந்த திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்' என, எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
HC cancels bail of medical college ownerTNN | Updated: Jun 8, 2017, 08.58 AM IST



CHENNAI: The Madras high court cancelled the interim bail granted to proprietor of DD Medical College T D Naidu but directed the Enforcement Directorate (ED) probing cases against Naidu to allow to avail himself of medical treatment for his eye ailments.

The court had granted him bail after it was brought to its notice that he had undergone an eye surgery in 2017 and that he was 69. However, ED filed pleas to cancel the bail saying the year of surgery was 2015 and that he was 54. Counsel for Naidu told the court that it was due to a typographical mistake that the year and age were wrongly mentioned, and that he should be freed on bail so that he seek treatmnt.
Tamil Nadu medical body feud puts 5,000 doctor licences under cloud

Pushpa Narayan| TNN | Jun 8, 2017, 09.45 AM IST




CHENNAI: The legal validity of medical registration certificates — the licence to practise — issued to more than 5,000 doctors in the state since April is now under scrutiny.

Infighting and power struggle within the Tamil Nadu medical council, a statutory bodythat issues the certificates, has led to allegations that the doctor who affixed his signature on the certificates as president is not duly elected and the man who signed as registrar has not been attending work.

For more than six months, the seven elected members of the 10-member council have been fighting a series of legal battles over who should be president.

The council's term is to end by June 19, but the five-member committee on June 5 resolved to extend it.
Bus passengers overpower knife-wielding gang that tried to rob them in Chennai

Sindhu Kannan| TNN | Jun 8, 2017, 02.04 PM IST

(

CHENNAI: A five-member gang wielding knife boarded an omnibus near Koyambedu in Chennai on Wednesday night and tried to rob passengers. However, the passengersoverpowered the robbers and caught one of them while others escaped.

The incident happened at omnibus operator KPN Travels' stand near Koyambedu. The bus was about to leave for Coimbatore when the gang boarded the vehicle.

One of the gang members threatened the driver at knifepoint and asked him to drive the bus while the others warned the passengers not to raise an alarm.

There were around 40 passengers in the bus. They attacked the robbers. Four of the robbers managed to escape while the man who threatened the driver at knifepoint was caught and handed over to police.

The man has been identified as Dinesh of Tiruvallur. Dinesh was involved in several cases including robbery, police said.

ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிக்கு புதிய முதல்வர்

By DIN  |   Published on : 09th June 2017 04:08 AM  |  
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 20 -ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாக, சென்னையில் 55 ஆண்டுகளுக்கு பின்னர் 2015 -ஆம் ஆண்டில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது.
இந்தக் கல்லூரியின் முதல் முதல்வராக டாக்டர் சாந்திமலர் பொறுப்பேற்றார். இந்த நிலையில், அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய இவர், அதற்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவத் துறை தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

இயற்கை பானங்கள்

By எஸ். ரவீந்திரன்  |   Published on : 09th June 2017 03:22 AM 
பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இன்னும் சில தினங்களில் வெயிலின் தாக்கம் குறையும் என கூறப்பட்டாலும் என்னவோ கோடை போலவே வெயில் சுடுகிறது.
உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். சுத்தமான நீர் கிடைத்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும். ஆனால் வெளிநாட்டு குளிர்பானங்களை குடித்து உடலைக் கெடுத்துக் கொள்கிறோம்.
உள்ளூரில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு நம்மைத் தயார்படுத்துவது முக்கியம்.
வெயிலைச் சமாளிக்க இயற்கையாகக் கிடைக்கும் இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரி, பதநீர், எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, பழச்சாறுகள் போன்ற மண் மணம் மாறாத பானங்களை அருந்தலாம்.
குளிர்பானங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் ரசாயனப் பொடியை நீரில் கலந்து தயாரிக்கின்றனர். ஆனால் இளநீர் அப்படி கிடையாது. இப்போது அதற்கும் வந்துவிட்டது வில்லங்கம்.
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் சாலையோரம் புதிதாக முளைத்த இயற்கைப் பான விற்பனையகங்களில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
பனைமரத்திலிருந்து இறக்கப்படும் பதநீர் உடல் சூட்டைத் தணிக்க வல்லது. இந்த பதநீரை வியாபாரிகள் செயற்கையாகத் தயாரிப்பதுதான் அதிர்ச்சியளிக்க வைத்தது. ஒரு லிட்டர் தூய பதநீரில் பல லிட்டர் தண்ணீர் கலக்கப்படுகிறது. பின்னர் இக் கலவையில் சுண்ணாம்பு நீர், சாக்கரின் எனப்படும் இனிப்புச் சுவை மிகுந்த ரசாயனப் பொடி மற்றும் பதநீர் சுவைதரும் ஒருவித பொடி இவற்றைக் கலக்கும்போது இயற்கையாகக் கிடைக்கும் பதநீர்போலவே நிறம், மணம் கிடைக்கிறது.
இதை மக்களிடம் வியாபாரிகள் சகட்டுமேனிக்கு விற்பனை செய்துவருவது கண்டறியப்பட்டது. இதை கண்டறிந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் யார் கேட்பார்கள்? பெரும்பாலும் பதநீரைப் பொருத்தவரை காலை நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். வெயில் அதிகரிக்கும்போது அது (சுத்தமான பதநீராக இருந்தால்) கள்ளாக மாறிவிடும்.
ஆனால் இங்கு விற்கப்படும் பதநீர் அவ்வாறு மாறுவதில்லை, காரணம் கலப்படம். இது தவிர எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச்சாறுகளின் பெயரில் நறுமணப் பொடிகளை வாங்கி தண்ணீரில் கலந்து விற்கின்றனர். இது இயற்கைச் சாறு கிடையாது.
அத்துடன் இனிப்புச் சுவைக்காக சீனி, வெல்லம் என்று எதையும் சேர்க்காமல் ரசாயன இனிப்புபொடி பயன்படுத்தப்படுகிறது. இதை அருந்துவதால் வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படுகின்றன.
இன்னும் சிலர் இயந்திரத்தைப் பயன்படுத்தி அதில் சோடா நீரை கலந்தும், வாயுக்களை கலந்தும் குளிர்பானங்களைத் தயாரித்து விற்கின்றனர். கலப்படம் செய்ய முடியாத பொருள்கள் இளநீர் போன்றவைதான்.
சில வகை வெள்ளரி ஒட்டு ரகத்தில் விளைகின்றன. இது பார்ப்பதற்கு நீளமாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். தற்போது இவற்றின் வருகையும் அதிகமாக இருக்கிறது. இவை வெளிநாட்டு விதைகள் மூலம் விளைவிக்கப்படுகிறது.
மேலும் தர்ப்பூசணி, கிர்னிப்பழம், வெள்ளரிப்பழம் போன்றவை கலப்படமில்லாமல் வாங்கி சாப்பிட ஏற்றவை. பிற பழங்களை கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும், எலுமிச்சை போன்றவற்றை நிறைய வாங்கி பயன்படுத்தலாம்.
பழங்களை வாங்கி வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அருந்துவதே சிறந்தது. குழந்தைகளுக்கு வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கித் தராமல் இயற்கையின் கொடையான பானங்கள், பழங்களை வாங்கி கொடுக்க வேண்டும்.
இப்படி செய்தால் உடல் ஆரோக்கியம் சிறக்கும், மருத்துவர்களை நாடிச் செல்ல வேண்டாம். தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்காகவே பல விற்பனையகங்கள் வந்துள்ளன. இங்கு தரமான சத்து நிறைந்த பழவகைகள் கிடைக்கின்றன.
தவிர சிறுதானியங்களும் குளிர்ச்சியைத் தரும் என்பதால் அவற்றை பயன்படுத்தலாம்.தண்ணீரைப் பொருத்தவரையில் குளிர்ந்த நீரை அருந்துவது சளித்தொந்தரவு தரும். எனவே நீரை கொதிக்கவைத்து ஆறவைத்து பருகலாம். அதில் சோம்பு கலந்தும் பயன்படுத்தலாம்.
இதுபோன்ற இயற்கைப் பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன் நோய்கள் நெருங்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.
நீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர். அதை தவிர்ப்பது நல்லது. ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் லிட்டர் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அது போன்றவற்றையும் வாங்கி அருந்தலாம்.
பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை வாங்கும்போது தேதியைப் பார்த்துவாங்கவும். பல இடங்களில் காலாவதியான பாட்டில்களை விற்பனை செய்கின்றனர். எனவே வெப்பத்தைத் தணிப்பதற்காக அதிக செலவழித்து நோயை விலைக்கு வாங்க வேண்டாம்.
எளிய வகை பானங்களே போதுமானது. வெளியூர் பயணம் செய்யும்போதும், குழந்தைகளுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் முடிந்தவரை கடைகளில் விற்கப்படும் ரசாயன கலப்பு குளிர்பானங்களைத் தவிர்ப்பதே சிறந்தது. முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். அலட்சியமாக இருந்தால் வீண் செலவுதான் ஏற்படும்.

    பான் அட்டை கோர ஆதார் கட்டாயமா?: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    By DIN  |   Published on : 09th June 2017 12:23 AM  | 
    supreme_court
    வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது.
    வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.
    மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
    அவர்கள் தங்கள் மனுக்களில் "ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
    எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் "பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தது.
    அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, "போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என்று வாதிட்டார்.
    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளனர்.

    Two extreme cases of rape in a day sends shockwaves in Madurai


    By Express News Service  |   Published: 09th June 2017 04:54 AM  |  

    MADURAI: Two shocking cases of rape were reported in this district on Wednesday.
    While an eight-year-old girl was allegedly sexually assaulted by a 70-year-old retired TNSTC driver in Melur, a 90-year-old woman was allegedly raped by a 36-year-old man in Usilampatti.
    Police sources said, the 8-year-old victim, a resident of Melur, was playing near the retired driver’s house along with her friends when the incident happened on Tuesday.
    While she was playing, the retired driver, Karuppaih, invited her to his house before allegedly sexually assaulting her. Hearing the girl’s cries, a woman in the neighbourhood ran to her rescue and saved her from the clutches of the man.
    According to police, the girl’s mother admitted her to the Government Hospital in Melur for medical treatment and filed a complaint at the police station on Tuesday itself
    On Wednesday, the police arrested Karuppaih under the Protection of Children from Sexual Offences Act (POCSO Act).
    In another shocking incident, a 90-year-old woman was allegedly raped by a 36-year-old man during late in the night on Wednesday at Usilampatti.
    The accused has been identified as Murugan, a load man and a resident of Usilampatti. Sources said, Murugan, who was drunk at the time, raped the widow while she was fast asleep in her patio.
    Since the woman sustained injuries, she was admitted to Government Hospital in Usilampatti on Wednesday for treatment.

    Twist in MBBS seat row as I-T to probe Chennai bribe giver’s assets


    By Siva Sekaran  |  Express News Service  |   Published: 09th June 2017 05:27 AM  |  

    CHENNAI: A woman of Madhavaram, who lodged a complaint against another woman at Paruthipattu near Chennai alleging that the latter had neither procured a medical seat to her, as promised, nor returned Rs 18 lakh given as bribe for the same, is now in trouble.
    Selvi should now declare the source of the huge sum. The police must ascertain as to how the complainant was able to part with the huge sum for getting a medical seat. The one who receives bribe alone cannot be punished.
    To put an end to this offence, the Income Tax Department process should be set in motion, so that they will probe the assets and liabilities of such offenders and ascertain their assets from which they have paid the bribe, Justice S Vaidyanathan said.
    The judge was on Thursday dismissing an anticipatory bail application from Anubakkya (31), who feared arrest at the hands of Manali police.  The judge directed the Registry to furnish a copy of the court order to the Commissioner of Income Tax at Nungambakkam, to enable him to act in the matter and ascertain the truth or otherwise of the case, so as to bring the culprits to book.
    The case of the prosecution is that Anubakkya along with two other accused allegedly received Rs 18 lakh from the complainant on the promise of getting her an MBBS seat. They, however, neither obtained the seat nor returned the money they had received. It is the petitioner’s case that she is innocent and she has been falsely implicated in the case.

    Centre asks HC to lift stay on NEET results

    Leaves it to CBSE to defend administration of different question papers

    The Union Ministry of Health and Family Welfare has filed a counter affidavit before the Madras High Court Bench here in reply to a few writ petitions filed by a section of students to cancel the National Eligibility-cum-Entrance Test (NEET) held on May 7 and urged the court to vacate an interim order passed by it on May 24 restraining the Central Board of Secondary Education (CBSE) from declaring the results of the test till June 12.
    The Ministry, however, refrained from answering as to why two different sets of question papers – one common question paper in English and Hindi and another in eight vernacular languages – were administered and left the issue to be defended by the CBSE which, in a separate counter affidavit filed early this week, contended that translating one question paper in all 10 languages would have increased the chances of the paper getting leaked.
    Filing the counter affidavit on behalf of the Ministry, its Under Secretary A. Amit Biswas denied the writ petitioners’ claim that the question paper in English was tougher than the one administered to those who wrote the test in vernacular languages and said that the responsibility of conducting the test this year was handed over to CBSE only in accordance with an amendment made last year to the Indian Medical Council Act of 1956.
    “CBSE had conducted NEET for the academic year 2013-14. CBSE was also conducting All India Pre Medical Test (AIPMT) for admission in 15% MBBS/BDS seats in government medical/dental colleges throughout the country except for the States of Andhra Pradesh/Telangana and Jammu and Kashmir. Some of the State governments were also using the AIPMT merit list for making admission to medical/dental courses in their States from the academic year 2014-15,” he added.
    Further, pointing out that the medium of examination for NEET this year was decided only in consultation with the State governments , the Centre said that the original plan was to conduct the test only in eight languages. English, Hindi, Assamese, Bengali, Gujarati, Marathi, Tamil and Telugu. Kannada and Odia were included subsequently at the request of States.
    Cases transferred
    In the meantime, the Registry of Madras High Court Bench here has transmitted the entire case bundles relating to the writ petitions to the principal seat of the High Court in Chennai in order to list them along with similar cases filed there with a plea to cancel the test held on May 7 and order for a re-test. Court officials here said that the case bundles were sent only on the basis of a written request received from the principal seat on Monday.
    Responsibility of conducting the test was handed over to CBSE under Act
    A. Amit Biswas
    Under Secretary

    ID proof a must to book flight ticket

    Dedicated queues, baggage drops for those who book using Aadhaar

    In a few months, you will no longer be able to book a flight ticket without submitting an ID proof such as Aadhaar, passport or (Permanent Account Number) PAN, Minister of State for Civil Aviation Jayant Sinha said on Thursday.
    “... As you all know, even today if you have to go on an international journey, you have to submit the passport number to provide a unique identification. We are going to move towards a regime where we will require either passport, Aadhaar or PAN, or some other identification measure to be linked to your PNR number so that we can uniquely identify you during the journey,” he said at a press conference.


    ×

    20 students from Chennai get US visas


    வாட்ஸ்-அப்பில் செய்திகளை மாற்றி அனுப்பி விட்டீர்களா? உங்களை காப்பாற்ற புதிய வசதி விரைவில் அறிமுகம்!


    பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப்பில், இனி செய்திகளை தவறுதலாக மாற்றி அனுப்பி விட்டால், ஐந்து நிமிடத்திற்குள் சரி செய்து கொள்ளும் புதிய வசதியானது விரைவில் அறிமுகமாக உள்ளது.

    உலக அளவில் பிரபலமான செய்தி பரிமாற்ற செயலிகளில் வாட்ஸ்-அப் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய 120 கோடி பேர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் 50 மொழிகளிலும் இந்த சேவையானது கிடைக்கின்றது.

    10 இந்திய மொழிகளில் கிடைக்கும் இந்த சேவையை, இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஏறக்குறைய 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்

    இப்படி பரவலாக உபயோகபடுத்தப்படும் இந்த சேவையில், சில சமயம் நாம் தவறுதலாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை மற்றொருவருக்கு அனுப்பி விடும் அபாயமுண்டு. உதாரணமாக உங்கள் பெண் தோழிக்கு அனுப்ப வேண்டிய செய்தியை நீங்கள் உங்கள் அலுவலக மேலாளருக்கு அனுப்பினால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க வேண்டியதில்லை.

    இது போன்ற தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு புதிய வசதியை வாட்ஸ்-அப் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்-அப் செயலியின் புதிய தொழில்நுட்பங்களை முதலில் ஆய்வு செய்து பார்க்கும் 'வாபீட்டா இன்போ' என்னும் இணைய தளத்தில் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:

    வாட்ஸ்-அப் விரைவில் 'ரீகால்' என்னும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி நீங்கள் தவறுதலாக யாருக்கேனும் அனுப்பி விட்ட தகவலை,அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் திரும்ப பெற்றுக் கொண்டு விடலாம். இந்த வசதியானது செய்திகள் மட்டுமின்றி, படங்கள், காணொளிகள், ஆவணங்கள், ஜி.ஐ.எப் எனப்படும் நகரும் படங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும்.

    இந்த வசதியானது விரைவில்வெளியாக உள்ள வாட்ஸ்-அப்பின் புதிய "2.17.30+" வெர்ஷனில் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் நீங்கள் அனுப்பி விட்ட செய்திகளை எடிட் செய்யும் வசதியையும் வாட்ஸ்-அப் நிறுவனமானது வழங்க உள்ளது. ஆனால் இந்த வசதியானது தற்பொழுது அனுப்பப்படும் செய்திகளுக்கு மட்டுமே பொருந்தும் ஒழிய பழைய செய்திகளுக்கு பயன்படுத்த முடியாது.

    இவ்வாறு அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அனந்தபுரி ரயிலில் கூடுதல் 'ஏசி' பெட்டி

    பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:29

    சென்னை: ராமேஸ்வரம் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களில், கூடுதலாக, 'ஏசி' முதல் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.
    சென்னை, எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு, தினமும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்; திருவனந்தபுரத்திற்கு, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகின்றன. இதில், தலா, ௨௨ பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அத்துடன், முதல் வகுப்பு மற்றும் இரண்டடுக்கு படுக்கை வசதியுடன் கூடிய, 'ஏசி' பெட்டி ஒன்றும், நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. 'புதிய பெட்டிகள், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று முதலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நாளை முதலும் இணைத்து இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    சட்ட கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்ஜினியர்கள் அதிக ஆர்வம்!

    பதிவு செய்த நாள்08ஜூன்2017 21:48

    திருச்சி: அரசு மற்றும் தனியார் துறைகளில், சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதால், இன்ஜினியரிங் படித்தவர்களும், சட்டப்படிப்பில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.

    தமிழக அரசு சட்டக் கல்லுாரிகளில், எல்.எல்.பி., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், திருச்சி உட்பட, 10 அரசு சட்டக் கல்லுாரி களிலும் மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. இதில், திருச்சி அரசு சட்டக் கல்லுாரியில், மூன்று ஆண்டு, எல்.எல்.பி., படிப்பில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில், இந்த படிப்பில் சேர்வதற்கு, 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இதில் பி.இ., - பி.டெக்., மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் படித்தவர்களே அதிகமாக உள்ளனர். பி.இ., முடித்தவர்கள், 200க்கும் மேற்பட்டோர் சட்டப் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.

    இது குறித்து, திருச்சி அரசு சட்டக் கல்லுாரி முதல்வர், ராஜேஸ்வரன் கூறியதாவது:

    திருச்சி அரசு சட்டக் கல்லுாரியில், கடந்த மூன்று ஆண்டுகளில், எல்.எல்.பி., படிப்பில் சேர்ந்தவர்களில், 20 சதவீதம் பேர் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள். தற்போது, இங்கு பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் படித்த, 130 பேர், எல்.எல்.பி., படித்து வருகின்றனர். சட்டம் படித்தால், நீதிமன்றத்தில் மட்டும் தான் வேலை வாய்ப்பு என்ற எண்ணம் மாறி விட்டது. சட்டப்படிப்பை முடித் தால், ஐ.டி., துறையிலும், மருத்துவமனைகளிலும் சட்ட ஆலோசகர்களாகவும் பணிபுரியலாம். சொந்தமாக வைத்துள்ள நிறுவனங்களை நிர்வகிக்கவும், பராமரிக்கவும், சமூக பிரச்னைகளை எதிர் கொள்ளவும் சட்டப்படிப்பு படிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    'நீட்' தேர்வுக்கு எதிரான வழக்கு : சென்னைக்கு மாற்றம்

    பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:30

    மதுரை: 'நீட்' தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், மறு தேர்வு நடத்த தாக்கலான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாற்றியது.
    மதுரை டி.ஆர்.ஓ.,காலனி ஜொனிலா உட்பட 9 பேர் தாக்கல் செய்த மனு:
    இளங்கலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' எனும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மே 7 ல் நடந்தது. மாறுபட்ட வினாக்கள் கொண்ட வினாத்தாள்கள், பல்வேறு இடங்களில் வினியோகிக்கப்பட்டன. இது அதிர்ச்சியளிக்கிறது.

    'நீட்' தேர்வு முடிவு தரவரிசை அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    மே 7 ல் நடந்த தேர்வை ரத்து செய்து, அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், புதிதாக 'நீட்' தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தனர்.

    திருச்சி சக்தி மலர்க்கொடி மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
    மே 24 ல் நீதிபதி எம்.வி.முரளிதரன், 'நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜூன் 12 க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.

    இதுபோன்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த இரு மனுக்களையும் அங்கு சேர்த்து விசாரிக்கும் வகையில், உயர்நீதிமன்ற பதிவுத்துறை மாற்றியது.
    டாக்டர்கள் பற்றாக்குறை : அரசுக்கு 'நோட்டீஸ்'

    பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:33

    சென்னை: அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, தமிழக அரசு மருத்துவமனைகளில், ஒரு லட்சம் டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 18 ஆயிரம் பேரே உள்ளனர். இதனால், தினமும் ஏராளமான நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
    அறுவை சிகிச்சைக்கும், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது.

    இதையடுத்து, ஆணையம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகள்; சுகாதார மைய வசதிகள்; மாவட்ட, தாலுகா ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை; அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை; காலி இடங்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக தலைமை செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோர், எட்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


    தஞ்சையில் எய்ம்ஸ் அமைக்க அரசு பரிந்துரை :
    மதுரையில் அதிக வசதிகள் இருக்காம்


    தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசு கேட்ட, 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, தஞ்சையில் மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ளது.



    தமிழகத்தில், எய்ம்ஸ் அமைக்கப்படும் என, 2015ல், மத்திய அரசு அறிவித்தது. அதற்காக, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சி புரம் ஆகிய, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    ஐந்து இடங்களில், ஏதாவது ஒன்றை உறுதி செய்ய, அனைத்து இடங்கள் குறித்தும், சவாலான, 10 கேள்விகள் கேட்டு, மத்திய அரசு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், ரயில், விமான போக்குவரத்து கட்டமைப்புகள், மருத்துவமனை வசதிகள், வேலை வாய்ப்புகள் குறித்தும், கேட்கப்பட்டு இருந்தன.

    அக்கடிதத்திற்கு, இரண்டு மாத தாமதத்திற்கு பின், தமிழக அரசு பதில் அனுப்பி உள்ளது. இந்த கடிதம், நமது நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதில், 'தஞ்சை மட்டுமே எய்ம்ஸ் அமைக்க தகுதியானது' என, தமிழக அரசு வெளிப்படையாக,குறிப்பிட்டுள்ளது.

    மதுரை அரசு மருத்துவமனையில், 350 கோடி ரூபாய்க்கு பல திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளதால், இங்கு எய்ம்ஸ் தேவை இல்லை என்ற தொனியில், கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

    மத்திய, மாநில அரசு திட்டங்கள் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வரும் தென் மாவட்ட மக்கள், எய்ம்ஸ் மருத்துவமனையாவது, தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், ஏமாற்றமே கிடைத்துள்ளது.

    இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதா கிருஷ்ணன் கூறியதாவது:நேர்மையான முறை யில், எய்ம்ஸ் அமையும் இடம் குறித்த தகவல்கள், அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசு எந்த இடத்தை தேர்வு செய்தாலும்,தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை நிராகரிப்பு ஏன்? :

    * மருத்துவ வசதிகள் குறித்த கேள்விக்கு, மதுரை மண்டலத்தில், ஒரு அரசு மற்றும் தனியார் கல்லுாரி கள் இருப்பதாகவும், 150 கோடி ரூபாயில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்டப்பட்டு

    வருவதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது.* தஞ்சையில் மருத்துவக் கல்லுாரி இருப்ப தையும், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ மனை கட்டப்பட்டு வருவதையும் குறிப்பிட வில்லை. தஞ்சையை விட, மதுரையில், அதிக மருத்துவ வசதிகள் உள்ளதாக காட்டப்பட்டு உள்ளது

    *மதுரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில், எரிவாயு குழாய்கள் செல்வ தாக, மாநில அரசு சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், அதை தவிர்த்து மருத்துவமனை அமைக்க இடம் உள்ளது. எரிவாயு குழாய் களை, வேறு இடத்திற்கு மாற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராக இருந்தது.

    - நமது நிருபர் -
    ஷீரடிக்கு பக்தி சுற்றுலா ரயில்
    பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:03

    சென்னை: ஷீரடிக்கு, பக்தி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யும் இணைந்து, பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களுக்கும், கோவில்களுக்கும், சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன.
    வரும், 26ல், மதுரையில் இருந்து சென்னை, எழும்பூர் வழியாக, ஆந்திரா மாநிலம், பண்டரிபுரம், மந்த்ராலயம் கோவில்கள் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வர, ஏழு நாட்கள் பக்தி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலா ரயிலில், நபருக்கு, 6,105 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி மற்றும் செல்லும் இடங்களில் சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்
    களுக்கு, கட்டண சலுகையும் உண்டு. மேலும் தகவலுக்கு, சென்னை, சென்ட்ரலில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., மையத்தை, 90031 40681 என்ற எண்ணிலும், www.irctctourism.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
    டீன்கள் மாற்றம்

    பதிவு செய்த நாள்08ஜூன்2017 22:43

    சென்னை: தமிழகத்தில், 20வது மருத்துவக் கல்லுாரியாக, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி, 2015ல் துவக்கப்பட்டது. இதன் டீனாக, டாக்டர் சாந்திமலர் இருந்தார். அவர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருவண்ணாமலை
    மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, டாக்டர் ஆர்.ஜெயந்தி ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பொது மருத்துவத் துறை தலைவராக பணியாற்றியவர்.
    அதிக சம்பளம் வழங்க முடியாது : அரசு டாக்டர்களுக்கு குழு பதில்

    பதிவு செய்த நாள்08ஜூன்2017 21:50

    மதுரை: 'தமிழக அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனையில் பணி செய்வதாலும், சொந்தமாக, 'கிளினிக்' நடத்துவதாலும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க முடியாது' என, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழு மறுத்துள்ளது.

    யு.பி.எஸ்.சி., என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் டாக்டர்களுக்கு, தமிழக அரசு டாக்டர்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. 'எங்களுக்கும் அதே சம்பளம் வேண்டும்' என, தமிழக அரசு டாக்டர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த, தமிழக அரசு நியமித்த குழுவினருடன், அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பேச்சு நடத்தினர். 

    இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், 'தமிழக அரசு டாக்டர்களுக்கு, வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு குழுவினர் மறுத்து விட்டனர்; 'தனியார் மருத்துவமனைகளில் பணி செய்வதாலும், சொந்த, 'கிளினிக்' நடத்துவதாலும் அந்த சம்பளம் வழங்க முடியாது' என குழு பதில் அளித்துள்ளது. இதனால் பேச்சு நடத்திய சங்கத்தினர், 'மத்திய அரசு வழங்குவது போல், தனியாரிடம் பணி செய்யாத அரசு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டாக்டர்கள் கூறிய தாவது: 'கார்ப்பரேட்' மருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்வது, அங்கு பகுதி நேரமாக பணி செய்யும் அரசு டாக்டர்கள் தான். அவர்கள் அரசு மருத்துவமனைகளில், கற்றுக் கொண்டவற்றை அங்கு செயல்படுத்துகின்றனர். ஆனால், அரசு மருத்துவமனைகளில் திறம்பட பணி செய்யாமல் ஒப்புக்கு வந்து செல்கின்றனர். 

    அதிக சம்பளம் அல்லது ஊக்கத்தொகை வழங்குவதால், இந்நிலை மாறி அரசு மருத்துவமனைகள் மேம்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினர்.
    எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் எப்போது? :அரசு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு

    தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.



    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

    இடைக்கால தடை :

    தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் எழுதியு உள்ளனர். இங்கு, அரசு மற்றும் தனியார் மருத் துவ கல்லுாரிகளில் உள்ள,5,650 எம்.பி. பி.எஸ்., இடங்களுக்கு, மே மாதத்தில் விண்ணப்பங்கள்

    வினியோகிக்கப்பட்டு, ஜூலை யில், மாணவர் சேர்க்கை, 'கவுன்சிலிங்' நடத்தப் படுவது வழக்கம். இந்தாண்டு, மற்ற மாநிலங்களில், விண் ணப்பங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தமிழகத் தில், இன்னும் வழங்கப் படவில்லை.

    அதற்கு, தமிழக அரசு,'நீட்' தேர்வு குறித்து, தெளி வான முடிவு எடுக்காததே காரணம். இந்நிலையில், 'நீட்' நுழைவுத் தேர்வில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வினாத்தாள்களில், மாறு பட்ட கேள்விகள் கேட்கப் பட்டத்தை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்,'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திட்டவட்டம் :

    தற்போது, இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பின் தான், எம்.பி.பி.எஸ்., விண்ணப்பங்கள் வினியோகிக் கப்படும் என, தமிழக சுகாதாரத் துறை திட்டவட்ட மாக தெரிவித்து விட்டது. தற்போது, இன்ஜினியரிங் விண்ணப்பம் வினி யோகிக்கப் பட்டு, கவுன்சிலிங் துவங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் வினியோகிக் கப்பட்டு, சேர்க்கை நடந்து வருகிறது. தற்போதைய

    சூழலில், மற்ற படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பிய பின் தான், எம்.பி.பி.எஸ்., விண்ணப் பங்கள் வினியோகிக்கப்படும் என, தெரிகிறது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்காத மாணவர்கள், மற்ற படிப்புகளில் சேர முடியா மல், ஓராண்டை வீணாக்கும் நிலைமை ஏற்பட்டுஉள்ளது.

    இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''மூன்று வித விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளன. நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த மறுநாளே, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என்றார். - நமது நிருபர் -

    DINAMALAR


    மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டிக்கும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்ற விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து, மாதந்தோறும், ஒரு கோடி ரூபாயை ராவ் பெற்று வந்தது வருமான வரித்துறை விசார ணையில் தெரிய வந்துள்ளது.



    அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் 2016 டிசம்பரில், வருமான வரித்துறையினர்

    சோதனை நடத்தினர். அவரது வீடு மற்றும் இதர இடங்களில் இருந்து 131 கோடி ரூபாய் பணம் 177 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்
    செய்யப்பட்டன.

    அவரது வீட்டில் சிக்கிய 'டைரி'யில் அமைச்சர் கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அப்போது தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவின் வீட்டிலும், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடந்தது.

    பின் அடையாறில் வசிக்கும் ராவின் மகன் விவேக் பாபிசெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:

    சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய டைரி தகவல்படி, ராமமோகன ராவுக்கு அவர் ஒவ்வொரு மாத மும் ஒரு கோடி ரூபாய்கொடுத்து வந்துள்ளார். 17 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்த தாக ஒப்புக்கொண்டுள்ள ராவின் மகன் விவேக் பாபிசெட்டி, சேகர் ரெட்டியிடம் 10 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

    சேகர் ரெட்டியின் டைரியில் மேலும் சில அமைச்சர்கள், அதிகாரிகள், அவரிடம் பணம்
    பெற்றிருப்பதற்கான தகவல்கள் இருந்தன. அது பற்றிய தகவல்களுடன், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தோம்.

    ஆனால், தற்போது தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனராக உள்ள ராவ் மீது மட்டும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கையை துவங்கி யுள்ளது. அமைச்சர்க ள் மீது நடவடிக்கை எடுக்காதது, சந்தேகம் தருவதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    - நமது சிறப்பு நிருபர் -

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...