Friday, June 9, 2017

ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிக்கு புதிய முதல்வர்

By DIN  |   Published on : 09th June 2017 04:08 AM  |  
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 20 -ஆவது அரசு மருத்துவக் கல்லூரியாக, சென்னையில் 55 ஆண்டுகளுக்கு பின்னர் 2015 -ஆம் ஆண்டில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது.
இந்தக் கல்லூரியின் முதல் முதல்வராக டாக்டர் சாந்திமலர் பொறுப்பேற்றார். இந்த நிலையில், அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக டாக்டர் ஆர்.ஜெயந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய இவர், அதற்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவத் துறை தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026