Wednesday, September 13, 2017

‘Courts not barred from staying probe in corruption cases’

Neither law nor interpretations of the Prevention of Corruption (PC) Act, 1988, by the Supreme Court have imposed any bar on courts from staying investigation in corruption cases, it was contended before the High Court of Karnataka on behalf of former Chief Minister B.S. Yeddyurappa.
The court, on Tuesday, heard the petitions filed by Mr. Yeddyurappa questioning registration of two cases against him for alleged corruption in exclusion of around 207 acres of land notified for acquisition.
Senior Counsel C.V. Nagesh, appearing for Mr. Yeddyurappa, contended that Section 19(3) (c) of the Act “only bars courts from staying proceedings initiated under the PC Act” and proceedings under the Act commence only after designated courts either take cognisance of an offence in warrant cases or frame charges after submission of charge sheet by the investigating agency. He also pointed out that the investigation of corruption cases is conducted as per the procedure under the Code of Criminal Procedure (Cr.PC) like in any other criminal cases as the PC Act does not prescribe any procedure for investigation.
Since the “process of investigation” does not fall under the ambit of the PC Act, Mr. Nagesh contended that courts are not barred from staying investigation, which is covered under the Cr.PC and not the PC Act.
Citing verdicts of the Supreme Court that ordered expediting of trials in corruption cases, Mr. Nagesh said that the apex court had repeatedly reiterated the bar imposed on courts from staying the trials of corruption cases and has not restrained any court from staying the investigation.

How NEET nixed their chances

Caught unawares:Confusion over whether NEET would be held in Tamil Nadu was another reason for the poor show.File photo  

Students from four districts fared badly in the exam

Over the last decade or so, four districts emerged as the top educational districts of the State, if the measure of success was entry of students into professional courses. The four districts in the western region — Namakkal, Dharmapuri, Krishnagiri, and Erode — renowned for their extra-rigorous coaching techniques have been attracting students in large numbers.
Also, over the years, these districts seem to have accounted for most number of students who secured MBBS and BDS seats in various government colleges across the State. This year, however, when the criteria for admission was NEET, the number of students who secured MBBS/BDS seats in these districts fell rather dramatically — to 373 from 1,750 in 2016.
“Though these districts are sometimes called backward, it certainly is not the case when it comes to education. These schools work on a blueprint geared towards propelling a student towards a seat in an engineering or medical college, and have even found great success with this technique,” says a Health Department official.
The blueprint includes ignoring the Class XI syllabus and vaulting straight into Class XII, with a particular approach to cracking the board exam. With Tamil Nadu admitting students to professional engineering and medical colleges based on these marks, the entire system was geared towards producing successful candidates in this very task.
Namakkal, for instance, in 2016, had the highest number of students who had got admission into MBBS/BDS at 957. It also has 13 schools that send more than 20 students to do medicine every year. This year, that number has dropped to 109, and the number of schools that have sent over 20 students is at three. The other three districts send only a fraction of Namakkal's 957 students, but their numbers are in several 100s too.
An education department official in Krishnagiri makes no bones about it: “NEET is the reason.” Students were either unprepared or, under prepared to ace the entrance exam this year, he added.
K. Murugan, who runs a coaching centre for Plus Two students at Mohanur, zeroed in on the nub of the issue: a majority of private schools skipped Class IX and Class XI syllabi regularly. With the NEET question paper containing questions from Class IX to XII, the students were naturally caught unawares, leading to their poor performance, he rationalised.
He reckoned it would take another couple of years to enable the students of Namakkal schools to gain their supremacy by performing well in the NEET.
Education Department officials in Erode agreed that there had been a decline in the number of students from the district being admitted to the MBBS course this year. They agreed that the root cause was the fact that class XI portions were ignored in these schools. Adding to this was the confusion over whether NEET would indeed be implemented in Tamil Nadu, one official said.
Even in instances where students from these districts did take up coaching for NEET, leaving out the class XI portions completely made the gulf too wide to bridge, educationists pointed out. Besides, as the issue continues to gain political and community level traction in Tamil Nadu, they urged that no confusion should prevail about the manner of admission into MBBS courses.
S. Palaniandi, chairman of the Subramanian Arts and Science College, Mohanur, Salem, also a retired teacher, called for employing teaching methods that would help students understand the subject, rather than promote rote learning, which cannot help a student tackle a competitive exam such as NEET. But he added, the government would do well to start NEET coaching centres across the State, so that the next batch of students is well equipped.
(With inputs from Syed Muthahar in Salem, P.V. Srividya in Dharmapuri and S.P. Saravanan in Erode)

AIADMK meet removes Sasikala as general secretary

Coordinator, co-coordinator to run party; TTV’s appointments invalidPowers to run party vested with coordinator, co-coordinatorDhinakaran’s appointmentsto party posts invalid

Nearly nine months after V.K. Sasikala was unanimously appointed interim general secretary of the AIADMK following then Chief Minister Jayalalithaa’s death, she was unseated from the post on Tuesday.
The general council of the AIADMK (Amma, PTA) convened under the joint leadership of Chief Minister Edappadi K. Palaniswami and his deputy O. Panneerselvam adopted a resolution nullifying all decisions taken by Sasikala from December 30, 2016 to February 15, 2017.
“Following an atmosphere of shock after Amma’s (Jayalalithaa’s) untimely death and concern, V.K. Sasikala was appointed as interim general secretary to attend to routine party work.
“This general council unanimously resolves to cancel her [Sasikala’s] appointment made on December 29, 2016. (It also) resolves that all those appointments and removals made by her between December 30, 2016 and February 15, 2017 are not valid,” the council resolution said.
Not expelled
The resolution, which did not assign any reason for ousting Sasikala from the top post, however, did not expel her from the party. She is currently serving a four-year prison term in Bengaluru following her conviction in a disproportionate assets case.
The general council, held at a marriage hall in Vanagaram on the outskirts of Chennai, also unanimously decided to abolish the post of general secretary of the party. All the powers enjoyed by the general secretary have been vested with the party coordinator and co-coordinator, two newly created posts.
Adopting a resolution, the ‘general council’ reasoned that nobody else could fill the post once held by “two great leaders” — MGR and Jayalalithaa. And hence the post of general secretary was done away with and Rule 43 of the party’s by-laws amended to this effect.
New chapter for party
Originally, this rule had mentioned that though the general council would have powers to frame, amend or delete any rule of the party constitution, the stipulation that the general secretary should be elected only by all the primary members of the party “cannot be changed or amended” since it formed the basic structure of the party.
The change heralds a new chapter in the history of the 45-year-old AIADMK, which has functioned as per the diktats of a single leader, be it founder M.G. Ramachandran or his successor Jayalalithaa.
A resolution was adopted ratifying the decision taken a few weeks ago to make Deputy Chief Minister O. Panneerselvam and Chief Minister Edappadi K. Palaniswami coordinator and co-coordinator of the unified party respectively. The coordinator and co-coordinator would be joint signatories of authorisation forms to be submitted to the Election Commission. Sasikala’s decision to anoint her nephew T.T.V. Dhinakaran as deputy general secretary of the party before she went to jail also stood invalidated.
Mr. Dhinakaran’s appointments to party positions and removing existing office bearers were declared “invalid” and “not in consonance with the party’s by-laws.”
Dhinakaran’s caveat
However, Mr. Dhinakaran told journalists in Madurai that the Madras High Court had made it clear on Monday that all decisions taken at the general council meeting would be subject to the final outcome of a petition challenging the validity of the meeting itself.
The meeting was attended by all important leaders of the two factions and the entire proceedings were concluded in three hours.
Out of nearly 2,300 members of the general council, 90% took part in the meeting, sources in the party claimed.
The appointment of former Ministers K.P. Munusamy and R. Vaithilingam as deputy coordinators was also approved by the general council.

HC summons leaders of striking teachers, staff

tnn | Sep 13, 2017, 01:05 IST


Madurai: The Madurai bench of the Madras high court on Tuesday directed the representatives of the Joint Action Council of Teachers Organisation and Government Employees Organisation representatives to appear before it on September 15 for disobeying a court order. The court also said that summons for their appearance should be given to them through the police commissioner of Greater Chennai.

The division bench of justices K K Sasidharan and G R Swaminathan gave this direction on a contempt petition filed by advocate T Sekeran from Madurai.

The petitioner's counsel said that the court had on September 7 had passed an order granting injunction restraining the joint action committee of Tamil Nadu Teachers Organisation - Government Employees Organisation, Tamil Nadu Government Employees Association, Tamil Nadu High Schools, Higher Secondary Schools Graduate Teachers Organisation and Tamil Nadu Primary Schools Teachers Organisation from resorting to the method of strike for redressal of their grievances in contravention of Rule 22 of the Tamil Nadu Government Servants Conduct Rules, 1973.

But, the associations violated the court order by continuing the strike, which amounts to contempt of court, the counsel said. The government said that adhering to the court direction, it issued a statement instructing the teachers to abandon their strike. However, a group of associations continued. Following it, the court sought appearance of the association representatives before the court.

Many Indian-Americans stay put in Florida despite evacuation warnings

PTI | Updated: Sep 9, 2017, 23:18 IST


A man fishes in the churning ocean as Hurricane Irma approaches Florida. (AFP photo)

WASHINGTON: A large number of Indian-Americans in Florida have decided to stay back despite US officials calling for a mandatory evacuation ahead of hurricane Irma's landfall on the coastal parts of the state.

As hurricane Irma barrelled towards Florida, Indian-Americans, who own a large number of hotels in Florida, have opened up their properties for people in need, so have temples and community places, with Indian non-profit organisations like Sewa preparing to provide food and necessary essentials to those effected by the storm.

"We have put the shutters, made all the precautions for any onslaught of the hurricane, because we have gone through these types of hurricanes every two years, so we know how to prepare," said Vivek Swaroop, who has his own consultancy business in Fort Lauderdale area of Florida, where a mandatory evacuation has been ordered.

According to the 2010 census, the Miami-Fort Lauderdale- West palm Beach area of Florida -- which is likely to be the worst affected part after Irma's expected landfall tomorrow morning, have an Indian American population of more than 40,000.

Swaroop said there was a lot of anxiety among Indian-Americans.

"Most of the Indian Americans that I know of, have barricaded their houses with shutters and essentials. Some of them who live on the East Side, which is near the ocean, have vacated," he said.

Hotelier Danny Gaekwad said that most of the Indians are well off and live in good quality single-family homes, which can easily withstand wind speed up to 120 miles per hour.

Gaekwad, who himself lives in Ocala area of Florida, was busy in evacuation of some 200 campers from his campground to a hotel of his own.

Every hotel till several hundred miles out of Florida are full to their capacity, he said.

The government has asked for mandatory evacuation of more than 5.6 million people.

Gaekwad said Indian-American hoteliers have opened up their hotels for people.

Even banquet halls are being used to provide shelter to people who have left their homes.

Community leader Chandra Kant Singhania, from Miami, said that most of Indian-Americans have decided to stay in their homes and are taking all precautions to stay safe.

"They are not leaving the city," he said.

However, not all are staying put with a number of Indian- Americans leaving their homes for safer places, as far as Las Vegas and New York.

Many like Satya Shaw are not taking chances.

"it took me 24 hours to convince my wife. Tomorrow is going to be a disaster. We are not staying here," he said, soon after he booked a 4pm flight out of Tampa.

The airport shuts down at 8pm.

"It is dangerous to stay here," Shaw said, adding that he has offered his house for others to take shelter while he is away.

However, for his friend Chandra Kant Patel, a resident of Tampa, it is too late to leave.

"Till yesterday, we were told Miami area would be the worst affected. Now we are being told the hurricane is moving towards Tampa," said Patel, who has a local manufacturing business.

Having taken all the precautions to stay safe, Patel feels that the businesses of Indian-Americans like him would be worst hit as a result of hurricane Irma.

As per 2010 census, Florida has more than 128,000 Indian-Americans.

Many temples and community centres have been opened up for shelter. Some of the temples in Florida and other neighbouring states were conducting special prayers.

"Looking at the frequency of natural disasters recently hitting our American continent, where we have enjoyed overwhelming freedom to practice and pursue our respective faiths and plurality, it behooves to hold 'havans' and prayer services for the well being of our fellow citizens affected by the calamities," said Subhash Razdan of the Gandhi Foundation USA.

Irma "is a storm of absolutely historic destructive potential", Trump said in his weekly address.

"I ask everyone in the storm's path to be vigilant, and to heed all recommendations from government officials and law enforcement," he said.

TOP COMMENTWell done NRIsPradeep Singh

"Nothing is more important than the safety and security of our people. We are doing everything we can to help with disaster preparations and, when the time comes, we will restore, recover, and rebuild -- together, as Americans," he added.

Trump said in such challenging times, the "strength and the resolve of the American spirit" is demonstrated "and we see the kindness and courage of our people".
Madras HC grants bail to doctor, directs him to hoist national flag for a week

Shanmughasundaram J| TNN | Sep 12, 2017, 14:51 IST



Dr A Kennedy hoisting the national flag, as directed by the Madras high court

VELLORE: The Madras high court has granted bail to medical officer (MO) of the Government Hospital in Ambur Dr A Kennedy in a case filed against him for allegedly insulting the national flag, with a condition that he hoists the national flag for a week.

Dr Kennedy approached the high court seeking bail in connection with the case filed against him for allegedly insulting the national flag during an Independence Day programme held on the premises of the GH on August 15.

When the national anthem was hoisted and the national anthem being sung, Dr Kennedy was seen talking over the phone. The video of the government doctor speaking over the phone was circulated on the social media.

Following this, former councillor of Ambur municipality Suresh Babu filed a complaint with the Ambur town police.

Acting on the complaint, the police registered a case under Section 2 of the Prevention of Insults to National Honour Act 1971 against him on charges of disrespecting the national anthem and flag. Dr Kennedy went on leave following the incident.

He surrendered before the HC and filed a petition seeking bail.

TOP COMMENTWhy was the cameraman not arrested?bileshwar mishra

HC judge Justice P N Prakash directed the petitioner to hoist the national flag every day at 10am for a week at the Ambur Government Hospital and salute the flag and sing the national anthem. The respondent (Ambur Town police) has been directed to monitor this and report to the judicial magistrate in Ambur daily, reads the HC order.

Adhering to the court order, the MO of the Ambur GH hoisted the national flag on Tuesday in the presence of police personnel.
Are you a vegetarian? You may be Vitamin B12 deficient

TNN | Updated: Sep 12, 2017, 23:23 IST

Chennai: One in five people in Chennai, a majority of them vegetarians, has a Vitamin B12 deficiency, according to data analysis of diagnostic laboratory Metropolis Healthcare. Tests results of more than 3 lakh samples, including 2 lakh women, showed that more than 15% of the population across nine cities did not have adequate quantity of vitamin 12.

The energy vitamin is the powerhouse that helps the body generate DNA, nerve and blood cells besides helping the brain stay healthy and boosting immunity. The body obtains vitamin B12 from animal-based foods like eggs, meat, shellfish, dairy or other supplements. The body needs to retain this vitamin through periodic consumption of vitamin B12-rich foods, as it is not designed to replenish or store the vitamin for a long time, according to Dr Kirti Chadha, head, Global Reference Laboratory, Metropolis Healthcare.

The analysis, conducted across nine cities, records vitamin B12 deficiency in 20% of those tested with Ahmadabad recording 27.94%, while Indore and Delhi recording 26.87% and 26.58% respectively. Although Chennai was ranked eight after Mumbai, 18.25% of the population tested were found to be deficient.

Besides diet, increasing age makes it difficult for the body to absorb Vitamin B12 people above the age of 50, suffering from celiac disease or other digestive problems push up the risk of developing this deficiency. "It also becomes harder if one has had a weight loss surgery or any other surgery of the stomach. Drinking heavily or taking acid-reducing medications for a long time also affects the absorption of Vitamin B12," Dr Chadha said.

Although anaemia, common among women, puts them at higher risk, statistics showed that the deficiency was more common among men compared to women. "It is probably because women come for opportunistic screening at least once during pregnancy. They are warned about B12 deficiency. The treatment for vitamin B12 or folate deficiency anemia depends on the cause of the condition. They receive injections, tablets or supplements as treatment," said senior gynaecologist Dr Nazira Sadique, from Cloudnine.
தற்கொலைகளை ஏன் நம்மால் தடுக்க முடிவதில்லை?

Published : 12 Sep 2017 08:53 IST

இள.சிவபாலன்






கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 லட்சம் தற்கொலைகள். பெரும்பாலானோர் 15-ல் இருந்து 29 வயதுடையோர். 15 வயதில் ஒரு வளரிளம் குழந்தை தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கிறது என்பதையே நம் மனதால் ஏற்க முடியவில்லை. ஆனால், அதிகபட்சத் தற்கொலைகள் இந்த வயதில்தான் நிகழ்கின்றன. “எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’’ என ஏழெட்டு வயது மகனோ / மகளோ சொல்லும்போது, அது நமக்கு நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. அந்த வார்த்தைகளின் பின்னுள்ள ஆழ்ந்த மனவலியை நாம் உணரத் தவறுகிறோம்.

தற்கொலை எண்ணம் இருப்பதாக ஒருவர் சொல்லும்போது, ஒரு பலவீனமான மனிதருக்கு முன், நாம் மிகுந்த பலசாலியாக, வாழ்க்கையைப் புரிந்துகொண்டவராக, வாழ்க்கையின் மீதான பதற்றங்கள் அற்றவராக நம்மை நினைத்துக்கொள்கிறோம். அந்த மமதையில் தற்கொலையின் அவலம் குறித்து நீண்ட போதனையைப் பாதிக்கப்பட்டவரிடம் நிகழ்த்துகிறோம். அவரது பலவீனங்களை அவரிடமே பட்டியலிடுகிறோம். தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று பரிகசிக்கிறோம். தற்கொலை எந்தப் பலனையும் தரப்போவது இல்லை என்ற அரிய உண்மையை அவருக்கு அறிவிக்கிறோம்.

தற்கொலையைத் தடுக்க, பாதிக்கப்பட்டவரிடம் பேசுவது அத்தனை முக்கியமானது என நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எப்போதாவது கேட்பதற்குத் தயாராக இருந்தோமோ?

காது கொடுத்துக் கேட்டோமா?

மருத்துவராக வேண்டும் என்ற உணர்வுபூர்வமான கனவை பால்ய காலம் முதல் சுமந்து, அதற்காகக் கடினமாக உழைத்து, தன்னை முழுவதுமாகத் தகுதியாக்கிக்கொண்ட ஓர் எளிய குடும்பத்து மாணவியிடமிருந்து அவளது கனவை, லட்சியத்தை அடாவடியாகப் பறிக்கும்போது, “ப்ளஸ்-டூவில் மதிப்பெண் நிறைய வாங்க வேண்டும் என்றார்கள். வாங்கினேன். நீட் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது” என்று அந்த மாணவி கதறுகிறாள். அந்த வலிமிகுந்த குரலை நாம் எத்தனை வாஞ்சையுடன் காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும்?

விளிம்புநிலை சமுதாயத்திலிருந்து ஒரு மாணவன், ஏராளமான எதிர்பார்ப்புகளோடு, ஒரு பல்கலைக்கழகத்தில் சேரும்போதும், அங்கு அவனுக்குச் சமத்துவமும் சுதந்திரமும் மறுக்கப்படும்போதும்; பாரபட்சங்கள் ஒரு கூரிய கத்தியாக அவனின் லட்சியவாதக் கனவுகளுக்கு முன் தொங்கும்போதும் “என்னைப் போல ஒடுக்கப்பட்ட மாணவர்கள், இது போன்ற பல்கலைக்கழகங்களில் சேரும்போதே கொஞ்சம் விஷமும், உறுதியான கயிறும் தந்துவிட்டால் மறுக்கப்பட்ட அவர்களது உரிமைகளைத் தங்களது மரணத்தில் தேடிக்கொள்வார்கள்” என்று சொன்னபோதே நாம் காது கொடுத்துக் கேட்டிருந்தால் அதே போன்ற ஒரு உறுதியான கயிற்றில் அவன் தூக்கு மாட்டிக்கொண்ட அவலத்தைத் தடுத்திருக்கலாமே?

நிச்சயமற்ற பருவநிலைகளை நம்பியிருக்கும் விவசாயத்தில், வாழ்வாதாரம் முழுவதையும் முதலீடு செய்யும் விவசாயி, ‘பருவமழை தவறும்போதும் அரசாங்கம் முன்னெப்போதையும்விட தீவிரமாக எங்களை அரவணைக்க வேண்டும்; எங்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையாவது உறுதிசெய்ய வேண்டும்’ எனச் சொல்லும்போது நமது காதுகளைத் திறந்து வைத்திருந்தால், வருடத்துக்குக் கிட்டத்தட்ட 20,000 விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்திருக்கலாமே?

மதிப்பெண்களின் மீதான கிளர்ச்சியில், நம் குழந்தைகள்மீது நாம் வைத்திருக்கும் போலியான மதிப்பீடுகளின் அழுத்தம் தாங்காமல் அவர்கள் கதறும்போது நாம் செவி கொடுத்துக் கேட்டோமா?

அந்தக் கணத்தில் ஒரு ஜீவன்...

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பது தற்கொலையாளர்களுக்கும் தெரியும். பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைத்து அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது இல்லை. பிரச்சினையை எதிர்கொள்வதற்கான நம்பிக்கைகள் இருண்டுபோன தருணத்திலேயே அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஒருவேளை, அந்தக் கணத்தில், அவர்களின் மனவலியை இறக்கி வைக்க; அவர்களின் வேதனையைப் பகிர்ந்துகொள்ளத் தோழமையான ஒரு ஜீவன் அருகில் இருந்திருந்தால் அந்தத் தற்கொலை முடிவு கைவிடப்பட்டிருக்கலாம்.

ஆரோக்கியமான சமூகமாக நாம் தோல்வி அடைந்துவிட்டதைத்தான் ஒவ்வொரு தற்கொலையும் நமக்கு உணர்த்துகிறது. நாமோ, நம் தோல்விகளை ஒப்புக்கொள்வதேயில்லை. மாறாக, தற்கொலை செய்துகொண்டவர் மீதே அதற்கான பழியையும் சுமத்திவிடுகிறோம். குற்றவுணர்ச்சியின் சிறு எச்சம்கூட நம்மீது படிவதை நாம் விரும்புவதில்லை. நம்மைப் பொறுத்தவரையில் அத்தனை தற்கொலையும் ஒன்று. வேறு வேறு புறக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் தனிப்பட்ட பலவீனங்கள் மட்டுமே அவற்றுக்கெல்லாம் முதன்மையான காரணம் என்று நம்புகிறோம். இந்த சிந்தனை ஓட்டம் மாறாத வரை தற்கொலைகளை நம்மால் தடுக்கவே முடியாது.

வாழ்க்கையின் மீதான மற்றும் வாழ்தலின் மீதான தீராத காதலில் இருக்கும் ஒரு மனிதர், துரோகத்தின் அல்லது ஏமாற்றத்தின் பொருட்டுத் தற்கொலையை நாடிச் செல்வதையும், வாழ்க்கையின் மீதான வெறுப்பில் ஒருவர் மரணத்தை நாடிச் செல்வதையும் நாம் எப்படி ஒரே அளவில் மதிப்பிட முடியும்? சுதந்திரமும் சமத்துவமும் நீதியும் வாழ்வாதாரங்களும் வாய்ப்புகளும் ஒரே மாதிரி இல்லாத ஒரு சமூகத்தில், தற்கொலைகளுக்கு மட்டும் எப்படி ஒரே மாதிரியான காரணத்தைச் சொல்ல முடியும்?


சமூகத்தின் தோல்வி

“தற்கொலை என்பது தனிமனித பலவீனம் அல்ல, அது ஒரு சமூகத்தின் தோல்வி. ஒவ்வொரு தற்கொலையிலும், சமூகம் ஏதோ ஒரு வகையில் தனது சித்தாந்தத்திலும் அடிப்படைக் கட்டுமானத்திலும் தோல்வி அடைகிறது. அதனால் ஒவ்வொரு தற்கொலையிலிருந்தும் படிப்பினைகளை எடுத்துக்கொண்டு அந்தச் சமூகத்தை மீள்கட்டுமானம் செய்வது அவசியம்” என்றார் தத்துவவியலாளர் எமில் டர்க்கெம்.

ஆனால், நாம் ஒவ்வொரு தற்கொலையையும் தனிமனித பலவீனமாக நிறுவுவதில் மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு தனிமனிதரின் மூளையில் ஏற்படும் சமநிலையற்ற வேதிமாற்றங்களையே அத்தனை தற்கொலைகளுக்கும் காரணம் என்று நிறுவ முயல்கிறோம். தற்கொலை செய்துகொள்பவர்களில் சுமார் 20% பேர் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், எல்லா தற்கொலைகளுக்கும் மனநோயைக் காரணமாக்குவது ஆபத்தானது.

நமது சுயநலம்

மனநோயும், தனிமனித பலவீனங்களும்தான் எல்லா தற்கொலைகளுக்கும் காரணம் என நாம் சொல்வதில் ஒரு சுயநலம் இருக்கிறது. அதில் நமக்குப் பங்கில்லை என்று குற்றவுணர்ச்சியின்றிக் கடந்து போகலாம். “நான் அப்போதே அவனிடம் அவ்வளவு அறிவுரை சொன்னேன், கேட்டானா?” என அங்கலாய்க்கலாம்.

தற்கொலையை நோக்கிய நீண்ட பாதையில், ஒருவர் அவ்வளவு தனியாக நடந்து வரும்போது, அவரின் கரங்களைப் பற்றிக் கருணையுடன், அவரது வேதனைகளைக் கேட்பதற்கு நாம் தயாராக இல்லாத பட்சத்தில்... நம்பிக்கையின் சிறு வெளிச்சத்தையாவது நம்மால் அவருக்குத் தர இயலாத பட்சத்தில்... நாம் சொல்லும் எந்த அறிவுரையும் அவரது அந்தப் பயணத்தை தடுக்கப்போவதில்லை.

அன்பு, பரிவு, பாசம், ஆதரவு போன்ற உணர்வுகளை ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பே, சக மனிதர்களின் சுயநலமற்ற அன்பிலும் இணக்கத்திலும்தான் இருக்கிறது. இங்கு ஒருவர் தன்னை நிராதரவாக உணரும்போது, பிறழ்வான அவரது மனம்தான் அதற்குக் காரணமாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறழ்வான சமூக அமைப்புதான் முக்கியமான காரணம். முதிர்ச்சியான குடிமைச் சமூகம், ஒவ்வொரு தற்கொலையிலும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதற்கு நம் கேளா செவிகளைத் திறந்து வைக்க வேண்டும். ‘நாலு வார்த்தை’ பேசுவது முக்கியம் போலவே, ‘நாலு வார்த்தை’ பேசுவதைக் கேட்பதும் இங்கு முக்கியம்.

-இள.சிவபாலன், மனநல மருத்துவர்,

தொடர்புக்கு: sivabalanela@gmail.com.

செப்டம்பர்-10: உலக தற்கொலைத் தடுப்பு நாள்
ஒரு நிமிடக் கட்டுரை: மாணவர் பசிதீர்க்கும் அட்சயப் பாத்திரம்!

Published : 12 Sep 2017 09:08 IST



ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் இளம் சிறார்களுக்கும் மதிய உணவு சமைத்துத் தரும் மிகப் பெரிய சமையல்கூடம் தெலங்கானா மாவட்டத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நரசிங்கி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ‘அட்சயபாத்ரா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 33-வது சமையல் கூடம் இது. இதுவரை கட்டப்பட்ட சமையல் கூடங்களிலேயே இதுதான் பெரியது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 35,000 பேருக்கு உணவு தயாரிக்கும் திறன்பெற்ற இந்த மையத்தைக் கட்டத் தொடங்கி வெகுவிரைவாகக் கட்டி முடித்திருப்பதை முன்னாள் மத்திய அமைச்சர்அபண்டாரு தத்தாத்ரேயா பாராட்டினார். பேங்க் ஆஃப் டோக்கியோ-மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. அளித்த ரூ.10.5 கோடி நிதியுதவியுடன், ஒன்பது மாதங்களுக்குள் மையம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 238 பள்ளிக்கூடங்களுக்கும் 366 அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த உணவு கொண்டு செல்லப்படும். இந்த மையம் அல்லாமல் பிற மையங்கள் மூலம் ‘அட்சயபாத்ரா’ தெலங்கானாவின் 880 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 95,585 மாணவர்களுக்கும், 27,000 அங்கன்வாடி பாலர்களுக்கும் மதிய உணவு அளித்துவருகிறது.

‘அட்சயபாத்ரா’ மூலம் இப்போது 16 லட்சம் குழந்தைகள் பசியாறுகின்றனர். 2020-க்குள் இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்துவது இதன் லட்சியமாகும். பெரிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப்படி இந்த சமையல் மையத்துக்கு நிதியுதவி செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார் டோக்கியோ-மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. வங்கியின் இந்தியப் பிரிவுத் தலைவர். சமையலறை கட்டுவதற்கு நிலம் தந்த கோ-சேவா மண்டலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

‘அட்சயபாத்ரா’ சமையல்கூடங்கள் இந்தியாவின் 12 மாநிலங்களில் 30 இடங்களில் இருக்கின்றன. ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு இவற்றால் உணவு தயாரி்க்க முடியும். இந்த சமையலறைக் கூடங்கள் நவீனமானவை. சமையல் முழுக்கப் பெரிய பெரிய எவர்சில்வர் கொள்கலன்களால் தயாரிக்கப்படுபவை. அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடம் அல்லது அவற்றுக்கு அருகில் உள்ள இடம் தேர்வுசெய்யப்பட்டு, சமையலறை கட்டப்படுகிறது.

காலையிலேயே சமையல் தயாராகத் தொடங்குகிறது. சோறு பொங்கும் பாத்திரம் 500 லிட்டர் கொள்திறன் உள்ளது. பருப்பு, சாம்பார் தயாரிப்புக்கான பாத்திரம் 1,200 லிட்டர் முதல் 3,000 லிட்டர்கள் வரை கொள்திறன் உள்ளது. பாத்திரங்கள் பெரியது என்பதால், அவற்றை ஓரிடத்திலிருந்து நகர்த்த டிராலிகள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகளைப் பத்திரப்படுத்தி வைக்க பெரிய அளவில் குளிர்பதன சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் தரமான கல்வியைப் பெறுவதற்கு இந்தப் பசியாற்று மையம் உதவும் என்கிறார் ‘அட்சயபாத்ரா’ தலைவர் மது பண்டிட். தொடரட்டும் சேவை!

தமிழில்: ஜுரி
கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?

Published : 08 Sep 2017 10:03 IST

சைபர்சிம்மன்

(



மாற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

எனவே, உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப் பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு முதன்மை அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாற்றிக்கொள்ள மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை.

ஸ்டாப் வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப் வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப் வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்குத் தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருந்தால், லேப் வசதி மூலம் தொடச்சியாகப் பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிட்டல் எழுத்துகளை அமைக்க விரும்பினால், அதற்கான வசதியையும் இந்தத் தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் ‘டைட்டில் கேஸ்’ என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துகளை லோயர் கேஸ் அல்லது அப்பர் கேஸாக மாற்றவும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளைத் தேட

கூகுளில் தகவல்களைத் தேடும்போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100-க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல். கோப்புகளையும் எளிதாகத் தேடலாம். எச்.டி.எம்.எல். என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளைக் காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதேபோல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும்போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையைச் சேர்த்துக்கொண்டால் போதும், கோப்புகளை மட்டும் தேடலாம்.

உடனடி பதில்கள்

சில நேரம் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி உண்டு. இந்த வசதி ‘ஐபேங்க்’ என சொல்லப்படுகிறது. தேடல் பதத்துக்கு முன் ஆச்சரியக்குறியைச் சேர்த்து, குறிப்பிட்ட தளத்துக்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்துக்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம்.

‘இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ்’ எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. ‘கூகுள் நாலெட்ச் கிராஃப்’ எனும் பெயரில் இதுபோன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோதான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும்தான் தேவை என்றால், தேடல் பதத்துக்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையெனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப்பை மட்டுமே சார்ந்திருப்பதுதான் ஒரே குறை.

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளைப் பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும்கூடப் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள்போல வருமா எனக் கேட்பவர்களுக்காக கூகுள் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சினையா எனும் பொருள்பட, ‘ஈஸ் கூகுள் டவுன்’ என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் எனத் தோன்றுகிறது.
கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

Published : 12 Sep 2017 08:12 IST


ஆர்.ஷபிமுன்னாபுதுடெல்லி




கோப்புப் படம்

தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்தி மொழி வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த 1949 செப்டம்பர் 14-ல் இந்தியை அரசு மொழியாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மக்களிடையே எழுந்த எதிர்ப்பை திராவிட கட்சிகள் கையில் எடுத்து கடும் போராட்டத்தில் குதித்தன. மத்திய அரசும் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிடவில்லை என்று புகார் நிலவுகிறது. இந்நிலையில், தொலைதூரக் கல்வியில் இந்தி பயில சேர்ந்த மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குநரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையம் செயல்படுகிறது.

இந்தி மொழி கற்க 2012-ல் சான்றிதழ் பிரிவில் 1,886 பேர் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் அதிக அளவாக 7,447 ஆக உயர்ந்தது. பட்டயப் படிப்பில் 475 பேர் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு இது 1,572 ஆக உயர்ந்தது. பொறியியல் மாணவர்கள் இந்தி பயில அந்த ஆண்டில் அதிக விருப்பம் காட்டியதே இந்த உயர்வுக்கு காரணம் ஆகும்.

கொங்கனி, ஒரியா, பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி ஆகிய மொழிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது. இதில் மற்ற அனைத்து மொழிகளையும் விட தமிழில் இந்தி கற்பவர்கள் படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் 70 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் இந்தி இயக்குநரக அதிகாரிகள் கூறும்போது, “வழக்கமாக தொலைதூரக் கல்வியில் இந்தி கற்கச் சேரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. அவர்கள் நோக்கம் இந்தி கற்றுக் கொள்வது மட்டுமே. பாடங்களை பெற்று கற்றுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்பவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தனர். இதற்கிடையே இந்தி பிரச்சாரத்திற்காக தென் மாநிலங்களை குறிவைத்து மத்திய இந்தி இயக்குநரகம் சார்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்கள் கொண்ட அந்தப் படத்திற்கு ‘தக் ஷின் பாரத் மே இந்தி (தென்னிந்தியாவில் இந்தி)’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியால் மக்களிடையே ஒற்றுமை வளர்ந்து அது சுதந்திரப் போராட்டங்களில் அதிக பங்களித்ததாகவும், அதனால் மக்கள் இந்தி கற்பதை ஆங்கிலேயர்கள் தடுக்க முயன்றதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. வயல்வெளி உட்பட பல இடங்களில் மக்கள் ரகசியமாக இந்தி கற்றதாகவும் காட்டப் படுகிறது.
வெளிநாட்டு உயர்கல்வி: கனவு தேசத்தில் படிக்கப் புறப்படுங்கள்!

Published : 12 Sep 2017 10:30 IST


எஸ். ஆர். இராஜகோபாலன்




அயல்நாடுகளில் உயர்கல்வி படிக்கும் கனவு பலருக்கு இருக்கும். தரமான கல்வி, படித்து முடித்தபின் நல்ல வேலைவாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், மேலை நாடுகளுக்குச் செல்லும் அனுபவம், அதனால் கிடைக்கும் அங்கீகாரம் இப்படி அதற்குப் பின்னால் பல காரணங்கள் பின்னப்பட்டுள்ளன. ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இது நிறைவேறாத கனவாகவே கலைந்துபோகிறது. காரணம், சரியான வழிகாட்டுதல் இன்மையே.

வாய்ப்பளிக்கும் டாலர் தேசம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் உட்படப் பல்வேறு உலக நாடுகளில் உங்களுக்கு விருப்பமான படிப்பைப் படித்துப் பிரகாசிக்கலாம்.

கல்வி, மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார பலம், தொழில் வளம், விவசாய மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் முன்னணி வகிக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசுகளையும் வட அமெரிக்க விஞ்ஞானிகள்தான் அதிக அளவில் பெற்றிருக்கிறார்கள்.

ஏனென்றால், வட அமெரிக்காவில் மட்டும் தரமான கல்வி அளிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கில் தரச்சான்றிதழ்கள் பெற்ற சமுதாயக் கல்லூரிகளும் (Community Colleges) இருக்கின்றன. வட அமெரிக்கா முழுவதும் ஆங்கில வழிக் கல்விதான். மக்கள் பேசும் மொழியும் ஆங்கிலம்தான். இங்கு தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், நிர்வாகவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், மனோதத்துவம், மருத்துவம், சட்டம் போன்ற எல்லாப் படிப்புகளுக்கும் மதிப்பும் அதற்குரிய வேலைவாய்ப்பும் உள்ளன.

இங்குக் கல்விக்கான செலவு ஆண்டுக்கு 35 ஆயிரம் டாலர் முதல் 75 ஆயிரம் டாலர்வரை. இந்தத் தொகை கல்விக் கட்டணம், தங்கும் வசதி, சாப்பாடு, காப்பீட்டுத்தொகை, புத்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சம்பாதித்துப் படிக்கலாம்!

இங்கு படிக்கும்போதே பல்கலைக்கழக வளாகத்தில் பலவிதப் பகுதிநேர வேலைகளைச் செய்து பணம் ஈட்ட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் வேலை செய்யலாம். வேலைக்கேற்ப ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் முதல் பதினைந்து அல்லது இருபது டாலர்வரை சம்பாதிக்கலாம். இதைத்தவிர முதல் செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், உதவித்தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில், இளநிலை மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சி சம்பந்தமான வேலை, அலுவலக வேலை, கணினி வேலை, உணவு விடுதியில் வேலை போன்ற 15 வகையான வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவை தவிர ஒரு வருடம் முதுநிலைப் படிப்பு (MS) முடிந்தவுடன் பயிற்சி வேலையும் கிடைக்கும். இந்தப் பயிற்சியைப் பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்துதரும். இதன்படி 36 மாதங்கள்வரை ஒரு மாணவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதிக்கலாம். இது சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதன்பிறகோ முன்போ அந்த மாணவர் அதே பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன்னுடைய மேல்படிப்பைத் தொடரலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீதமுள்ள படிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் முறைகள் கையாளப்படுகின்றன. தாங்கள் கற்றவற்றைத் தாங்களாகவே நூலகத்திலும் சோதனைக் கூடத்திலும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. மாணவர்களே சிறப்பு வகுப்பு எடுக்கும் திட்டமும் கடைப்பிடிக்கப்படுவதால் மனப்பாடத்துக்கு இடமில்லை.

தேவையான தகுதி

வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் முதலில் ஆங்கில அறிவுக்கான சோதனைத் தேர்வுகளான TOEFL, SAT ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கனடா, வட அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்பானது (BS) நான்கு வருடங்கள். இதன் பிறகு இரண்டாண்டு முதுநிலைப் படிப்பை (MS) மேற்கொள்ளலாம். நேரடியாக முதுநிலைப் பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் இந்தியாவில் 16 வருடங்கள் கால அவகாசம் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

வேலை அனுபவம் கட்டாயம்

இந்தியாவில் MA., M.Sc., B.E., B.Tech., போன்ற பட்டங்கள் பெறுபவர் நேரடியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டாயமாக TOEFL, GRE போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். உங்களுடைய ஆங்கிலம், கணித அறிவு இந்தத் தேர்வுகளில் சோதிக்கப்படும்.

நிர்வாகவியல் (MBA) படிக்க விரும்பினால் TOEFL, GMAT போன்ற தேர்வுகளை எழுத வேண்டும். MBA படிக்கக் குறைந்தது இரண்டு வருட வேலை அனுபவம் கட்டாயம்.

வசந்த காலம், இலையுதிர்காலத்தில்தான் பொதுவாக வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. வெளிநாட்டு மாணவர்களை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனுமதிப்பதில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களுக்கு 40 அமெரிக்க டாலர் முதல் 150 டாலர்வரை வசூலிக்கப்படும்.

இரட்டை ஏற்பாடு உள்ளது!

குட்டி நாடான சிங்கப்பூரில் உலகத் தரம் வாய்ந்த நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், சிங்கப்பூர் நிர்வாகக் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. இங்கு இளநிலைப் படிப்புகளில் சேர ஆங்கிலத் திறனைச் சோதிக்கும் IELTS கட்டாயம் எழுத வேண்டும். நிர்வாகவியல் படிக்க விரும்புபவர்கள் GRE, GMAT தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவற்றைத் தவிர சிங்கப்பூரில் உரிய அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களும் உள்ளன. இவை ஆஸ்திரேலியா, கனடா, வட அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள சில சிறந்த பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கிவருகின்றன. சிங்கப்பூரில் ஒரு வருடமும் அவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமும் என்கிற அடிப்படையில் அளிக்கப்படும் ‘இரட்டை ஏற்பாடு’ (Twinning Program) என்கிற சான்றிதழ் படிப்பைப் படிக்கலாம்.

கட்டணம் குறைவு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தரமான உயர் கல்வி அளிக்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் இப்பல்கலைக்கழகங்களில் இணைய IELTS எழுத வேண்டும். அதில் 9 மதிப்பெண்ணுக்கு 6.5 மதிப்பெண் பெறுவது நல்லது. இந்த நாடுகளில் இளநிலை மூன்று ஆண்டுகள் படிப்பாகவும், முதுநிலை ஒரு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் படிக்க அவர்களுடைய பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம். அங்கும் சமீப காலமாக ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனாலும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட அந்தந்த நாட்டு மொழிகளில் பேசும் திறமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் அவசியம்.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் செல்கின்றனர். சில பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், முதலாமாண்டு முடிவுக்குள் அவர்களுடைய பிராந்திய மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும். இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கல்விக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ரஷ்யா, சீனாவில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மிகவும் குறைவு.

கடன் உதவி

அயல்நாடுகளில் உயர்கல்வி பெற அதிகம் செலவாகும் என்கிற கவலை பெற்றோர்களுக்கு வேண்டாம். வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. அசையாத சொத்து இருந்தால், மாணவரின் பெற்றோர் கணிசமான மாதச் சம்பளம் பெறுபவராக இருந்தால் ரூ.30-35 லட்சம்வரை கல்விக் கடன் பெறலாம். இந்தக் கல்விக்கடனை 84 மாதங்களில் மாணவர் மேற்படிப்பு முடித்து வேலை கிடைத்த பிறகு கடனை அடைக்கலாம். அதுவரை ஆண்டுக்கு 14% வட்டி.

மேல்நாடுகளில் உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும் முன்னர் அயல் நாட்டு பல்கலைக்கழகங்களின் தரம், அங்கு அளிக்கப்படும் பாடப் பிரிவுகள், உதவித்தொகை பெறக்கூடிய வாய்ப்பு, படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு, விசா சம்பந்தமான விவரங்கள் உள்ளிட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் தேர்ந்த கல்வி ஆலோசகரை அணுகுவது நல்லது.

கட்டுரையாளர் அயல்நாட்டு கல்வி குறித்த ஆலோசகர்,
சென்னை
ஆங்கில​ம் அறிவோமே 176: எதற்கெல்லாம் கண்ணடிப்பார்கள்?

Published : 05 Sep 2017 10:45 IST

ஜி.எஸ்.எஸ்.





கேட்டாரே ஒரு கேள்வி

# என்ற குறியீட்டை ஒருவர் ‘Hound sign’ என்று குறிப்பிட்டார். அகராதியைப் பார்க்கும்போது hound என்றால் நாய் என்று போட்டிருக்கிறது. மேற்படி குறியீட்டுக்கும், நாய்க்கும் என்ன தொடர்பு?

*******************

“Feelers என்கிறார்களே அவர்கள் யார்?”

To put out feelers என்றால் நீங்கள் செய்த அல்லது செய்யப்போகும் ஒரு செயலைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் எடுக்கும் முயற்சி.

“I have been putting out a few feelers and it seems that most people are against the committee we have formed” என்றால் நீங்கள் ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறீர்கள். அது குறித்த மக்கள் கருத்து என்ன என்பதை அறியச் சில முயற்சிகளை எடுக்கிறீர்கள் (இதற்காகச் சில பேரை நீங்கள் நியமிக்கக் கூடும்). இதன் மூலம் மக்கள் அந்தக் குழுவை ஏற்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறீர்கள்.

கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி போன்றவற்றின் தலைப் பகுதிக்கு அருகே இரண்டு நீளமான கறுப்புக் குழாய்கள் இருக்கும். இவற்றை feelers என்பார்கள் (சில சமயம் antenna என்றும் கூறுவதுண்டு). இவற்றைக் கொண்டு எதிர்ப்படும் பொருள்களைத் தொட்டுப் பார்த்து அவற்றின் தன்மை குறித்து இந்தப் பூச்சிகள் அறிந்துகொள்ளும்).*******************

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில் இது. hound sign அல்ல. Pound sign. அதாவது எடையின் அளவீடான பவுண்ட் என்பதற்கான குறியீடுபோலவே இது அமைந்திருப்பதால் அப்படிக் கூறுகிறார்கள்.

இதை octothorpe என்றும் குறிப்பிடுகிறார்கள். Octo என்றால் 8 என்று பொருள். எண்ணிப் பார்த்தால் இந்தக் குறியீட்டில் எட்டு முனைகள் இருக்கும்.

என்றாலும் தற்காலத்தில் இந்தக் குறியீட்டை Hashtag என்றுதான் பலரும் குறிக்கின்றனர். இசைக் கலைஞர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது அதை sharp என்பதற்கான குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது அரை ​step அதிகமாக இசைக்க வேண்டும்.

புரூஃப் திருத்தும்போது இரண்டு வாக்கியங்களுக்கு நடுவே இடைவெளி வேண்டும் என எண்ணினால் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

கணினி சங்கேதக் குறியில் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால் ‘தொடர்வதெல்லாம் கருத்துகள்தானே தவிர ஆணைகள் இல்லை’ என்று பொருள்.

*******************

Invariably என்றால் என்ன பொருள்?

Variation என்றால் மாறுபடுவது. மாறுபடாத தன்மை கொண்டிருந்தால் invariably என்று குறிக்கப்படுகிறது. அதாவது invariably என்பதன் சம வார்த்தை always.

The train is invariably late என்றால் (கிட்டத்தட்ட) எல்லா நாட்களு​மே அது தாமதமாகத்தான் வருகிறது என்று பொருள்.

For a lot of companies the biggest costs are invariably employment costs.

‘Forty winks’ என்று எதைக் குறிப்பிடுவார்கள் என்ற கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

முதலில் wink என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். வேகமாகக் கண்ணை ​மூடித் திறப்பதை wink என்பதுண்டு. ஒரு நகைச்சுவையைக் கூறிவிட்டு நாம் கண்ணடிப்பதுண்டு. அன்பு காரணமாகவோ அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகவோ கண்ணடிப்பதுண்டு (வேறு எதற்காவது கண்ணடிப்பார்களா என்ன?) இப்படிக் கண்ணடிப்பது என்பதும் winkதான். He winked at them as they passed.

பளபளப்பதையும் சில சமயம் winked என்ற வார்த்தையால் குறிப்பிடுவதுண்டு. The diamond in the necklace winked in the moonlight.

Forty winks என்றால் குட்டி ​தூக்கம் என்று அர்த்தம். இதற்கு forty என்ற எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

போட்டியில் கேட்டுவிட்டால்?

இந்த நான்கில் இலக்கணப்படியும், அர்த்தத்​ தின்படியும் சரியான வாக்கியம் எது?

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

(3) Though he worked hard he failed.

(4) He worked hard and failed.

(5) He hardly worked but failed.

இலக்கணப்படி நான்காவது வாக்கியம் சரியானதுதான். ஆனால், கடுமையாக வேலை செய்தும் அவன் தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இருக்குமளவுக்குக் கடுமையான வேலை செய்தான், தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இல்லை.

Working hard என்றால் கடுமையாக வேலை செய்வது. Hardly worked என்றால் (கிட்டத்தட்ட) வேலையே செய்யவில்லை என்று அர்த்தமாகிறது. எனவே, ஐந்தாவது வாக்கியம் சரியானதல்ல.

இப்போது முதல் மூன்று வாக்கியங்களைப் பார்க்கலாம். Though என்று ஒரு வாக்கியம் தொடங்கினால் yet என்பது அந்த வாக்கியத்தின் பின்பகு​தியில் வர வேண்டும். எடுத்துக்காட்டு - Even though she spoke to me rudely, yet I will be polite to her. இப்படிப் பார்க்கும்போது முதல் இரு வாக்கியங்களுமே சரியானவையாக உள்ளன.

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

சிப்ஸ்

Dumbfound என்பதற்குப் பொருள் என்ன?

வியப்பின் எல்லைக்கே செல்வதை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

Mac என்றால் என்ன?

பேச்சு வழக்கில் mackintosh என்பதை mac என்று சுருக்கி அழைக்கிறார்கள். தண்ணீர் புகாத ரப்பரால் ஆன உடையை (Rain Coat) mackintosh என்பார்கள்.

தவறுவது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம். இதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

To err is human. To forgive is divine.


தொடர்புக்கு - aruncharanya@gmail.com
ஆங்கிலம் அறிவோமே 177: தப்பிக்க விடாத பொத்தான் துளை!

Published : 12 Sep 2017 10:30 IST


ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

Loo என்றால் கழிப்பறையைக் குறிக்கிறது. Waterloo என்பதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா?

Waterloo என்பது நெப்போலியனுக்குத் தோல்வியை அளித்த இடம். அது பெல்ஜியத்தில் உள்ளது.

பிரெஞ்சு மொழியில் ‘லூ’ (L’eau) என்பது நீரைக் குறிக்கும். (சிறுநீர், பிற நீர் இரண்டையும்தான்!).

I will just go to the loo என்றால் டாய்லெட்டுக்குச் சென்று வரவிருக்கிறார் என்று அர்த்தம். Loo roll என்றால் toilet paper.

பிரிட்டனில் கழிப்பறையை latrine என்பார்கள். அமெரிக்காவில் அதை wash room என்பார்கள்.

Toilet என்பது கழிவறையைக் குறிக்கும். அதே நேரத்தில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தன் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளும் அறையையும் குறிக்கும். அதனால்தான் சில பேர் toilet என்பதை ஒப்பனை என்று மொழிபெயர்கிறார்கள். பிரெஞ்சு மொழியில் ‘toilette’ என்றால் ‘துணி அல்லது உறை’ என்று பொருள்.

************

He was high என்றால் என்ன பொருள் என்று கேட்கிறார் ஒரு <DP>வாசகர்.

இங்கே high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் எக்கச்சக்கமான சந்தோஷத்தில் இருக்கிறார் என்பதுடன் மிக மிக உற்சாகப் பெருக்கிலும் இருக்கிறார். இதன் காரணம் அவருக்குக் கிடைத்த ஏதோ மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம் அல்லது மதுவை அருந்தியதாலும் இருக்கலாம்.

He has been on a high ever since his article was published in the magazine.

************

Face value என்றால் என்ன?

ஒரு நாணயத்திலோ அஞ்சல் தலையிலோ அச்சிடப்பட்டிருக்கும் அதன் மதிப்பு. பொதுவாக அச்சிடப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதன் நிஜ மதிப்பு குறைவாக இருக்கும்.

அதாவது ஒரு நாணயத்திலுள்ள உலோகத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கலாம். ஆனால் 10 ரூபாய் என்று அச்சிடப்பட்ட நாணயம் என்றால் அதன் face value 10 ரூபாய்.

The coins are sold for the metal they contain rather than their face values.

To accept something at face value என்றால் ஒன்றை அப்படியே ஏற்றுக்கொள்வது. அதாவது அது நிஜம்தானா, எந்த அளவுக்கு நிஜம் என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏற்றுக்கொள்வது. These threats should not be taken at face value என்பதன் பொருள் “இந்த எச்சரிக்கையை அப்படியே நம்பிவிடத் தேவையில்லை” என்பதாகும். I take her story at face value because I assume that she is not lying.




“Normalcy என்பதற்கும் normality என்பதற்கும் என்ன வேறுபாடு” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

normality என்றாலும், normalcy என்றாலும் ஒன்றுதான்.

Normality என்றாலும் normalcy என்றாலும் normal ஆக இருக்கும் ஒரு நிலை. அதாவது வழக்கமாக இருப்பது. எதிர்பார்க்கக்கூடியது. “The place gradually returned to normality” என்றால் (இடையில் ஏதோ காரணத்தால் எதிர்பாராத சூழல் உண்டான) அந்த இடம் மெள்ள மெள்ள தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது” என்று பொருள்.

************

வங்கியில் காசோலைகளை நிரப்பும்போது சிலர் செய்யக்கூடிய தவறுகளைக் கண்டிருக்கிறேன்.

40 என்பதை fourty என்று சிலர் குறிப்பிடுவார்கள். Forty என்பதே சரி.

3005 என்ற தொகையை சொற்களில் எழுதும்போது Three thousand five என்று எழுதுவார்கள். Three thousand and five என்றுதான் எழுத வேண்டும்.

வேறு சிலர் three thousands and five என்று எழுதுவார்கள். இங்கே thousands தவறு - thousandதான்.

************

தொடக்கம் இதுதான்

Buttonhole என்ற வார்த்தையைப் படித்தவுடனேயே அதன் பொருள் உங்களுக்கு விளங்கி இருக்கும், சட்டைகளில் பொத்தான் நுழைப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் துளைதான். ஆனால் Buttonhole என்ற வார்த்தையை verbஆகவும் பயன்படுத்துவதுண்டு.

ஒருவரிடம் பேசுவதற்காக அவரைப் பிடித்து வைப்பதைத்தான் இப்படிக் கூறுவார்கள். தான் சொல்வதை முழுவதுமாக எதிராளி கேட்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அவரது சட்டை பொத்தானுக்கான துளையை விரல்விட்டுத் தன்னருகே இழுத்தபடி அதைக் கூறும் வழக்கம் 18-ம் நூற்றாண்டில் இருந்ததாம். எதிராளி அவருடைய விருப்பத்துக்கு மாறாக இந்தப் பேச்சைக் கேட்கும்படியாகிறது என்பது வெளிப்படை.

1860-களில் தையல் கலைஞர்கள் கழுத்துப் பகுதியில் பொத்தான் இல்லாமலேயே அதற்கான ஒரு துளையையும் வைத்துத் தைப்பது வழக்கமாம். காரணம் மேலே குறிப்பிட்டதுதான்.

Buttonhold என்ற வார்த்தை நாளடைவில் Buttonhole என்ற verb ஆக மாறியது என்பதுண்டு.

சிப்ஸ்

# In due course என்றால்?

வருங்காலத்தில், சரியான சமயத்தில். பெரும்பாலும் அலுவலகக் கடிதப் போக்குவரத்தில் இதைப் பயன்படுத்துகிறோம். I will let you know my decision in due course.

# Lessen, lesson என்ன வேறுபாடு?

முறையே குறைத்தல், பாடம்.

# Pitiable, Pitiful ஆகிய இரு வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்டவையா?

ஆமாம். பரிதாபப்படத்தக்க.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

இணைய உலா: துரத்தும் ஆன்லைன் விளையாட்டு பூதங்கள்!

Published : 08 Sep 2017 09:35 IST

க. ஸ்வேதா





புளு வேல் என்ற விளையாட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவதால், அதைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், புளு வேலைப் போல இன்னும் பல விளையாட்டுகளை இளைஞர்கள் தினமும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை ஒரே அடியாக மரணத்தைத் தூண்டாவிட்டாலும், ‘ஸ்லோ பாய்சன்’ போல மெதுவாக தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றன.

‘போக்கிமான் கோ’ என்ற மொபைல் விளையாட்டும் புளு வேல்போல விபரீதமான விளையாட்டுதான். இது ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் அறிமுகமாகி, பின் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இது 2016-ல் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையையும் படைத்தது. போக்கிமான் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைக் கொண்டு, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த விளையாட்டு வரவேற்பை பெற்றது. ஆனால், பிறகுதான் இதன் விபரீதங்கள் தெரிய ஆரம்பித்தன. அமெரிக்காவில் 17 வயது பெண் விடியற்காலையில், வெகு தூரம் சென்று, யாரும் இல்லாத இடத்தில் போக்கிமானை பிடிப்பதற்கு பதில் சவத்தை கண்டுபிடித்தார். அப்போதுதான் இந்த விளையாட்டின் விபரீதங்களைப் பலரும் உணர ஆரம்பித்தார்கள்.

இந்த விளையாட்டை பயன்படுத்தி பல திருட்டு சம்பவங்களும் கொலைகளும்கூட நடந்துள்ளன. வாகனம் ஓட்டிச் செல்லும்போது இதை விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, மக்கள் சுடுகாடுகள், அனுமதி மறுக்கப்பட்ட பல இடங்களுக்கு அத்துமீறி நுழைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த விபரீதமும் இந்த விளையாட்டால் நடக்கவில்லை.

இதேபோல் பல ஸ்மார்ட்போன் கேம்களும் வீடியோ கேம்களும் நமக்கே தெரியாமல் தீங்கு விளைவிக்கின்றன. ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ’ போன்ற வீடியோ கேம்ஸ் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு கட்டத்தில், விளையாடுபவர் ஒருவரை துன்புறுத்தி கேள்விகள் கேட்பதுபோல் விளையாட வேண்டும். அதில் சரியான விதிமுறைகள் எதுவும் இல்லாததால், ஆடுபவர் தன் விருப்பத்துக்கு அந்த நபரை துன்புறுத்த ஆரம்பித்தார். இந்த விளையாட்டும் மிகுந்த விமர்சனத்துக்குள்ளான விளையாட்டுதான்.

பல ஆண்டுகளாக ஏதோ ஒரு ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமைப்பட்டுகொண்டுதான் இருக்கிறார்கள். கேண்டி க்ரஷ், மினி மிலிடியா போன்ற விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது.
கண்களால் ‘ஒளி’ செய்!

Published : 09 Sep 2017 09:57 IST

பெ. ரங்கநாதன்





தேசிய கண் தான இரு வாரம்: ஆகஸ்ட் 25 - செப்டம்பர் 8

‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, சிம்ரனின் கண்களில் அமிலம் பட்டுத் தன் இரண்டு கண் பார்வையையும் இழந்து விடுவார். அவருக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பார்வை கிடைப்பதாகக் கதை.


இந்த சினிமா பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் சந்தேகம், கண்ணை தோண்டி எடுத்துவிட்டு இறந்தவர்களின் முழு கண்களையும் வைத்து விடுவார்களா என்பதுதான்.

அப்படியல்ல. கருவிழி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கருவிழியை அகற்றிவிட்டு, இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கண்ணின் கருவிழியை எடுத்துப் பொருத்தும் அறுவை சிகிச்சைதான் ‘கருவிழி மாற்று அறுவை சிகிச்சை’ (கார்னியல் டிரான்ஸ்பிளான்டேஷன்).

அவசர சிகிச்சை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர், தன் கண் சிவப்பாக இருக்கிறது என்றும், வலி இருக்கிறது என்றும் சொல்லி, மருந்துக் கடையில் தானாகச் சென்று மருந்து வாங்கி ஊற்றியுள்ளார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரை அணுகியபோது, அவருடைய கண் கருவிழி முழுவதும் பூஞ்சைக் கிருமியால் பாதிக்கப்பட்டு, கண்ணுக்குள் கிருமி பரவத் தொடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவர் பயன்படுத்திய ஸ்டீராய்டு கலந்த மருந்துதான் என்று மருத்துவர் கூறினார்.

தற்போது கிருமி பாதிப்பைக் கட்டுப்படுத்த அவருடைய பாதிக்கப்பட்ட கருவிழியை எடுத்துவிட்டு கண்தானமாகப் பெற்ற கருவிழியைப் பொருத்தியதால் அவருக்குப் பார்வை கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அவசரமாகக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மண்ணில் மறையும், தீயில் கருகும் கண்களைத் தானமாகக் கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையைக் காப்பற்றலாம்.



கண்தானம்: தெரிந்ததும் தெரியாததும்

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும்.

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும்.

கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம்.

புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது.

இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு இரண்டு பார்வையிழந்தவர்களுக்குப் பார்வை கொடுக்க முடியும்.

பார்வையின்றித் தவிக்கும் 50 சதவீதம் பேர்

இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது.

நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள்.

கருவிழி பாதிப்பால் ஒரு கண்ணில் பார்வையிழப்பவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 10 லட்சமாக இருக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது.

தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண்களில் சுமார் 50 சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?

உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாகக் கொடுத்து உதவ வேண்டும்.

மண்ணில் புதைந்தவரை மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வைக்க, கண் தானத்தைத் தவிர வேறு மிகச் சிறந்த வழி ஏது?

கட்டுரையாளர், கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: மருத்துவருக்கு நூதன நிபந்தனையுடன் முன் ஜாமீன்

Published : 12 Sep 2017 17:16 IST

சென்னை





தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்பூர் மருத்துவர் கென்னடிக்கு ஒருவாரம் தினமும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கென்னடி சுதந்திர தினத்தன்று தொலைபேசியில் பேசியப்படி தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அவர் அவமதிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிதிபதி பி.என் பிராகாஷ் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர் கென்னடி ஒரு வாரத்துக்கு தினமும் காலை பணிக்கு வரும்போது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
போலிநகை அடமானம் : ரூ.20 கோடி மோசடி

பதிவு செய்த நாள்12செப்
2017
23:49

சென்னை: சென்னை அண்ணாநகரில் வங்கி ஒன்றில் போலி நகைகளை அடமானம் வைத்து, ரூ.20 கோடி கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது. இதில் வங்கியின் முன்னாள் மேலாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளதும் அவருடன் நகைக்கடை அதிபர்
ஒருவரும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எத்தனை நாட்களில் இந்த மோசடி நடந்தது என்றும் ஆய்வு நடந்து வருகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்12செப்
2017
23:12

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன்
படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எனவே, தற்காலிக பணியில் உள்ள, 15 ஆயிரத்து, 500பகுதி நேர ஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை, விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர். 

இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

- நமது நிருபர் -


அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு சம்மன் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


பதிவு செய்த நாள்12செப்
2017
23:32

மதுரை: தமிழகத்தில் தடையை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தாக்கலான அவமதிப்பு வழக்கில், சங்க நிர்வாகிகள் 4 பேர் ஆஜராக, சம்மன் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ -ஜியோ' காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு செய்தேன்.செப்.,7ல் நீதிபதிகள், 'வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் தொடர்புடைய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செப்.,14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என்றனர். அதை மீறி போராட்டம் தொடர்கிறது.போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி தலைமைச் செயலாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தாஸ், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் மோசஸ் மற்றும் அச்சங்கங்களின் உறுப்பினர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சேகரன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள சங்க நிர்வாகிகள் 4 பேரும், செப்.,15 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படுகிறது.அவர்கள் சென்னை முகவரியில் உள்ளதால், சம்மனை சென்னை போலீஸ் கமிஷனர் மூலம் வழங்க வேண்டும். சம்மன் வழங்கியதை உறுதி செய்து, மதுரை போலீஸ் கமிஷனர் இன்று (செப்.,13) இந்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
'பரஸ்பர விவாகரத்து வழக்கில் 6 மாத காத்திருப்பை தளர்த்தலாம்'
பதிவு செய்த நாள்12செப்
2017
22:41

புதுடில்லி: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து வழக்கில், ஆறு மாதங்கள் காத்திருப்பு காலத்தை, உச்ச நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து பெற விரும்பும் தம்பதி, நீதிமன்ற உத்தரவுப்படி, ஓராண்டு பிரிவுக்கு பின், விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதைத் தொடர்ந்து, ஆறு மாத காத்திருப்புக்கு பின், அவர்களுக்கு, நீதிமன்றம், விவாகரத்து அளிக்கும். விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதர்ஷ் கே.கோயல், உதய் யு.லலித் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து கோரும் தம்பதி, ஓராண்டு பிரிவுக்கு பின், ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தலாம்.
திருமண உறவு எக்காரணத்தை முன்னிட்டும், சரி செய்ய முடியாமல், முறிந்து போகும் பட்சத்தில், கணவன், மனைவியை சேர்ந்திருக்க வேண்டும் என, நிர்ப்பந்திப்பது முறையற்றது.

அத்தகைய சூழ்நிலையில், விவாகரத்து வழங்குவதற்காக, இந்து திருமண சட்டம், பிரிவு - 13பி உருவாக்கப்பட்டது. திருமண பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவசரமாக, அந்த திருமணத்தை ரத்து செய்யக்கூடாது என்ற நோக்கத்தில், ஆறு மாத காத்திருப்பு விதி அமல்படுத்தப்பட்டது.இந்த காத்திருப்பு காலம், கணவன், மனைவி ஆகியோரின் மனக்கஷ்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கக் கூடாது. திரும்ப சேரும் வாய்ப்பே இல்லை எனும்போது, காத்திருப்பு காலம் தளர்த்தப்படலாம்.

காத்திருப்பு காலம், சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை மனதளவில் மேலும் துன்புறுத்தக்கூடும் என, நீதிமன்றம் கருதினால், காத்திருப்பு காலத்தை தளர்த்தி, விவாகரத்து அளிக்கலாம். 

அவ்வாறு, விவாகரத்து அளிக்கும்போது, ஜீவனாம்சம், குழந்தை களின் எதிர்காலம் போன்ற வற்றை ஆய்வு செய்து, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி
பதிவு செய்த நாள்13செப்
2017
00:49




சேலம்:குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட வழியின்றி, விவசாய படிப்பை தொடர முடியாமல், சேலம் மாவட்ட மாணவி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; சலுான் வைத்துள்ளார். இவருக்கு, தவப்பிரியா, 19, என்பவர் உட்பட, மூன்று மகள்கள். 2014ல், ஆறகளூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த தவப்பிரியா, 500க்கு, 480 மதிப்பெண் பெற்றார். இவரை, தலைவாசல், நத்தக்கரையில் உள்ள தனியார் பள்ளி, பிளஸ் 1 படிப்பில், கட்டணமின்றி சேர்த்து கொண்டது.

தவப்பிரியா, 2016 பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால், விவசாய படிப்பிற்கு விண்ணப்பித்தார். 200க்கு, 190.25, 'கட் - ஆப்' பெற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அக்ரி பட்ட படிப்பை தேர்வு செய்தார்.

கல்லுாரி விடுதியில் தங்கி படித்த நிலையில், இரண்டாம் பருவ தேர்வின் போது, தந்தை ஆறுமுகம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால், இரண்டாம் ஆண்டு, கல்லுாரி கட்டணம் கட்ட இயலவில்லை.
கல்லுாரி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் சேர்த்து, இரண்டாம் ஆண்டுக்கு, 68 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும். தந்தையின் உடல்நிலை, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால், பணம் கட்ட முடியாததால், தவப்பிரியா படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தவப்பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து, சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறேன். தவப்பிரியாவின் கல்லுாரி படிப்புக்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

உதவ விரும்புவோர், 94425 - 25326 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு

பதிவு செய்த நாள்12செப்
2017
23:13

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 1.1 கோடி மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏழாவது சம்பள கமிஷன் அறிமுகத்துக்கு பின், அகவிலைப் படி நிர்ணயம் செய்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. 

இதை அடிப்படையாக வைத்து, இந்தாண்டு மார்ச்சில், 2 சதவீதத்தில் இருந்து,
4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படியை, 1 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தாண்டு, ஜூலை, 1 முதல் கணக்கிட்டு, இது வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள, 49.26 லட்சம் அரசு ஊழியர், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர் பயனடைவர்.
எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்
பதிவு செய்த நாள்12செப்
2017
23:08




முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு 

செய்துள்ளது. முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, மாநிலம் முழுவதும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது; இதை மேலும் சிறப்பிக்கும் விதத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை இருந்தது.

டில்லி வந்து பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, தனித்தனியே இந்த கோரிக்கையை வைத்தனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த வட்ட வடிவில் அமைந்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான இந்திய நாணயச்சட்டம் பிரிவின் கீழ், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. நுாறு ரூபாய் நாணயத்தில், வெள்ளி, 50 சதவீதமும், தாமிரம், 40 சதவீதமும், நிக்கல், 5 சதவீதமும், துத்தநாகம், 5 சதவீதமும் கலந்திருக்கும். 44 மி.மீ., விட்டம் உடைய, இந்த நாணயத்தைச் சுற்றிலும், வரிவரியாக, 200 கோடுகளும் இருக்கும். இந்த நாணயம், 35 கிராம் எடை உடையதாக இருக்கும். ஐந்து ரூபாய் நாணயத்தில், 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து காணப்படும். 23 மி.மீ., விட்டம் உடைய இந்த நாணயத்தைச் சுற்றிலும், 100 கோடுகள் இருக்கும்.இந்த நாணயத்தின் எடை, 6 கிராமாக இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக, அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நாணயங்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும், தமிழக அரசுடன் ஆலோசித்து, ஒரு குறிப்பிட்ட தேதியில், எம்.ஜி.ஆர்., நினைவு நாணயங்கள் வெளியிடப்படுமென, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-- நமது டில்லி நிருபர் -

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...