Thursday, February 5, 2015

மாணவர்கள் அசல் சான்றிதழ் வழங்குவதிலிருந்து விலக்கு: பாஸ்போர்ட் அதிகாரி தகவல்


''பாஸ்போர்ட் பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

விதிகளின்படி பாஸ்போர்ட் பெற அசல் சான்றிதழ்களை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்காக இந்த விதியிலிருந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விதிவிலக்கு அளித்துள்ளது. அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத போது, சில ஆவணங்களை முக்கியமாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இருப்பதாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ், பாஸ்போர்ட் பெற தேவையான அசல் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் ( பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் சான்றொப்பத்துடன்), தற்போது பயிலும் கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடம் விளக்கம் பெறப்படும். மேலும் பாஸ்போர்ட் பெற வழிமுறைகள் குறித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மண்டல அலுவலக விழிப்புணர்வு மையத்தை வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...