Thursday, December 10, 2015

ரெயில்களில் பயன்படுத்த படுக்கை விரிப்பை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி 4 ரெயில் நிலையங்களில் நேரிலும் பெறலாம்



புதுடெல்லி


தற்போது, ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மட்டுமே பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் பயணிகள் நலனுக்காக, படுக்கை விரிப்புகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே துறை இம்மாதம் அறிமுகம் செய்கிறது.

2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 செலுத்த வேண்டும். ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் பெற ரூ.250 செலுத்த வேண்டும். இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம்.

ஆன்லைனில் மட்டுமின்றி, முதல்கட்டமாக 4 ரெயில் நிலையங்களில் நேரிலும் படுக்கை விரிப்பு, தலையணை மற்றும் போர்வையை பெறலாம். புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதின், சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், மும்பை சென்டிரல் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ள இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) உணவகங்களில் இவற்றைப் பெறலாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல ரெயில் நிலையங்களுக்கு இவ்வசதி விரிவுபடுத்தப்படும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...