Monday, December 7, 2015

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு ந.வினோத் குமார்

Return to frontpage

வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...