Friday, March 10, 2017

3 தொழில்நுட்ப சேவை: கேவிபி அறிமுகம்

பிடிஐ

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ரொக்கமில்லா பண பரிவர்த் தனையை ஊக்குவிக்கும் வகை யில் தொழில்நுட்ப அடிப்படையி லான 3 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

கோவையில் கரூர் வைஸ்யா வங்கியின் சொந்த கட்டிடமான கேவிபி டவர்ஸ் திறப்பு விழாவில் இம்மூன்று சேவைகளையும் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கே. வெங்கடராமன் அறிமுகம் செய்தார்.

ஃபாஸ்டாக் (FASTag) எனப் படும் முதலாவது சேவை இந்திய நெடுஞ்சாலை நிர்வாக நிறுவனத் துடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனமானது தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் துணை நிறுவனமாகும். இந்த அட்டை இணைக்கப்பட் டுள்ள சரக்கு லாரிகள் சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.

இந்த ஃபாஸ்டாக்கில் குறிப் `பிட்ட தொகை முன்னதாகவே செலுத்தப்பட்டிருக்கும். இத் தொகை ஒவ்வொரு சுங்கச் சாவடி யைத் தாண்டும்போதும் அங்கு விதிக்கப்படும் கட்டணம் குறை யும். இந்த கட்டணக் குறைப்பை அங்குள்ள சென்சார்கள் உணர்த் தும்.

அடுத்ததாக யுனைடெட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) இது மொபைல் செயலியாகும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ள வாடிக்கையாளர்கள் 24X7 மணியில் எப்போது வேண்டு மானாலும் தங்கள் கணக்கிலிருந்து வேறு கணக்கிற்கு பண பரிவர்த் தனை செய்ய முடியும். இந்த பரிவர்த்தனையானது தேசிய பேமென்ட் சர்வீஸ் தளம் (என்பிசிஐ) மூலம் செயல்படுகிறது.

மூன்றாவதாக பாரத் பில் பேமென்ட் சிஸ்டமாகும். இதன் மூலம் மின் கட்டணம், குடிநீர் கட்டணம், எல்பிஜி சிலிண்டர், டிடிஹெச் கட்டணம், மொபைல் சார்ந்த கட்டணங்களை செலுத்த முடியும் என்று வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...