Friday, March 10, 2017


தமிழகத்தில் 35,000 போலி மருத்துவர்கள்!

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அவர்களைக் கண்டுபிடிக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையில், தமிழகத்தில் 35,000 போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, போலி மருத்துவர்களை ஒழிக்க தனி சட்டம் வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. மேலும், அவர்களுக்கு ஆறு மாத சிறைக்குப் பதில் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

BHOPAL NEWS