Thursday, March 2, 2017

மூத்த குடிமக்களுக்கு விமான சுற்றுலா வாய்ப்பு

ஜெய்ப்பூர்: நாட்டின் முக்கிய புனித தலங்களுக்கு, 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை, விமானத்தில் அழைத்து செல்லும் திட்டத்தை, ராஜஸ்தான் மாநில அரசு துவங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மூத்த குடிமக்கள், ரயிலில் புனித தலங்களுக்கு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது, மாநில அரசின் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக, 'தீன்தயாள் உபாத்யாயா மூத்த குடிமக்கள் புனித யாத்திரை திட்டம்' அமல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், புனித யாத்திரை செல்ல விண்ணப்பித்தவர்களில் இருந்து, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோர், விமானம் மூலம், நான்கு புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான செலவு, தங்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும். முதற்கட்டமாக, 28 பயணிகள், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து, திருப்பதிக்கு விமானத்தில் பறந்தனர். விமான பயணத்தை, முதல்வர் வசுந்தரா ராஜே கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து அறநிலையத் துறை பொறுப்பு ஆணையர், அசோக் குமார் கூறியதாவது:முதற்கட்டமாக, திருப்பதிக்கு, 28 பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர். அடுத்ததாக, ராமேஸ்வரத்துக்கு, 357 பேரும், புரி ஜகன்நாதர் கோவிலுக்கு, 225 பேரும் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...