Friday, March 10, 2017

தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார்.

மார்ச் 10, 04:15 AM

புதுடெல்லி,

தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2–ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். ‘‘விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, சுப்ரீம் கோர்ட்டிடம் தனக்கு உள்ள சொத்துகளின் உண்மையான பட்டியலை அவர் தாக்கல் செய்துள்ளாரா?, சொத்துக்களை தனது ஒப்புதல் இன்றி குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றக்கூடாது என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை விஜய் மல்லையா மீறி உள்ளாரா?’’ என நீதிபதிகள் வினவினர்.

அதற்கு பதில் அளித்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ‘‘விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது’’ என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...