Thursday, March 9, 2017

நீட் தேர்வு ஏழை மாணவர்கள் நுழைய முடியாத தேர்வாக உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

மார்ச் 08, 04:00 AM

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் கோ.க.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழகத்தில் கடந்த 5½ ஆண்டுகளில் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என பலர் முதல்–அமைச்சராகி உள்ளனர். குறிப்பாக ஊழல் தான் ஆட்சி செய்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார். இந்தியாவில் ஒரு முதல்– அமைச்சருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது இதுவே முதல் முறை.ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் அதை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது தவறு. மத்திய அரசின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் உள்ளதால் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகிறது. நீட் தேர்வு என்பது நுழைவு தேர்வு அல்ல. ஏழை மாணவர்கள் நுழைய முடியாத தேர்வு. தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 750 மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில் 144 இடங்கள் அதாவது 15 சதவீதம் மத்திய அரசுக்கு தரவேண்டிய நிலை உள்ளது. செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவானது. இதில் 15 சதவீத இடங்களை மற்ற மாநில மாணவர்களுக்கு தரச்சொல்லி மத்திய அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த ராமதாசை மதுராந்தகம் நகர எல்லையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கட்சி நிர்வாகிகள் சரவணன், சாந்தமூர்த்தி, பக்கிரிசாமி, ஜீவா, சதீஷ், சங்கர், சகாதேவன், சந்தோஷ், குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அழைத்து சென்றனர். முடிவில் பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சபரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...