Wednesday, March 15, 2017


அட...அப்படியே இருக்காங்க ஷோபனா ரவி!

செய்திகள் 24x7 என்ற அடிப்படையில் மாறியதும், தமிழகத்திலும் நியூஸ் சேனல்கள் அதிக அளவு படையெடுத்துவிட்டன. இதையடுத்து, தினசரி பல்வேறு நியூஸ் ரீடர்களை நாம் பார்க்கத் துவங்கிவிட்டோம். தொலைக்காட்சிகள் அதிகம் இல்லாத காலத்தில், பொதிகை மற்றும் ஆல் இந்திய ரேடியோ செய்திகள் வாசித்தவர்களை எப்போதும் மறக்க முடியாது.



இந்நிலையில், பொதிகை மற்றும் ஆல் இந்திய ரேடியோ செய்திகளைத் தங்களது வலிமையான குரல்களில் ஆட்சிசெய்த ஷோபனா ரவி, ராமகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன், சரோஜ் நாராயண் ஸ்வாமி உள்ளிட்டோரின் கெட்- டு- கெதர் நடந்துள்ளது. இதில், செய்தி வாசித்து தங்களது குரல்களால் கேட்போரைக் கட்டிப்போட்டிருந்தவர்கள், தங்களது பழைய நாள்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.







No comments:

Post a Comment

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இர...