Thursday, March 16, 2017

உயர்ந்தது தக்காளி

பழநி, திண்டுக்கல் மாவட்டம் பழநி, பாலசமுத்திரம், சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பாப்பம்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுமுழுவதும் தக்காளிசாகுபடி செய்கின்றனர். அவற்றை பழநி தக்காளிமார்க்கெட், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

இவ்வாண்டுபோதிய மழை இல்லாததால் ஒருசில விவசாயிகள் சொட்டுநீர்பாசனத்தில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அவற்றிற்கும் போதிய தண்ணீர் இல்லாததால் செடிகள் வாடி பூக்கள் உதிர்ந்து வருகின்றன. நெல்லிக்காய் அளவிற்கு சிறியதாக காய்ப்பதால் வரத்துகுறைந்துள்ளது.
சந்தையில் 15கிலோ தக்காளி பெட்டி ரூ.250 முதல் ரூ.400 வரை தரத்திற்கு ஏற்றவாறு விலைபோகிறது. 

சில்லரை விலையில் ஒருகிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. நல்ல விலை கிடைத்தும்
தக்காளி விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இர...