Saturday, March 18, 2017

சென்னையில் அரசு பொது மருத்துவமனையில் போராடி வந்த பயிற்சி டாக்டர்களின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மார்ச் 18, 05:00 AM
சென்னை,

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி மாணவர் விஜய்யை (வயது 22), பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் சிகிச்சை பெறும் வார்டுக்கு கூட்டமாக நுழைந்தனர். இதனை தடுத்தபோது பயிற்சி டாக்டர்கள்-உறவினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் தாங்கள் தாக்கப்பட்டதாக கூறி பயிற்சி டாக்டர்கள் 250-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு, ஆஸ்பத்திரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களை நோக்கி பயிற்சி டாக்டர்கள் தகாத வார்த்தைகளை கூறியதற்காக ஆஸ்பத்திரி ‘டீன்’ நாராயணசாமி பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

உள்ளிருப்பு போராட்டம்

தொடர்ந்து 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த பயிற்சி டாக்டர் களுடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மருத்துவர்கள் இனிமேல் நோயாளிகளால் தாக்கப்படுவதை தடுக்க மருத்துவ தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது. தாக்கப்படும் மருத்துவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறையும், ரூ.2 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். திரையரங்குகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மருத்துவ தனிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பயிற்சி டாக்டர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி டீன் நாராயணசாமி, ஆர்.எம்.ஓ. இளங்கோ மற்றும் முதுநிலை பேராசிரியர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டம் வாபஸ்

இந்த பேச்சுவார்த்தையில் பயிற்சி டாக்டர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மருவத்தூர் பொறியியல் கல்லூரி மாணவர் விஜய்யை சந்திக்க 15-க்கும் மேற்பட்ட உறவினர்கள் அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கு வந்திருக்கின்றனர். கூட்டமாக வந்த காரணத்தினால் அவர்களை அங்கிருக்கும் பயிற்சி டாக்டர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அந்த பயிற்சி டாக்டர்களை உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சமாதானமடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை தாக்கியதாக திலீப், பாலகிருஷ்ணன், நிஷா, லதா, பத்மபிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோரிக்கைகள் ஏற்பு

பயிற்சி டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்கள் விடுத்த பல கோரிக்கைகளை ஏற்று இருக்கிறோம். அதன்படி இனி சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு சிறப்பு பாதுகாப்புப்படை உருவாக்கப்பட உள்ளது. இதில் 25 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை குழு அமைக்கப்படும். சுகாதார செயலாளர் தலைமையில் இந்த குழு இயங்கும். மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர் தலைமை தாங்குவார். மாதம் ஒருமுறை இக்குழுவின் சார்பில் கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டில் வழக்கு

டாக்டர்கள் போராட்டம் குறித்து ராயப்பேட்டையை சேர்ந்த சி.குமரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இது அவசர வழக்காக நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

போராட்டத்துக்கான காரணங்களை கேட்டறிந்த நீதிபதி, ‘டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் உள்ளனரா? அவசர சிகிச்சை பிரிவில் எத்தனை டாக்டர்கள் உள்ளனர்? போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளதா? ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? என்பவை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...