Wednesday, August 23, 2017

பாஸ்போர்ட் விசாரணை விரைவில், 'டிஜிட்டல்' மயம்

பதிவு செய்த நாள்22ஆக
2017
20:35

புதுடில்லி: பாஸ்போர்ட் வழங்கும் விஷயத்தில் பின்பற்றப்படும், போலீஸ் விசாரணை நடைமுறையை, நாடுமுழுவதும் டிஜிட்டல் மயமாக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'இன்னும் ஓராண்டுக்குள், இந்த நடைமுறை அமலுக்கு வரும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை செயலர், ராஜிவ் மெஹ்ரிசி கூறியதாவது: குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் குறித்த தகவல்களை எளிதில் கையாளும் வகையிலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்கள், தங்கள் புகார்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். குற்றவாளிகள் குறித்த தகவல்களை, ஒரு ஸ்டேஷனிலிருந்து, மற்றொரு ஸ்டேஷனில் உள்ள போலீசாருக்கு பகிரும் வகையில் இருப்பதால், போலீசாரின் வேலைப் பளு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போர் குறித்த விசாரணைக்கு செல்லும் போலீசாரிடம், சிறப்பு டிஜிட்டல் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது.பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் பெயரில் குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என, ஆன்லைன் முறையில் சோதிக்கும் போலீசார், அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கும் போது, டிஜிட்டல் கருவிகளில், அந்த விபரங்களை பதிவிடலாம்.

அந்த தகவல்கள், நேரடியாக, பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு பகிரப்படும். இதன் மூலம், அடுத்த ஓராண்டில், பாஸ்போர்ட் விசாரணை நடைமுறை, டிஜிட்டல் மயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...