Wednesday, August 23, 2017

போராட்டத்தில் தள்ளிய தமிழக அரசு : அரசு ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்22ஆக
2017
22:59

மதுரை: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் தமிழக அரசு தள்ளிஉள்ளது,'' என, மதுரையில், அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் குற்றஞ்சாட்டினார்.

அவர் கூறியதாவது: 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து, அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்' என, மத்திய அரசு அறிவித்து விட்டது. 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு குறித்து, உடனடியாக அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்ய, குழுவை அமைத்தனர். அந்த குழு காலாவதியாகி, புதிய குழுவை, தற்போதைய அரசு அமைத்துள்ளது. புதிய குழு மீது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அரசு உத்தரவிட வேண்டும். இத்திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 9,000 கோடி ரூபாயை, அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதி எனும், ஜி.பி.எப்.,பில் வரவு வைக்க வேண்டும். நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். 285 தாலுகா அலுவலகங்கள் செயல்படவில்லை. அரசு பணிகள் முடங்கின. அரசு, உடனடியாக, 'ஜாக்டோ - ஜியோ' சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைந்து, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
தவறினால், செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கப்படும். ஆக., 26, 27ல், மாநிலம் முழுவதும், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும்.


No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...