Wednesday, August 23, 2017

கிராம மாணவர்களின் படிக்கட்டு பயணம்
பதிவு செய்த நாள்23ஆக
2017
00:42




நரிக்குடி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதி கிராம மாணவர்கள் போதிய அரசு பஸ் வசதியில்லாமல், படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.

நரிக்குடி, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேளி, கணையமறித்தான், கொட்டக்காச்சியேந்தல், எஸ்.வல்லக்குளம், டி.வேலாங்குடி, மறையூர், மாயலேரி, நல்லதரை, விடத்தகுளம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 900 மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் பள்ளிக்குச் சென்று வர, போதிய அரசு பஸ்கள் இல்லாததால், எப்போதாவது வரும் அரசு பஸ்சில், ஒரே நேரத்தில் 100 மாணவர்கள் ஏற வேண்டியுள்ளது. குறைந்த துாரம் என்றால், நடந்தாவது பள்ளிக்கு மாணவர்கள் வந்து விடுவர். இப்பகுதி கிராமங்கள் பள்ளியிலிருந்து பல கி.மீ., துாரத்தில் உள்ளன.எனவே பள்ளி ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்திற்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க, போக்குவரத்து துறையினர் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...