தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
சொகுசு விடுதியில் குதூகலம்
புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் தங்க வைக்க தினகரன் முடிவு செய்தார்.
கடல் உணவு
புதுச்சேரியில், சின்ன வீராம்பட்டினம் கிராமத் தில், ஒதுக்குப்புறமாக, கடற்கரையோரம் உள்ள, 'தி வின்ட் ப்ளவர்' ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.வெற்றிச்செல்வன் தவிர, 18 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் இரவு சொகுசு விடுதிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர். பெண், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தனியாக தங்கியுள்ள னர்.
நேற்று முன்தினம் இரவு, சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு பிடித்த மது வகைகளை, வர வழைத்து அருந்தி, மகிழ்ச்சியில் திளைத்துள் ளனர்.பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள், அவர்களுக்கு பரிமாறப்பட்டது. விடுதி வளாகத் தில் சுற்றி வந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள்,அரசியல் நிலவரம் குறித்து பேசி, பொழுதைகழித்தனர். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, தங்க தமிழ் செல்வன், முத்தையா உள்ளிட்ட, எம்.எல்.ஏ.,க் கள், விடுதியின் பின்புற வழியாக,
வீராம்பட்டினம் கடற்கரையில், 'வாக்கிங்' சென்ற னர். இதையடுத்து, போலீசார் மற்றும் உதவியாளர் களின், எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப் பாக, விடுதிக்கு அழைத்து வந்தனர். ரிசார்ட்டில், எம்.எம்.எல்.ஏ.,க் கள் ஆயில் மசாஜ் எடுத்தனர். அங்குள்ள, நீச்சல் குளத்தில், நீந்தி மகிழ்ந்தனர். விடுதியில் உள்ள உணவு அரங்கில், வித,விதமான உணவு வகைக கள், காலை டிபனாக பரிமாறப் பட்டது.
மதிய உணவுக்காக, கடல் உணவு நிறுவனம் மூலம், பெரிய அளவிலான வஞ்சிரம், சுறா,உயர்ரக கடல் சிங்கு இறால், ஆட்டுக்கறி, கோழிக்கறி கொண்டு வரப்பட்டன. குளிர்பான வகைகள், வாட்டர் பாட்டில் களும், வாகனங்களில் வந்திறங்கின. மதியம் அசைவ உணவை ருசித்த, எம்.எல்.ஏ.,க்கள், விடுதி வளாகத்தில் உலவியபடி இருந்தனர். சிலர், காரில் விடுதிக்கு வெளியில், சென்று திரும்பினர்.
விடுதியில் கெடுபிடி
விடுதியில், எஸ்.பி., அப்துல் ரஹீம் மேற்பார்வை யில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே, விடுதிக்குள் அனுமதிக்கப் பட்டனர்.விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும், ஒட்டுமொத்த மாக, தினகரன் அணியினர் வாடகைக்கு எடுத்துள்ள னர். இதனால், தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள் தவிர, வெளியாட்கள் அங்கு இல்லை.சொகுசு விடுதி அமைந்துள்ள சாலையில், தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வெளியாட்கள் செல்ல தடை செய்தனர்.பத்திரிகையாளர்கள், நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள், விடுதி முன் குவிந்துள்ள னர்.எம்.எல்.ஏ.,க்கள் தங்கி யுள்ள விடுதியின் வசதிகள்:
* வெளிநாட்டு தரத்தில் நீச்சல் குளம்
* தனி வில்லாக்கள் உள்ளிட்ட, 50 அறைகள்
* நேர்த்தியான உணவு அரங்கம்
* மதுபான பார் வசதி
* மசாஜ் வசதி
* படகு சவாரி செய்யும் வசதி
* கைப்பந்து விளையாட்டு திடல்
*பொழுது போக்கு பூங்கா
தினகரன் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற கோரி, அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு, அ.தி.மு.க.,வினர், தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி
சேகர், நேற்று காலை தனது ஆதரவாளர்களு டன், தினகரன் ஆதரவாளர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு திரண்டார். தினகரன் ஆதரவாளர்களை, விடுதியில்இருந்து வெளி யேற்றக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார், அவர்களை உள்ளே விடாமல், தடுத்துநிறுத்தினர். அதையடுத்து, கோஷங்கள் எழுப்பியபடி, தினகரனின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.
சிறை செல்ல நேரும்:'மாஜி' எம்.எல்.ஏ., எச்சரிக்கை
''தினகரன், சசிகலா ஆகியோருடன் சென்றால், சிறைக்கு தான் செல்ல நேரிடும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டுள்ள, சொகுசு விடுதி முன்பு, தினகரன் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பேசியதாவது:
தினகரன், சசிகலாவுடன் சென்றால், சிறைச்சாலைக்கு தான் செல்ல நேரிடும். ஜெ., வகித்த பொதுச் செயலர்பதவியை அடைய ஆசைப்பட்டால், வெளி மாநிலசிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து தான், தற்போது, அ.தி.மு.க., தீர்மானம் போட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, எம்.எல்.ஏ.க்களை, 10 கோடி, 20 கோடி ரூபாய் கொடுத்து, தினகரன் அடைத்து வைத்து உள்ளார். இவர்கள் தவறை உணர்ந்து, கட்சிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். மன்னார்குடி குடும்பம், தமிழக எல்லையை விட்டு, விரட்டி அடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
சொகுசு விடுதியில் குதூகலம்
புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் தங்க வைக்க தினகரன் முடிவு செய்தார்.
கடல் உணவு
புதுச்சேரியில், சின்ன வீராம்பட்டினம் கிராமத் தில், ஒதுக்குப்புறமாக, கடற்கரையோரம் உள்ள, 'தி வின்ட் ப்ளவர்' ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.வெற்றிச்செல்வன் தவிர, 18 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் இரவு சொகுசு விடுதிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர். பெண், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தனியாக தங்கியுள்ள னர்.
நேற்று முன்தினம் இரவு, சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு பிடித்த மது வகைகளை, வர வழைத்து அருந்தி, மகிழ்ச்சியில் திளைத்துள் ளனர்.பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள், அவர்களுக்கு பரிமாறப்பட்டது. விடுதி வளாகத் தில் சுற்றி வந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள்,அரசியல் நிலவரம் குறித்து பேசி, பொழுதைகழித்தனர். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, தங்க தமிழ் செல்வன், முத்தையா உள்ளிட்ட, எம்.எல்.ஏ.,க் கள், விடுதியின் பின்புற வழியாக,
வீராம்பட்டினம் கடற்கரையில், 'வாக்கிங்' சென்ற னர். இதையடுத்து, போலீசார் மற்றும் உதவியாளர் களின், எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப் பாக, விடுதிக்கு அழைத்து வந்தனர். ரிசார்ட்டில், எம்.எம்.எல்.ஏ.,க் கள் ஆயில் மசாஜ் எடுத்தனர். அங்குள்ள, நீச்சல் குளத்தில், நீந்தி மகிழ்ந்தனர். விடுதியில் உள்ள உணவு அரங்கில், வித,விதமான உணவு வகைக கள், காலை டிபனாக பரிமாறப் பட்டது.
மதிய உணவுக்காக, கடல் உணவு நிறுவனம் மூலம், பெரிய அளவிலான வஞ்சிரம், சுறா,உயர்ரக கடல் சிங்கு இறால், ஆட்டுக்கறி, கோழிக்கறி கொண்டு வரப்பட்டன. குளிர்பான வகைகள், வாட்டர் பாட்டில் களும், வாகனங்களில் வந்திறங்கின. மதியம் அசைவ உணவை ருசித்த, எம்.எல்.ஏ.,க்கள், விடுதி வளாகத்தில் உலவியபடி இருந்தனர். சிலர், காரில் விடுதிக்கு வெளியில், சென்று திரும்பினர்.
விடுதியில் கெடுபிடி
விடுதியில், எஸ்.பி., அப்துல் ரஹீம் மேற்பார்வை யில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே, விடுதிக்குள் அனுமதிக்கப் பட்டனர்.விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும், ஒட்டுமொத்த மாக, தினகரன் அணியினர் வாடகைக்கு எடுத்துள்ள னர். இதனால், தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள் தவிர, வெளியாட்கள் அங்கு இல்லை.சொகுசு விடுதி அமைந்துள்ள சாலையில், தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வெளியாட்கள் செல்ல தடை செய்தனர்.பத்திரிகையாளர்கள், நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள், விடுதி முன் குவிந்துள்ள னர்.எம்.எல்.ஏ.,க்கள் தங்கி யுள்ள விடுதியின் வசதிகள்:
* வெளிநாட்டு தரத்தில் நீச்சல் குளம்
* தனி வில்லாக்கள் உள்ளிட்ட, 50 அறைகள்
* நேர்த்தியான உணவு அரங்கம்
* மதுபான பார் வசதி
* மசாஜ் வசதி
* படகு சவாரி செய்யும் வசதி
* கைப்பந்து விளையாட்டு திடல்
*பொழுது போக்கு பூங்கா
தினகரன் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற கோரி, அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு, அ.தி.மு.க.,வினர், தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி
சேகர், நேற்று காலை தனது ஆதரவாளர்களு டன், தினகரன் ஆதரவாளர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு திரண்டார். தினகரன் ஆதரவாளர்களை, விடுதியில்இருந்து வெளி யேற்றக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார், அவர்களை உள்ளே விடாமல், தடுத்துநிறுத்தினர். அதையடுத்து, கோஷங்கள் எழுப்பியபடி, தினகரனின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.
சிறை செல்ல நேரும்:'மாஜி' எம்.எல்.ஏ., எச்சரிக்கை
''தினகரன், சசிகலா ஆகியோருடன் சென்றால், சிறைக்கு தான் செல்ல நேரிடும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டுள்ள, சொகுசு விடுதி முன்பு, தினகரன் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பேசியதாவது:
தினகரன், சசிகலாவுடன் சென்றால், சிறைச்சாலைக்கு தான் செல்ல நேரிடும். ஜெ., வகித்த பொதுச் செயலர்பதவியை அடைய ஆசைப்பட்டால், வெளி மாநிலசிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து தான், தற்போது, அ.தி.மு.க., தீர்மானம் போட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, எம்.எல்.ஏ.க்களை, 10 கோடி, 20 கோடி ரூபாய் கொடுத்து, தினகரன் அடைத்து வைத்து உள்ளார். இவர்கள் தவறை உணர்ந்து, கட்சிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். மன்னார்குடி குடும்பம், தமிழக எல்லையை விட்டு, விரட்டி அடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment