ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகுவதாக அறிவிப்பு..!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற ரயில்வே விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவிவிலகுவதாகத் தெரிவித்துள்ளார். அவரைக் காத்திருக்கும்படி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகில் கடந்த சில தினங்களுக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இன்று காலையில் அதே உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சுரேஷ் பிரபு, 'கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக ரத்தத்தையும் வியர்வையும் சிந்தி அர்ப்பணிப்புடன் செயல்பட்டேன். பிரதமரின் தொலைக்நோக்குப் பார்வையின்படி ரயில்வே துறை ஆக்கப்பூர்வமாகவும் நவீனமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் தற்போது ரயில்வே துறை வளர்ச்சியை நோக்கிச்செல்கிறது. பயணிகள் படுகாயமடைந்ததும் உயிரிழந்த சம்பவமும் எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முழுப் பொறுப்பேற்பதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். அவர் என்னைக் கொஞ்சம் பொறுத்திருக்கச் சொன்னார்' என்று பதிவிட்டுள்ளார்.
Dailyhunt

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற ரயில்வே விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவிவிலகுவதாகத் தெரிவித்துள்ளார். அவரைக் காத்திருக்கும்படி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகில் கடந்த சில தினங்களுக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இன்று காலையில் அதே உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சுரேஷ் பிரபு, 'கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக ரத்தத்தையும் வியர்வையும் சிந்தி அர்ப்பணிப்புடன் செயல்பட்டேன். பிரதமரின் தொலைக்நோக்குப் பார்வையின்படி ரயில்வே துறை ஆக்கப்பூர்வமாகவும் நவீனமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் தற்போது ரயில்வே துறை வளர்ச்சியை நோக்கிச்செல்கிறது. பயணிகள் படுகாயமடைந்ததும் உயிரிழந்த சம்பவமும் எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முழுப் பொறுப்பேற்பதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். அவர் என்னைக் கொஞ்சம் பொறுத்திருக்கச் சொன்னார்' என்று பதிவிட்டுள்ளார்.
Dailyhunt
No comments:
Post a Comment